search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடராஜர் சிலை"

    • அண்ணாமலையார் ஆலயத்தில் 5 அடி உயரமுள்ள நடராஜர் சிலை தனித்துவம் கொண்டது.
    • அந்த சிலையில் பூனூல் அணிவிக்கப்பட்டு சின் முத்திரை காட்டும் நிலை உள்ளது.

    அண்ணாமலையார் ஆலயத்தில் 5 அடி உயரமுள்ள நடராஜர் சிலை தனித்துவம் கொண்டது.

    இந்த செப்பு சிலை முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடுவது போன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலையின் முகத்தில் லேசான புன்முறுவல் காணப்படும்.

    இந்த செப்பு சிலைக்கு வருடத்தில் 6 தடவை சிறப்பு அபிஷேகம் செய்கிறார்கள்.

    அதில் ஆணித்திருமஞ்சனமும் ஆரூத்ரா தரிசனமும் மிகவும் விசேஷமானது.

    ஆயிரம்கால் மண்டபத்தில் வைத்து இந்த செப்பு சிலைக்கு அபிஷேகம் செய்வார்கள்.

    4 அடி உயரமுள்ள சிவகாமி அம்மன் சிலையின் கழுத்தில் தாலி இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அஸ்திர தேவர் செப்பு சிலையானது முன்பக்கம் விநாயகரையும், பின்பக்கம் ரிஷப வாகனரையும் கொண்டுள்ளது.

    விழாக் காலங்களில் இந்த செப்பு சிலை பலி எழுந்தருள்பவராக பயன்படுத்தப்படுகிறார்.

    திருநாவுக்கரசரின் செப்பு சிலை முழங்கால் வரை ஆடை அணிந்தபடி உழவாரப்படையுடன் நின்ற கோலத்தில் காணப்படுகிறது.

    அவர் கழுத்தில் ருத்ராட்ச மாலைகள் தொங்குகின்றன.

    திருஞான சம்பந்தர், சுந்தரரின் செப்பு சிலையும் இதேமாதிரி அழகுடன் உள்ளன.

    மாணிக்கவாசகரின் செப்பு சிலை உச்சிக்குடுமி வைத்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அந்த சிலையில் பூனூல் அணிவிக்கப்பட்டு சின் முத்திரை காட்டும் நிலை உள்ளது.

    அவரது இடது கையில் ஓலைச்சுவடி உள்ளது.

    அதில் "நமச்சிவாய" என்று எழுதப்பட்டுள்ளது. நால்வரின் இந்த சிலைகள் அனைத்தும் சுமார் 2 அடி உயரத்தில் உள்ளன.

    திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாக கருதப்படுவதால் பள்ளியறை சுவாமியும் மலை வடிவான மூன்று சிகர அடுக்கின் மீது சிவலிங்கம் வீற்றிருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வேறு எந்த சிவாலயத்திலும் இதுபோன்று பள்ளியறை சுவாமியை காண இயலாது.

    இப்படி சின்னச்சின்ன சிலைகள் விஷயத்தில் கூட திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் தனித்துவம் கொண்டு ஆச்சரியங்களின் உச்சமாக உள்ளது.

    இந்த ஐம்பொன், செப்பு சிலைகளை உற்சவ காலங்களில் நீங்கள் உன்னிப்பாக பார்த்தால் மட்டுமே ஒன்றாக ரசித்து தரிசிக்க முடியும்.

    தீபாவளி அன்று நடத்தப்படும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் விசேஷமானவை. அதுபற்றி அடுத்த வாரம் காணலாம்.

    • பாம்பு நடராஜர் சிலை கழுத்தின் மீது சுற்றி சாமி தலையில் படமெடுத்து அச்சுறுத்தியது.
    • நாகபாம்பினை பாண்டியன் பத்திரமாக பிடித்து அதனை ஆள் நடமாட்டம் இல்லாத வனபகுதியில் கொண்டுசென்று விட்டார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த செங்கமேடு பகுதியில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகை முறையில் அலங்காரம் செய்யும் நிறுவனத்தின் குடோன் உள்ளது. இந்த குடோனில் நடராஜர் உள்ளிட்ட சாமி சிலைகள் வாடகை விடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று குடோனுக்குள் ஊழியர்கள் சென்றனர். அப்போது அங்குள்ள நடராஜர் சிலை மீது சுமார் 5 அடி நீள நாகபாம்பு சுற்றிக்கொண்டு இருந்தது.

