search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ் 300 ஏவுகணை"

    • தண்ணீர் வீணாக வெளியேறியது
    • ஏரியின் மதகை சீர்செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் மாவட்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஏரியின் மதகை மர்ம நபர்கள் சிலர் உடைதததாக கூறப்படுகிறது.

    இதனால் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் மூழ்கி பயிர்கள் நாசமானது.

    இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர் இந்தநிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகில் இருந்து வெளியேறும் தண்ணீரை சரியான முறையில் சீரமைப்பு செய்யாததால். நேற்று இரவு மீண்டும் ஏரியின் மதகு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.

    இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீரில் முழுகி நெற் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இரண்டு மாதம் தண்ணீர் வீணாக வெளியேறிய நிலையில் தற்போது ஒரு மாதம் தண்ணீர் வீணாக வெளியேறியது கோடை காலங்களில் தண்ணீர் கிடைக்காத நிலையில் தற்போது ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால் எதிர்காலங்களில் விவசாயிகளுக்கும் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கம் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையில் இருந்து வருகிறது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுத்து ஏரியின் மதகை சீர்செய்து ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.‌

    உயர்தொழில்நுட்ப வான் பாதுகாப்பு ஏவுகணைகளான எஸ்-300 ரக ஏவுகணைகள் இரண்டு வாரத்திற்குள் சிரியாவுக்கு வழங்கப்படும் என ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கி சோய்கு தெரிவித்துள்ளார். #S300AirDefenseMissiles #Syria
    மாஸ்கோ :

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் அரசு ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரியா அரசுப் படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்துகின்றன.

    இந்த பதற்றமான சூழ்நிலையில், சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் கடந்த 17-ம் தேதி ரஷியாவுக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், விமானத்தில் பயணம் செய்த 15 ரஷிய ராணுவ வீரர்கள் பலியாகினர். இதைத்தொடர்ந்து, தங்கள் நாட்டின் விமானம் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என ரஷியா முதலில் குற்றம்சாட்டியது.

    ஆனால், தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்கு இஸ்ரேல் விமானிகள் ரஷிய விமானங்களை கேடயமாக பயன்படுத்தி வந்துள்ளதாகவும்,  விமானம் வீழ்த்தப்பட்ட லடாக்கியா பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் முன்னறிவிப்பின்றி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அச்சமயம் அந்த பகுதி வழியாக வந்த ரஷிய விமானம் சிரியா ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது என விசாரணைக்கு பின்னர் ரஷியா தெரிவித்தது.

    எனினும், இந்த விபத்துக்கு இஸ்ரேல் தான் பொறுப்பேற்க வேண்டும் என சிரியா மற்றும் ரஷியா வலியுறுத்தியது. ஆனால் இதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துவிட்டது.

    இதற்கிடையே, சுமார் 300 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து சென்று எதிரி ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் திறன் கொண்ட உயர்தொழில்நுட்ப எஸ்-300 ரக ஏவுகணைகள் இரண்டு வாரத்திற்குள் சிரியாவுக்கு வழங்கப்படும் என ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கி சோய்கு தெரிவித்துள்ளார்.

    ஏற்கெனவே, கடந்த 2016-ம் ஆண்டு இவ்வகை ஏவுகணைகளை சிரியாவுக்கு வழங்க ரஷிய முயன்ற போது, இந்த ஏவுகணைகளை எங்கள் நாட்டிற்கு எதிராக  சிரியா பயன்படுத்தக்கூடும் என இஸ்ரேல் கோரிக்கை தெரிவித்ததால் அந்த முடிவை ரஷியா கைவிட்டதை நினைவு கூற வேண்டும்.



    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை நேற்று தொடர்புகொண்டு பேசிய ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், ‘ சிரியாவிற்கு எஸ்-300 ஏவுகணைகளை வழங்க முடிவு செய்துள்ளோம். சிரியாவில் உள்ள ரஷிய ரணுவ வீரர்களின் உயிர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், ’ ரஷியாவின் இந்த முடிவு இஸ்ரேல் பிரதமருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷியா போர் விமானம் சுட்டு வீழத்தப்பட்டத்தற்கு பொறுப்பேற்க வேண்டியது சிரியா ராணுவம் தான். ஆனால், இவ்விவகாரத்தில் அங்கள் மீது ரஷியா குற்றம்சாட்டுகிறது.  

