search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூல் விலை"

    • நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
    • நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

    இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.

    நடப்பு மாதத்திற்கான (மார்ச்) நூல் விலையை நூற்பாலைகள் மாத தொடக்கத்தில் அறிவித்தனர். இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்தது. இந்தநிலையில் இன்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில் நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நூல் விலையானது தற்போது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.192-க்கும், 16-ம் நம்பர் ரூ.202 க்கும், 20-வது நம்பர் ரூ.260 -க்கும், 24-வது நம்பர் ரூ.272-க்கும், 30-வது நம்பர் ரூ.282-க்கும், 34-வது நம்பர் ரூ.300-க்கும், 40-வது நம்பர் ரூ.320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.257-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர் ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
    • வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 50 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    தற்போது நூல் விலை உயர்ந்து இருப்பதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பல்லடம் பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விவசாயத்திற்கு அடுத்தப்படியாக விசைத்தறி ஜவுளித் தொழில் உள்ளது. இந்த தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்கவில்லை.


    பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது. ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ரூ. 600 கோடி மதிப்புள்ள காடா ஜவுளி துணிகள் தேங்கி கிடக்கிறது. உரிய விலை கிடைக்காததாலும், வெளிநாட்டு ஆர்டர்கள் இல்லாததாலும் காடா ஜவுளிகள் தேங்கி கிடக்கின்றன.

    எனவே மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டில் ஜவுளித் தொழில் சீராகும் வரை நூல், கழிவுப்பஞ்சு மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில் நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும். வங்கதேசத்தில் இருந்து குறைந்த விலையில் துணிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனை தவிர்க்க தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது.
    • கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக உள்ள விசைத்தறி ஜவுளித் தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த ஜவுளித்துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்க வில்லை. பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது .ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை.

    மேலும் மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் அவர்களுடன் போட்டியிட முடியாத சூழ்நிலை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தனி பேரிப்பு அமைத்து மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    மேலும் சிறு, குறு, நிறுவனங்களுக்கான தொழில் ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்ததால் வியாபாரிகள் ஜவுளி வாங்கு வதை நிறுத்திவிட்டனர். எனவே சிறுகுறு தொழில் ஒப்பந்தத்தை ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை குறைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே இன்று முதல் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
    • நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின்படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.

    நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவித்து வருகின்றனர்.

    அதன்படி நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திற்கான மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல்களில் எந்தவித ஏற்றமும் இறக்கமும் இன்றி கடந்த மாத(ஜனவரி) நூல் விலையே தொடரும் என அறிவித்துள்ளனர்.

    அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
    • கடந்த மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

    இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    அதன்படி நடப்பு மாதத்திற்கான (ஜனவரி) நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளனர். இதனால் திருப்பூர் ஜவுளி தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.
    • தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

    இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    அதன்படி டிசம்பர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல் விலை கிலோ ரூ.10 குறைந்தது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
    • நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    செப்டம்பர் மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பிவைக்கப்படும்.

    இவ்வாறாக நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்தும் ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    அதன்படி கடந்த மாதம் 1ந் தேதி வெளியிட்ட அறிவிப்பில் நூல் விலையில் மாற்றம் இல்லை. ஆனால் கடந்த 16-ந் தேதி 2-வது கட்டமாக நூற்பாலைகள் நூல் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தின. இதனால் மீண்டும் ஏறுமுகத்திற்கு நூல் விலை சென்றுள்ளதால் தொழில்துறையினர் கலக்கம் அடைந்தனர்.

