search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிபா"

    கேரளாவில் நிபா வைரஸ் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த நிலையில், தற்போது ஷிகெல்லா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. #Shigella #KeralaRains
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழையினால் ஏற்பட்ட விபத்து சம்பவங்களில் மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

    லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்திற்கு மத்தியில் இப்போது கேரளாவை பெரும் அச்சுறுத்தும் வகையில் ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பு நேரிட்டுள்ளது. 

    குழந்தைகளை வேகமாகத் தாக்கும் ஷிகெல்லா என்ற புதிய பாக்டீரியா தொற்று உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது. கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை ஒன்று உயிரிழந்து உள்ளது. 

    கடந்த ஜூன் மாதத்தில் தொற்று பாதிப்பு தொடர்பான எச்சரிக்கையான விடுக்கப்பட்டது. ஏற்கனவே, இந்த தொற்று பாதிப்பு காரணமாக மூவர் உயிரிழந்து உள்ளனர் என கூறப்பட்ட நிலையில், ஜியான் என்ற 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    சுத்தமில்லாத உணவு, தண்ணீர் அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொற்றக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது.

    பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு காய்ச்சல், வயிற்றோட்டம் ஏற்படும். கைகளை சுத்தமாக கழுவாவிட்டால், இந்த நோய் எளிதாக பிறருக்கும் தொற்றிக் கொள்ளும் என்பதால், எப்போதும் சுத்தமாக இருப்பதுடன், குழந்தைகளிடம் கைகளை கழுவச்சொல்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

    பாக்டீரியா பாதிப்பு நேரிட்டு ஒருவார காலம் வழக்கமாக இருக்கும், பின்னர் வயிற்று வலி போன்ற பாதிப்பு நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. கோழிக்கோடு மாவட்ட அதிகாரி டாக்டர் ஜெயஸ்ரீ பேசுகையில், ‘ஷிகெல்லா’ வயிற்றுப்போக்கு நோய் மற்றும் மிகவும் தொற்றுக்கூடியது, குறிப்பாக 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை தாக்கும் என கூறியுள்ளார். உணவுப்பொருட்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், உடலையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

    இதற்கிடையே தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு பெரும்பாலும் உணவுகள் மூலமாகவே இந்த பாக்டீரியாவின் பாதிப்பு ஏற்படுகிறது எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

    ஏற்கனவே நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 17 பேர் உயிரிழந்தனர், இந்த வைரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற கேரளாவிற்கு மீண்டும் ஒரு சோதனை காலமாக மாறியுள்ளது. இப்போது ‘ஷிகெல்லா’ பாக்டீரியா அச்சுறுத்தலாக எழுந்துள்ளது.
    கேரளாவில் நிபா வைரஸை விரைவில் கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை எடுத்ததற்காக அமெரிக்காவின் பால்டிமோர் வைராலஜி இன்ஸ்டிடியூட் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை கவுரவித்துள்ளது. #PinarayiVijayan #NipahVirus
    நியூயார்க்:

    கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த மே மாதம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதனால் சுமார் 18 பேர் மரணமடைந்தனர். பின்னர், கேரள மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் நிபா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. 

    இந்நிலையில், சிறப்பாக நடவடிக்கை எடுத்து நிபா வைரஸை கட்டுப்படுத்திய முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சைலஜா டீச்சர் ஆகியோருக்கு அமெரிக்காவின் பால்டிமோர் வைராலஜி இன்ஸ்டிடியூட் பாராட்டுவிழா நடத்தியது. இதில், பினராயி விஜயன் மற்றும் சைலஜா டீச்சர் கலந்து கொண்டனர்.

    அப்போது, கேரளாவில் நவீன வைராலஜி இன்ஸ்டிடியூட் அமைப்பது தொடர்பாக பினராயி விஜயன் மற்றும் பால்டிமர் இன்ஸ்டிடியூட் தலைமை விஞ்ஞானிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள விஜயன் 18-ம் தேதி நாடு திரும்புகிறார்.
    ×