search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நலவாழ்வு மையம்"

    • 500 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
    • குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாலக்கரை, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன.

    குமாரபாளையம்:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை யின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட 500 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

    அதன்படி, குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாலக்கரை, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன.

    இதையொட்டி குமாரபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன்,நகராட்சி ஆணையாளர் (பொ) ராஜேந்திரன், எலந்த குட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலு, நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி மற்றும் நகர்நல மைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஜேம்ஸ், இனியா ராஜ், கனகலட்சுமி, கோவிந்தராஜன், விஜயா,திமுக நிர்வாகிகள் செந்தில்குமார், செல்வராஜ், சரவணன்,சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • திருப்பரங்குன்றத்தில் நகர்புற நலவாழ்வு மையம் திறக்கப்பட்டது.
    • மாமன்ற உறுப்பினர் சுவேதா சத்யன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    திருப்பரங்குன்றம்

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் நகர்புற நலவாழ்வு மையத்தினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அதில் மதுரை மாநகராட்சியில் 45 இடங்கள் உட்பட மதுரை மேற்கு மேற்கு மண்டலத்தில் 11 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டன.

    திருப்பரங்குன்றத்தில் நடந்த நலவாழ்வு மைய திறப்பு விழாவிற்கு மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா தலைமை வகித்தார். மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல மருத்துவர் தேவி வரவேற்றார். மேற்கு மண்டலத்தலைவர் சுவிதா விமல் குத்துவிளக்கேற்றி மையத்துதை வக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜயகுமார், ஆய்வாளர் முருகன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சாமிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பஙேக்ற்றனர். தொடர்ந்து கர்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

    இதேபோல திருநகர் மகாலெட்சுமி காலனியில் நகர்புற நலவாழ்வு மையத்தினை மாமன்ற உறுப்பினர் சுவேதா சத்யன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

    • திருமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்ட நகர்புற நலவாழ்வு மையம் திறக்கப்பட்டது.
    • காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையில் செயல்படும்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி 5-வது வார்டில் ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நகர்புற நலவாழ்வு மையத்தில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். விழாவில் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திருக்குமார், திருமங்கலம் நகர்புற நலவாழ்வு மையத்தின் மருத்துவர் டாக்டர் அருண்பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர தி.மு.க. செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் வீரக்குமார்,சின்னசாமி, ஜஸ்டின்திரவியம், பெல்ட்முருகன், வினோத், சரண்யாரவி, மச்சவள்ளி,ரம்ஜான்பேகம் ஜாகீர்உசேன், முத்துகாமாட்சி, மங்களகவுரி, காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா, செக்கானூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவஅலுவலர் டாக்டர் உமாமகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் முத்து, சுகாதார அலுவலர் சண்முகவேலு ஓவர்சீஸ் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சுகாதாரமையம் காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையில் செயல்படும்.

    • ரூ.75 லட்சம் மதிப்பில் புதிய நகர்புற நலவாழ்வு மையத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
    • கலெக்டர் விஷ்ணு சந்திரன் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதை பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகராட்சிக் குட்பட்ட லேதம்ஸ் பங்களா, பரமக்குடி சந்தை கடை தெரு, மஞ்சள்பட்டினம் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய அரசு நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள் ளன. இதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து நலவாழ்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிகிச்சை அளிப்பதை பார்வை யிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு நலவாழ்வு மையத்திலும் தலா, ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவமனை பணியாளர் என பணிபுரிவார்கள். மேலும் இங்கு காலை 8 மணி முதல் 12 மணி வரை மற்றும் 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஆகிய நேரங்களில் 12 வகையான மருத்துவ சேவைகள், 14 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். மேலும் இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் தேவையான மருத்துவ சிகிச்சைகள் பெற்று பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த திறப்பு விழாவில் முருகேசன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள்அர்ஜூன் குமார் (ராமநாதபுரம்), இந்திரா (பரமக்குடி), ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், நகர்மன்ற உறுப்பி னர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் நகரை அழகுபடுத்தும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
    • சாலை யோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மாநகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து பல்வேறு சாலைகள் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நாகர்கோவில் நகரை அழகுபடுத்தும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    டதி பள்ளி சந்திப்பில் இருந்து வேப்பமூடு வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்து அழகுப்படுத்த ரூ.1.50 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பணிகளை மேயர் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த் மோகன், என்ஜினீயர் பாலசுப்ரமணியன், மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சாலை யோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக டதி பள்ளி சந்திப்பில் இருந்து வேப்பமூடு சந்திப்பு வரை உள்ள சாலையை விரிவுபடுத்தி அழகுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    இந்த பகுதியில் கழிவு நீரோடை சீரமைக்கப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பொது மக்கள் நடந்து செல்ல வசதியாக நடை பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டதி பள்ளி சந்திப்பு பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இனி கார் பார்க்கிங் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.

    மேலும் இந்த சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவதற்கான நட வடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகிறது. அலங்கார விளக்குகளும் அமைக்கப்படும். இதே போல் நாகர்கோவில் மாநகர பகுதியில் 10 இடங்களில் தலா ரூ.25 லட்சம் செலவில் நல வாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

    நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் இருந்து வெட்டூர்ணிமடம் வரை உள்ள சாலையை மேம்படுத்த ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சாலை இருவழி சாலையாக மாற்றப்படுவதுடன் கழிவுநீரோடையும் சீரமைத்து அலங்கார விளக்குகள் அமைப்ப தற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் நாகர்கோவில் மாநகரில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×