    இதற்கிடையே செப்டம்பர் மாதத்திற்கான நூல் விலை உயருமா? அல்லது குறையுமா? என தொழில்துறையினர் நூற்பாலைகள் அறிவிப்பை எதிர்பார்த்தபடி இருந்தனர். அதன்படி இன்று காலை நூற்பாலைகள் நூல் விலை அறிவித்தனர். இதில் 10 முதல் 30 கோம்டு வரை உள்ள நூல்கள் கிலோவுக்கு ரூ.7ம், 34 கோம்டு மற்றும் அதற்கு மேல் கிலோ ரூ.5ம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஒரு கிலோவுக்கு 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.182-க்கும், 16-ம் நம்பர் ரூ.192-க்கும், 20-வது நம்பர் ரூ.250-க்கும், 24-வது நம்பர் ரூ.262-க்கும், 30-வது நம்பர் ரூ.272-க்கும், 34-வது நம்பர் ரூ.285-க்கும், 40-வது நம்பர் ரூ.305-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.242-க்கும், 24-வது நம்பர் ரூ.252-க்கும், 30-வது நம்பர் ரூ.262-க்கும், 34-வது நம்பர் ரூ.275-க்கும், 40-வது நம்பர் ரூ.295-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ. 20 முதல் 25 குறைந்தது.
    • நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்நிலையில் கடந்த ஆண்டில் அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையை தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்திற்கான நூல் விலைகளும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதேபோல் ஏப்ரல், மே மாதத்திலும் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் நீடித்தது. இது போல் கடந்த மாத நூல் விலை அறிவிக்கப்பட்டது. இதிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ. 20 முதல் 25 குறைந்தது. இதற்கிடையே நடப்பு மாதத்திற்கான (ஆகஸ்டு) நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தன. இதில் கடந்த மாத விலையே தொடரும் எந்த மாற்றமும் இல்லை என நூற்பாலைகள் அறிவித்தன. இதனால் தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    அதன்படி ஒரு கிலோ 10-வது நம்பர் கோம்டு நூல் ரூ.165-க்கும், 16-ம் நம்பர் ரூ.175-க்கும், 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.233-க்கும், 24-ம் நம்பர் ரூ.245-க்கும், 30-ம் நம்பர் ரூ.255-க்கும், 34-ம் நம்பர் ரூ.270-க்கும், 40-ம் நம்பர் ரூ.290-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.225-க்கும், 24-ம் நம்பர் ரூ. 235-க்கும், 30-ம் நம்பர் ரூ.245-க்கும், 34-ம் நம்பர் ரூ. 260-க்கும், 40-ம் நம்பர் ரூ.280-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நூல் விலை உயர்வு காரணமாக ஆயத்த ஆடைகளின் விலை 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சிறுவர்களுக்கான டீ சர்ட் பனியன் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூரில் பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் 20ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. இந்நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் ஆடைகள் அமெரிக்கா, ஐரோப்பா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும், உள்நாட்டில் மகாராஷ்டிரா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.56ஆயிரம் கோடி அளவுக்கு ஆடை வர்த்தகம் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் மாதந்தோறும் நூல் விலை உயர்ந்து வருவது பின்னலாடை தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ நூல் ரூ. 360 முதல் ரூ.430 வரை விற்கப்பட்ட நிலையில் இந்த மாதம் ரூ. 400 முதல் ரூ. 470 வரை உயர்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் நூல் விலை ரூ.40 வரை உயர்த்தப்பட்டது ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நூல் விலை உயர்வை கண்டித்து கடந்த 16,17-ந்தேதி திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது திருப்பூர், கோவை மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 22-ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனிடையே நூல் விலை உயர்வு காரணமாக ஆயத்த ஆடைகளின் விலை 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சிறுவர்களுக்கான டீ சர்ட் பனியன் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கான டீ சர்ட் பனியன் ரூ.120ல் இருந்து ரூ.160ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கான லெக்கிங்ஸ் ரூ.130ல் இருந்து 160ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள் 10 எண்ணம் கொண்ட சிறியவர்களுக்கான பேக் ரூ.300ல் இருந்து ரூ.420ஆகவும், பெரியவர்களுக்கான பேக் ரூ.800ல் இருந்து ரூ.1100ஆகவும் உயர்ந்துள்ளது. பெரியவர்கள் அணியும் ஒரு பனியன் ரூ.80ல் இருந்து ரூ.110ஆக உயர்ந்துள்ளது.

    நூலால் தயாரிக்கப்பட்ட டிராக் பேண்ட் ரூ.200 முதல் ரூ.250க்கும், பஞ்சால் தயாரிக்கப்பட்டது ரூ.100 முதல் ரூ.130க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆயத்த ஆடைகள் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது. மேலும் விற்பனை முன்பு போல் இல்லாததால் வியாபாரிகள் சற்று கவலையடைந்துள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் 2-ம் தர பனியன் விற்பனையாளர்கள் சங்க துணை தலைவர் எம்.ஜி.குமார் கூறியதாவது:-

    நூல் விலை உயர்வால் அனைத்து ஆயத்த ஆடைகளின் விலை 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் முன்பு போல் வாங்காமல் குறைந்த அளவே ஆயத்த ஆடைகளை வாங்குகின்றனர். 10 பனியன் வாங்குகிறவர்கள் தற்போது 2 குறைத்து 8 பனியன் வாங்குகின்றனர். விலை உயர்வே இதற்கு காரணம். ஆயத்த ஆடைகள் விலை உயர்வு காரணமாக வெளி மாநில வியாபாரிகள் திருப்பூரில் ஆடைகள் வாங்குவதை குறைத்து வருகின்றனர் என்றார்.

    திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்-ஏற்றுமதியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், நூல் உள்ளிட்ட ஆடைகள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக திருப்பூரில் செயல்பட்டு வந்த 400-க்கும் மேற்பட்ட சிறு, குறு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆடை உற்பத்திக்கான கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அதனை இந்தியாவிலேயே தயாரித்தால் மூலப்பொருட்களின் விலை குறையும். மேலும் பஞ்சு வியாபாரிகள் ஆன்லைன் மூலம் பஞ்சுகளை வாங்கி பதுக்குகின்றனர். விலை ஏறும் போது அதனை விற்கின்றனர்.

