search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்லெண்ணெய்"

    • அம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது.
    • சிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம்.

    தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    மஞ்சள் நிறச் சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.

    நீல நிறச் சேலை அணிந்தும் தீபமிடலாம்.

    அம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது. மற்ற நாட்களில் நீலநிறச் சேலை அணிந்தால் நோய்கள் குணமாகும். பேய், பிசாசுத் தொல்லைகள் நீங்கும்.

    சிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம். சிவப்புச் சேலை அணிவதால் திருமணத் தடை நீங்கி இல்லறச் சுகம் கிட்டும். மலட்டுத் தன்மை அடியோடு ஒழியும். போய், பிசாசு தொல்லைகள் விலகும். செய்வினை அழியும்.

    வெள்ளைச் சேலையைச் சுமங்கலிப் பெண்கள் தவிர மற்றவர்கள் அணியலாம். வெள்ளைச் சேலை புதியதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும். வெள்ளைச் சேலை அணிந்தால் உத்தமமான பலன்கள் வாழ்வில் உண்டாகும்.

    திருவிளக்கும், தீபமும் அன்னையின் அம்சங்கள் என்றாலும் அனைத்தும் தெய்வங்களையும் திருவிளக்கிட்டு தீபமேற்றியே நாம் காலம் காலமாய் வழிபட்டு வருகின்றோம். அவ்வாறு வழிபடுகையில் இன்னின்ன தெய்வங்களுக்கு இன்னின்ன தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறியுள்ளனர்.

    தேவி கருமாரியை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் என ஐந்து எண்ணெய் கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும்.

    • எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், தலையின் மேற்பாக தோளின்மூலம் முடியின் வேர்கால்கள்வரை எளிதில் ஊடுருவிச் செல்லும் தன்மையால், புறஊதாக்கதிர்களின் தீமையை அகற்றி, தலையின் வெப்பத்தை சமன்படுத்தி, முடி உதிர்தலைத் தடுக்கிறது.
    • உடல் வெப்பத்தையும் சீராக்குவதோடு, மனஅழுத்தம், கண்ணெரிச்சல், நீர் சுருக்கு உள்ளிட்ட சிறுநீர்ப்பாதை தொற்று, வயிற்றுவலி, மலச்சிக்கல் ஆகியவையும் உங்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்கிறது.

    குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் தேய்த்து தலை குளிக்க வையுங்கள்.

    அவசர உலகம், நவநாகரீகம், கல்லூரி மாணவர்கள், ஸ்டைல் ..... என்றெல்லாம் ஆயிரத்தெட்டு காரணங்களைக் கூறாமல், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாரம் இருமுறைகள் கட்டாயமாக தலையில் நல்லெண்ணெய் தேய்த்து, ஊறவைத்து குளிப்பதற்கு என்னெவெல்லாம் செய்யவேண்டும் அதையெல்லாம் செய்துபாருங்கள். செய்துவிடுங்கள்.

    நிறைந்த கால்சியம் சத்தையும், புரதம், மக்னீசியம் போன்ற சத்துக்களையும் தன்னகத்தே வைத்துள்ள நல்லெண்ணெய் என்னும் எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், தலையின் மேற்பாக தோளின்மூலம் முடியின் வேர்கால்கள்வரை எளிதில் ஊடுருவிச் செல்லும் தன்மையால், புறஊதாக்கதிர்களின் தீமையை அகற்றி, தலையின் வெப்பத்தை சமன்படுத்தி, முடி உதிர்தலைத் தடுக்கிறது.

    உடல் வெப்பத்தையும் சீராக்குவதோடு, மனஅழுத்தம், கண்ணெரிச்சல், நீர் சுருக்கு உள்ளிட்ட சிறுநீர்ப்பாதை தொற்று, வயிற்றுவலி, மலச்சிக்கல் ஆகியவையும் உங்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்கிறது.

    முடியின் கருமை, அடர்த்தி, உறுதி, நீளம் ஆகியவை தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் எந்தஅளவிற்கு முடியின் வேர்கால்களைத்தொட்டு, உள்ளே செல்கிறதோ, அந்த அளவிற்கு நன்றாக அமையும்.

    இதனுடன் சேர்ந்து, புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ' 'சி' 'ஈ' மற்றும் செலினியம் ஆகியவை நிறைந்த பழங்கள், காய்கள், கொட்டை உணவுகள், கீரைகள், முட்டை ஆகியவையும் மிருதுவான, அடர்த்தியான, நீளமான, கருமையான கூந்தலுக்கு மிக அவசியம்.

    -முனைவர் வண்டார் குழலி

    ×