search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய்க்குட்டி மீட்பு"

    • குழாயின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த நாய்க்குட்டி கழிவறையின் உள்பகுதிக்குள் மாட்டி கொண்டது.
    • கழிப்பறையை முழுமையாக இடித்து துளையிட்டுப் பார்த்தபோது சுமார் 8 அடி ஆழத்தில் நாய்க்குட்டி மாட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    கடலூர் சாவடி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள கழிப்பறை அருகே நாய் ஒன்று 3 குட்டிகளை போட்டிருந்தது.

    அதில் ஒரு குட்டி வீட்டு கழிவறை குழாய் அருகே விளையாடிக்கொண்டிருந்தது. கழிவறை குழாயின் ஒரு பகுதி உடைந்திருந்தது குழாயின் மேல் பகுதி வழியாக சென்ற நாய்க்குட்டி கால் வழுக்கி ஓட்டைக்குள் விழுந்தது.

    குழாயின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த நாய்க்குட்டி கழிவறையின் உள்பகுதிக்குள் மாட்டி கொண்டது. அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்தது.

    குழாய்க்குள் இருந்து வந்த நாய்க்குட்டியின் முனகல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த முருகன் விலங்கு நல ஆர்வலரான செல்லா என்பவருக்கு தகவல் தெரிவித்து அவரது உதவியை நாடினார்.

    அங்கு சென்றார் விலங்கு நல ஆர்வலர் செல்லா. குழாயில் சிக்கிய நாய்க்குட்டியை கழிப்பறை ஓட்டை வழியாக வெளியே எடுக்க முயற்சித்தார். அது பலன் அளிக்கவில்லை. கழிப்பறையை உடைத்தால் தான் குட்டியை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் முருகன் கழிப்பறையை முழுமையாக உடைக்க முடிவு செய்தார். இதையடுத்து கழிப்பறையை முழுமையாக இடித்து துளையிட்டுப் பார்த்தபோது சுமார் 8 அடி ஆழத்தில் நாய்க்குட்டி மாட்டிக்கொண்டு இருந்தது தெரியவந்தது.

    சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நாய்க்குட்டியை உயிருடன் மீட்டனர்.

    பின்னர் அந்த நாய்க்குட்டியை குளிப்பாட்டி சுத்தம் செய்தனர். 6 மணி நேரத்திற்கு மேலாக குழாயில் சிக்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டி வெளியே வந்ததும் தனது தாயின் அரவணைப்பை தேடி அழுதுகொண்டே வேகமாக ஓடி தனது தாயுடன் சேர்ந்து பால் குடித்தது.

    இதுகுறித்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விலங்கு நல ஆர்வலர் செல்லா மற்றும் வீட்டு உரிமையாளர் முருகனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    • அவரது வீட்டில் இருந்த நாய் திடீரென காணாமல் போனது
    • 60 அடி ஆழமும் 15 அடி தண்ணீரும் உள்ள அந்த கிணற்றுக்குள் அந்த நாய் தவறி விழுந்து தவித்து கொண்டு இருந்தது தெரிய வந்தது

    பெருந்துறை,

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், ஊத்துக்குளி ரோடு, தங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் மாயக்கண்ணன். தொழி லாளியான இவர் தனது குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்த நாய் திடீரென காணாமல் போனது. இதையடுத்து அவர் உடனடியாக அந்த பகுதியில் நாயை தேடிப் பார்த்தார். அப்போது வீட்டிற்கு அருகே இருந்த தோட்டத்து கிணற்றுக்குள் இருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.

    இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் கிணற்று அருகே சென்று பார்த்தார். சுமார் 60 அடி ஆழமும் 15 அடி தண்ணீரும் உள்ள அந்த கிணற்றுக்குள் அந்த நாய் தவறி விழுந்து தவித்து கொண்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதை யடுத்து நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி சிறிது நேரம் போராட்டத்துக்கு பிறகு கயிறு கட்டி நாயை பத்தி ரமாக மீட்டனர்.

    • குளச்சல் பர்னட்டி விளையை சேர்ந்தவர் தேவராஜ் (50) இவர் வி.கே.பி.பள்ளி அருகில் அரவை மில் நடத்தி வருகிறார்.
    • கடந்த 5 நாட்களாக உணவின்றி குரைத்த படியே சோர்வாக கிடந்தது.

    குளச்சல்:

    குளச்சல் பர்னட்டி விளையை சேர்ந்தவர் தேவராஜ் (50) இவர் வி.கே.பி.பள்ளி அருகில் அரவை மில் நடத்தி வருகிறார்.

    இந்த அரவை மில் முன்பு ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஆபத்தான நிலையில் சுற்று சுவர் இல்லாமல் சுமார் 40 அடி ஆழ பாழும் கிணறு ஒன்று உள்ளது.

    இந்த கிணற்றில் கடந்த 5 நாட்களுக்கு முன் நாய் குட்டி ஒன்று தவறி விழுந்து உள்ளது.இதை யாரும் கவனிக்காததால் மீட்கப்படாமல் இருந்தது.கடந்த 5 நாட்களாக உணவின்றி குரைத்த படியே சோர்வாக கிடந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை அந்த அரவை மில்லுக்கு சென்ற நபர் ஒருவர் நாய்குட்டியின் பரிதாப நிலையை பார்த்து குளச்சல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய அதிகாரி குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து நாயை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆனால் மாலை நேரம் போதிய வெளிச்சம் இல்லாததாலும் கிணற்றின் உள்ளே மண்சரிவு ஏற்படும் என்ற அச்சத்தால் மீட்கும் முயற்சியை கைவிட்டு கிணற்றுக்குள் நாய்குட்டிக்கு உணவு மட்டும் போட்டு சென்றனர். இன்று காலை மீண்டும் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி அந்த நாய்குட்டியை பத்திரமாக மீட்டனர்.

    நாய்குட்டியின் உரிமையாளர் யார்?என்று தெரியாத நிலையில் தீயணைப்பு துறையினர் நாய்குட்டியை அந்த பகுதியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஒருவரிடம் ஒப்படைத்தனர்.

    ×