    எனவே பஞ்சு பதுக்கலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் திருப்பூருக்கு கிடைக்கும் ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் போட்டி நாடுகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. எனவே பஞ்சு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

    கரைப்புதூா் நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் கரைப்புதூா் ராஜேந்திரன் கூறியதாவது:-

    துணி உற்பத்தி செலவுக்கேற்ப விற்பனை விலை உயரவில்லை. 20 கவுண்ட் ரக நூல் கிலோ ரூ.160 ஆக இருந்தது. தற்போது ரூ.240 ஆக விலை உயா்ந்துள்ளது. பொருளாதாரம் பாதிப்படைந்து மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துள்ளதால் வட மாநில ஜவுளி வியாபாரிகள் துணி கொள்முதல் செய்ய ஆா்வம் காட்டவில்லை.

    இதன் காரணமாக துணி விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இருப்பு வைக்கப்பட்ட துணிகளை நஷ்டத்திற்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடா இல்லாத விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழிலை பாதுகாக்க அரசு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. திரும்ப பெறும் தொகைகளை உடனே வழங்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளா்கள் தொழில் மேம்பாட்டுக்காக கடன் வாங்கி திணறி வருகின்றனா். சிலர் திவால் ஆகும் நிலையில் உள்ளனர். அவர்கள் வாங்கிய கடன்களுக்கு வட்டி சலுகை வழங்கிட வேண்டும். மேலும் தொழில்துறை வளர்ச்சி பெற விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும். பஞ்சு, நூல் பதுக்கலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைதரகர் இன்றி ஜவுளி உற்பத்தியாளர்கள் நேரடியாக துணிகளை விற்பனை செய்ய திருப்பூா், கோவை மாவட்டத்தின் மத்தியில் பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும் என்றார்.

    நூல் வாங்க முடியாமலும் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியாமலும் நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.
    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டையில் சுமார் 10 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த விசைத்தறி தொழிலை நம்பி நெசவாளர்கள் மற்றும் அதனை சார்ந்த சாயம் பூசுதல், பசை ஓட்டுதல் போன்ற தொழில்களை செய்யும் தொழிலாளர் என மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

    தற்போது தொடர்ந்து அதிகரித்துவரும் நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நூல் வாங்க முடியாமலும் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியாமலும் நெசவாளர்கள் திணறி வருகின்றனர்.

    இந்த நிலையில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் நெசவாளர்கள் இன்று முதல் 5 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    குறிப்பாக பஞ்சு நூல் ஏற்றுமதியை உள்நாட்டுத் தேவைக்குப் போக மீதியை ஏற்றுமதி செய்ய வேண்டும். விசைத்தறி தொழிலை பாதுகாக்க தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். நூல் விலையை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. கட்டும் நெசவு உற்பத்தியாளர்களுக்கு சலுகை விலையில் நூல் சப்ளை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 5 நாட்களுக்கு நெசவாளர்கள் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த உள்ளனர்.

    இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 7 ஆயிரம் விசைத்தறிகள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சேலைகள் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலிக்கு நெசவு வேலை செய்யும் நெசவாளர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.
    ராஜபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் ஒருவார வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளதால் நாள்தோறும் ரூ. 1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ராஜபாளையம்:

    இந்தியா முழுவதும் பஞ்சு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கேண்டி நூல் ரூ.40 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரை இருந்த நிலை, தற்போது ரூ.1 லட்சத்து 10,000 முதல் ரூ.1 லட்சத்து 15,000 வரை கடுமையான விலை உயர்வு கண்டுள்ளது. ஏற்கனவே ஆர்டர் எடுத்து உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. தொழில் செய்ய இயலாத நிலைமை ஏற்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மற்றும் ஏற்றுமதிக்கான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இதன்மூலம் நேரடியாக 10 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    நூல் விலையேற்றம் குறித்து மருத்துவ உற்பத்தியாளர் சங்க கூட்டம் ஏற்றுமதி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆறுமுகப் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. மருத்துவத் துணி உற்பத்தியாளர் சங்க தலைவர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நூல் விலை கடுமையாக உயர்வை கண்டித்து தொழில் செய்ய இயலாத நிலை உள்ளதால் மே 25 முதல் மே 31-ஆம் தேதி வரை ஏற்றுமதிக்கான பேண்டேஜ் உற்பத்தி செய்யும் விசைத்தறி கூடங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள், சைஸிங் தொழிற்கூடங்கள் வேலை நிறுத்தம் செய்து தங்களது எதிர்ப்பை காட்ட முடிவு செய்யப்பட்டது. எனவே உடனடியாக மத்திய அரசு தலையிட்டு பஞ்சு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி நெசவு தொழிலை பாதுகாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் ஒருவார வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளதால் நாள்தோறும் ரூ. 1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    வேலைநிறுத்தம் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    பல்லடம்:

    திருப்பூர் பின்னலாடை உள்பட ஜவுளி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 18 மாதங்களாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஜவுளித் தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    எனவே நூல் விலை உயர்வை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்தக்கோரியும் கடந்த 16,17-ந்தேதி திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்று முதல் 15 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இந்த வேலைநிறுத்தம் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கோவை மாவட்டம் மற்றும் திருப்பூர் மங்கலம், பல்லடம், கரைப்புதூர், அவினாசி, சோமனூர், தெக்கலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறிகள் இயங்காததால் தொழிலாளர்கள் இன்றி விசைத்தறி கூடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும்நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.

    இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதனால் ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
    ×