search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nipah"

    கேரளாவில் நிபா வைரஸை விரைவில் கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை எடுத்ததற்காக அமெரிக்காவின் பால்டிமோர் வைராலஜி இன்ஸ்டிடியூட் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை கவுரவித்துள்ளது. #PinarayiVijayan #NipahVirus
    நியூயார்க்:

    கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த மே மாதம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதனால் சுமார் 18 பேர் மரணமடைந்தனர். பின்னர், கேரள மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் நிபா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. 

    இந்நிலையில், சிறப்பாக நடவடிக்கை எடுத்து நிபா வைரஸை கட்டுப்படுத்திய முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை மந்திரி சைலஜா டீச்சர் ஆகியோருக்கு அமெரிக்காவின் பால்டிமோர் வைராலஜி இன்ஸ்டிடியூட் பாராட்டுவிழா நடத்தியது. இதில், பினராயி விஜயன் மற்றும் சைலஜா டீச்சர் கலந்து கொண்டனர்.

    அப்போது, கேரளாவில் நவீன வைராலஜி இன்ஸ்டிடியூட் அமைப்பது தொடர்பாக பினராயி விஜயன் மற்றும் பால்டிமர் இன்ஸ்டிடியூட் தலைமை விஞ்ஞானிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள விஜயன் 18-ம் தேதி நாடு திரும்புகிறார்.
    நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 12 பேரின் உடல்களுக்கு ஈமச்சடங்கு செய்ய உறவினர்கள் யாரும் முன்வராத நிலையில் அந்த பொறுப்பை மருத்துவர் ஒருவர் ஏற்றுக்கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. #Nipahvirus
    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 18 பேர் பலியான நிலையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிகப்பட்டு இறந்தவர்களின் உடலின் அருகில் சென்றால் வைரஸ் தங்களுக்கும் பரவிடும் எனும் அச்சத்தில் இறந்தவர்களின் உடலை பெற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவும் உறவினர்கள் யாரும் முன்வரவில்லை.

    இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த மருத்துவரான ஆர்.எஸ்.கோபகுமார் என்பவர் நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்த 12 பேரின் உடல்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளார். அதன்படி, 3 உடல்களுக்கு அவர் ஏற்கெனவே ஈமச்சடங்கு செய்து அடக்கம் செய்துள்ளார்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 17 வயது சிறுவனுக்கு ஈமச்சடங்கு செய்த பின்னர் பேசிய மருத்துவர் ஆர்.எஸ்.கோபகுமார், “காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த சிறுவனின் உடலை அடக்கம் செய்யும் போது அவர்களின் உறவினர்களில் ஒருவரும் அருகே இல்லாமல் இருந்தது எனக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. ஆனால், நான் எதையும் யோசிக்காமல் அந்த சிறுவனுக்கு இந்துமத முறைப்படி ஈமச்சடங்கு செய்து அடக்கம் செய்தேன், இது எனது கடமை” என கூறினார்.

    மேலும் அவர் கூறியதாவது, “எபோலாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் முறையை நான் பின்பற்றினேன். இறந்தவர்களின் உடலை காற்றுபுகாத படி சுற்றி பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு, 10 அடி குழி வெட்டி அதில் 5 கிலோ எடையுடைய பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது” என அவர் தெரிவித்தார்.

    மருத்துவர் ஆர்.எஸ்.கோபகுமாரின் இந்த தன்னலமில்லாத நடவடிக்கை பற்றி அம்மாநில சுகாதார மந்திரி ஷைலஜா சட்டசபையில் நேற்று புகழ்ந்து பேசியதும் குறிப்பிடத்தக்கது. #Nipahvirus
    கேரள மாநிலத்தை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.#NipahVirus #NipahSpreadsKerala #NipahPanic
    கோழிக்கோடு:

    கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக அரிய வகை நிபா வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் இந்த வைரஸ் தாக்குதல் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பரவலாக உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இந்த வைரஸ் தாக்குதலுக்கு கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு செவிலியர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வவ்வால்களால் பரவும் இந்த நிபா வைரஸ், மனிதர்கள் மற்றும் விலங்குகளை தாக்குவதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான மூளைக்காய்ச்சல் மற்றும் மூளைச்சாவு ஏற்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



    நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நோயாளிகளின் ரத்த மாதிரி புனேயில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்படுகின்றன.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வல்லுநர் குழு இன்று கோழிக்கோடு வந்து, நோயாளிகளை பரிசோதனை செய்ய உள்ளது. நோய் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.  #NipahVirus #NipahSpreadsKerala #NipahPanic
    ×