    உயர்தொழில்நுட்ப ஏவுகணைகள் பொறுப்பற்றவர்களின் கைகளில் கிடைத்தால், அதை அவர்கள் தவறாக பயன்படுத்தக்கூடும். எனவே, ரஷியாவின் முடிவால் இந்த பிராந்தியம் அச்சுருத்தலுக்கு உள்ளாகியுள்ளது’. என குறிப்பிட்டுள்ளது. #S300AirDefenseMissiles #Syria
    ஜப்பான் நாட்டை இந்த மாதத்தில் தொடர்ந்து தாக்கிய மழை, வெள்ளம், வெப்பம் மற்றும் புயலால் 300-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். #Japandeathstop300 #Japanweatherrelateddeaths
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டின் பல பகுதிகளில் இந்த மாதத்தின் முற்பகுதியில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 220-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

    இதனைதொடர்ந்து, கடந்த வாரத்தில் இருந்து ஜப்பானின் பல மாகாணங்களை வறுத்தெடுத்துவரும் 104 டிகிரி வெயிலின் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 116 பேர் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர்.



    போதாக்குறைக்கு சமீபத்தில் வீசிய புயலால் சிலர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த மாதத்தில் மட்டும் ஜப்பானில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் கடந்த 1982-ம் ஆண்டுக்கு பின்னர் அந்நாடு சந்தித்துள்ள மிகப்பெரிய பேரழிவாகும் என உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. #Japandeathstop300 #Japanweatherrelateddeaths
    கவாசகி நிறுவனத்தின் 2018 நின்ஜா 300 ஏ.பி.எஸ். வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Kawasaki #ninja



    கவாசகி நிறுவனத்தின் 2018 நின்ஜா 300 ஏ.பி.எஸ். வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நின்ஜா ஏ.பி.எஸ். வேரியன்ட் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாகங்களால் உருவாக்கப்பட்டு இருப்பதால், இதன் விலை தற்போதைய மாடலை விட ரூ.62,000 வரை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    2018 நின்ஜா 300 ஏ.பி.எஸ். மாடல்: லைம் கிரீன்/ எபோனி மற்றும் கேன்டி பிளாஸ்மா புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. மற்ற மாற்றங்களை பொருத்த வரை ஃபேரிங்-இல் நின்ஜா பிரான்டிங், டூயல் ஹெட்லேம்ப் செட்டப் மற்றும் கூர்மையான முன்பக்கம், விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய நின்ஜா 300 ஏ.பி.எஸ். மாடலில் எம்.ஆர்.எஃப். டையர்கள் மற்றும் என்டூரன்ஸ் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த எடை 7 கிலோ வரை அதிகமாகி தற்சமயம் 179 கிலோவாக இருக்கிறது. இதுதவிர ஒட்டுமொத்த வடிவமைப்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 



    2018 நின்ஜா 300 ஏ.பி.எஸ். மாடலில் தற்போதைய மாடல்களை போன்றே 296சிசி பேரலெல்-ட்வின் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 38 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 27 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

    சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்த வரை புதிய நின்ஜா 300 மாடலின் முன்புறம் 37 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 290 மில்லிமீட்டர் பெட்டல் டிஸ்க் மற்றும் டூயல் கேலிப்பர்கள், பின்புறம் 220 மில்லிமீட்டர் பெட்டல் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். ஸ்டேன்டர்டு அம்சமாக உள்ளது. 

    இந்தியாவில் புதிய 2018 கவாசகி நின்ஜா 300 ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை ரூ.2.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Kawasaki #ninja
    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 300 இடங்களுக்கு மேல் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என நிதி மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். #PiyushGoyal #BJP #2019Election
    லண்டன்:

    லண்டனில் நடைபெற்று வரும் இந்தியா யுகே வார விழாவில் மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    முத்ரா என்ற திட்டத்தின் மூலம் 120 மில்லியன் கடன்களை கொடுத்துள்ளோம். இந்த கடன் மூலம் மக்களை அவர்களது சொந்தக் காலில் நிற்க வைத்துள்ளோம். நாங்கள் தொடர்ந்து வங்கிகளை வலுப்படுத்துவோம். அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவது என்ற எண்ணம் இல்லை. அதுபோல நடக்காது.

    அடுத்த 30 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதில் கடந்த 4 ஆண்டுகளாக செலவிட்டுள்ளோம். நிறைய கட்டமைப்பு மாற்றங்களை 4 ஆண்டுகளில் செய்து வந்துள்ளோம். நிதி பற்றாக்குறை அதிகமாக இருந்து வருகிறது. பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது.

    மக்களுக்கும், நாட்டுக்கும் தேவையான நடவடிக்கையை மட்டும் எடுங்கள் என பிரதமர் மோடி எங்களிடம் அறிவுறுத்தி உள்ளார். 

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். #PiyushGoyal #BJP #2019Election
    ×