search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்சத்திர ஹோட்டல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடியை மாநில அரசு சார்பில் வரவேற்கும் பொறுப்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டிருந்தது.
    • பிரதமருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனியாக சந்தித்து பேசிய விஷயம் அதன் பிறகுதான் வெளியே தெரிய வந்தது.

    சென்னை:

    பிரதமர் மோடி கடந்த 27-ந்தேதி தமிழ்நாடு வந்த போது பல்லடம் பொதுக் கூட்டத்திற்கு பிறகு மதுரைக்கு சென்றிருந்தார். அங்கு தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் பங்கேற்றார்.

    அதன் பிறகு இரவு 8 மணிக்கு பசுமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுவிட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன் பிறகு மதுரையில் ஓட்டலில் தங்கி விட்டு மறுநாள் (28-ந்தேதி) தூத்துக்குடிக்கு சென்றார்.

    இந்நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியை மாநில அரசு சார்பில் வரவேற்கும் பொறுப்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி மதுரை வீர பாஞ்சான் பள்ளி ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்று பிரதமர் மோடியை வரவேற்று சால்வை அணிவித்தார்.

    இந்த நிலையில் அன்றைய தினம் பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு ஓட்டலுக்கு திரும்பிய போது அமைச்சர் பழனிவேல் பழனிவேல் தியாகராஜன் அங்கே சென்றும் பிரதமர் மோடியை பார்த்து விட்டு இரவில் வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு டெல்லியில் இருந்து சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி ஓட்டலில் இருந்து பிரதமர் புறப்பட்டபோது, முதல் நபராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரதமரை சந்தித்தார்.

    இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் நீடித்தது. இருவரும் என்ன பேசிக் கொண்டனர் என்பது வெளியிடப்படவில்லை. அதன் பிறகு மதுரை விமான நிலையத்திற்கு சென்றும் பிரதமரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழியனுப்பி வைத்தார்.

    பிரதமருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனியாக சந்தித்து பேசிய விஷயம் அதன் பிறகுதான் வெளியே தெரிய வந்தது.

    இதுகுறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-

    மதுரை வந்த பிரதமர் மோடியை நான் 4 முறை சந்தித்தேன். அவரை வர வேற்பதற்காக தமிழக அரசு எனக்கு 2 முறை புரோட்ட கால் கொடுத்தது. முதலில் அனுப்பப்பட்ட புரோட்ட காலில் பிப்.27-ல் ஓட்ட லுக்கு சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்பது இல்லை. பிப்ரவரி 27 இரவு பிரதமர் அலுவலகம் விடுத்த சிறப்பு அழைப்பு எனக்கு வந்தது உண்மை தான். அப்போது மாநில அரசின் வழி காட்டுதலையே நான் பின்பற்றினேன்.

    பிரதமர் அலுவலகம் எனக்கு சிறப்பு அழைப்பு விடுத்ததை நான் தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதில்லை. அதன் நகல் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு சென்று விடும்.

    பிரதமர் பயணத்தில் மாநில அரசின் புரோட்ட கால்படி துணை செயலாளர் ஒருவரும் இருப்பார்.

    அவரும் எனக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு குறித்து தகவல் தெரிவித்தார். பிரதமரிடம் என்ன பேசினேன் என்பதை வெளியில் சொல்லக்கூடாது. ஆனால் அரசியல் பேசவில்லை. நான் மரியாதையாக அவரை வரவேற்றேன். அதற்காக என்னை தேங்க்யூ பாய்.. தேங்யூ பாய் என்று தட்டிக் கொடுத்தார்.

    பிரதமரை சந்தித்த போட்டோவை எங்கும் நான் வெளியிடவில்லை. ஆனால் பா.ஜ.க.வினர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விவகாரத்தை கிளப்பி விட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 240கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 50க்கும் மேற்பட்டோர் கேக் மிக்ஸிங் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள "கால்டன் சமுத்திரா" நட்சத்திர ஹோட்டலில் 240கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கேக் தயாரிப்பதற்காக திராட்சை, ஜெரி, பப்பாளி, ஸ்டாபரி, பைனாப்பிள் உள்ளிட்ட பலவகை டிரை புரூட்ஸ் 120கிலோவும், விஸ்கி, பிராந்தி, உட்கா, ஜின், ரம், பக்காடி உள்ளிட்ட மதுபானங்கள் 60லிட்டரும் சேர்க்கப்பட்டது.

    சின்னத்திரை பிரபலங்கள், பிரபல சமையல் கலைஞர்கள், சுற்றுலா விருந்தினர்கள், ஹோட்டல் பணியார்கள் என 50க்கும் மேற்பட்டோர் கேக் மிக்ஸிங் செய்தனர். பின் அவைகளை 3 பேரல்களில் மூடி வைக்கப்பட்டது. 40நாட்கள் கழித்து ஊரவைக்கப்பட்ட டிரை புரூட்ஸ், மதுபான கலவையை எடுத்து அதில் 240கிலோ கேக் செய்யப்பட உள்ளது.

    ×