search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவு நாள் நிகழ்ச்சி"

    • மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • திரளானோர் கலந்து கொண்டு உயிர் நீத்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்

    பல்லடம் :

    பல்லடம் அருகே அருள்புரத்தில் இலங்கை முள்ளிவாய்க்கால் போரில் உயிர் நீத்த ஈழ தமிழர்களின் 14ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க., பொருளாளரும், பல்லடம் ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஆர். ரவி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளானோர் கலந்து கொண்டு உயிர் நீத்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • எம்.ஜி.ஆரின் 35-ம்ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது.
    • புறநகர்மாவட்ட செயலாளர் டி.டி.காமராஜ் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    தாராபுரம் : 

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-ம்ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது. திருப்பூர் புறநகர்மாவட்ட செயலாளர் டி.டி.காமராஜ் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தண்டபாணி,அவைத்தலைவர் வெங்கிடுபதி,ஜிம் பாலகிருஷ்ணன்,தனலட்சுமி தங்கவேல்,பொன்னி கார்த்திகேயன்,பூங்கொடி ஜெயராஜ்,தாஜ் ஜாபர் சாதிக், பொன் செல்லத்துரை,கே.எஸ்.கே.ஜவகர்,அம்மன் ஆர்.பாலகிருஷ்ணன், கோட்டை குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காங்கயம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது .
    • எம் ஜி .ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் நகர அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காங்கயம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது . நிகழ்ச்சியில் காங்கயம் அ.தி.மு.க நகர செயலாளர் வெங்கு.ஜி.மணிமாறன் தலைமையில் எம் ஜி .ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து எம்.ஜி.ஆரின் ஏழை மக்களுக்கான திட்டங்களையும், அவர் குறித்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கயம் அ.தி.மு.க மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு எம் ஜி .ஆரின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • வீர வணக்க நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அமைச்சர் கலந்து கொண்டு ஒண்டிவீரனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் சுதந்திர போராட்ட தியாகி ஒண்டி வீரனின் வீர வணக்க நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு ஒண்டிவீரனின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றியத் தலைவர் செந்தில்குமார் மற்றும் தாராபுரம் நகர தி.மு.க. செயலாளர் முருகானந்தம், நகர அவைத்தலைவர் கதிரவன், நகர துணை செயலாளர்கமலக் கண்ணன் ,மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் பெரியசாமி , மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் மற்றும் தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் காளிமுத்து மற்றும் தண்டபாணி , சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×