    இதனை பார்த்து அச்சம் அடைந்த ஊழியர்கள் நிறுவனத்தின் உரிமையாளர் விஜிக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் பாம்புபிடி வீரர் சீர்காழி பாம்பு பாண்டியனுக்கு தகவல் அளித்தார்.

    தகவலின்படி அங்கு சென்ற பாண்டியன் நடராஜர் சிலையினை சுற்றிக்கொண்டு இருந்த பாம்பினை பிடிக்க முயன்றார். அந்த பாம்பு நடராஜர் சிலை கழுத்தின் மீது சுற்றி சாமி தலையில் படமெடுத்து அச்சுறுத்தியது. பின்னர் லாவகமாக நாகபாம்பினை பாண்டியன் பத்திரமாக பிடித்து அதனை ஆள் நடமாட்டம் இல்லாத வனபகுதியில் கொண்டுசென்று விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • கோவிலில் நடராஜர் சிலை எந்த இடத்தில் இருந்தது? எப்படி திருட்டு போனது? என்பது தொடர்பாக கோவில் ஊழியர்கள், பக்தர்களிடம் சிலை தடுப்பு குழுவினர் விசாரித்தனர்.
    • தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள், இந்திய தொல்லியல்துறை மூலமாக நடராஜர் சிலை ஏலமிடப்படுவதை தடுத்து நிறுத்தினர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் பழமை வாய்ந்த அகிலாண்ட ஈஸ்வரி சமேத கோதண்ட ராமேசுவரர் கோவில் உள்ளது.

    சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இருந்த 15-ம் நூற்றாண்டை சேர்ந்த நடராஜர் சிலை உள்பட 4 சிலைகள் கடந்த 1972-ம் ஆண்டு திருட்டு போனது. இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 சிலைகளை மீட்டனர். நடராஜர் சிலையை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 16-ந் தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் ஒரு ஏல மையத்தில் நடராஜர் சிலையை ஏலமிடத் திட்டமிட்டு உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் அது கயத்தாறு கோதண்ட ராமேஸ்வரர் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன நடராஜர் சிலை என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள், இந்திய தொல்லியல்துறை மூலமாக நடராஜர் சிலை ஏலமிடப்படுவதை தடுத்து நிறுத்தினர். அந்தச் சிலையை இந்திய தூதரகம் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சமீர்பானு, சப்-இன்ஸ்பெக்டர் சகாய செல்வின் ஆகியார் அடங்கிய குழுவினர் நேற்று கயத்தாறு கோதண்ட ராமேசுவரர் கோவிலுக்கு வந்து ஆய்வு நடத்தினர்.

    அப்போது கோவிலில் நடராஜர் சிலை எந்த இடத்தில் இருந்தது? எப்படி திருட்டு போனது? என்பது தொடர்பாக கோவில் ஊழியர்கள், பக்தர்களிடம் சிலை தடுப்பு குழுவினர் விசாரித்தனர்.

    தொடர்ந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கண்டுபிடிக்கப்பட்ட நடராஜர் சிலையை மீட்டு இந்திய தூதரகம் மூலம் மீட்டு 3 மாதத்தில் கயத்தாறு கோதண்ட ராமேசுவரர் கோவிலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வேலூர் தங்க கோவில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது
    • சக்தி அம்மா சிறப்பு வழிபாடு செய்து திறந்து வைத்தார்

    வேலூர்:

    வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவில் வளாகத்தில் 23 அடி உயர ஐம்பொன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 23 அடி உயரம் 18 அடி அகலம் 15,000 கிலோ ஐம்பொன்னால் ரூ.4 கோடி மதிப்பில் இந்த சிலை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் செய்ய தொடங்கினார்கள்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிலை முழுமையாக செய்யப்பட்டு வேலூர் தங்க கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது .இந்த சிலை தற்போது ஸ்ரீபுரம் தங்கக் கோவில் அருகே உள்ள திருமண மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது .

    இதனை சக்தி அம்மா இன்று காலை திறந்து வைத்தார். இதுகுறித்து சக்தி அம்மா கூறியதாவது:-

    இந்திய கலாச்சாரம் பழமையும் தொன்மையும் அழகும் வாய்ந்தது. சமூகத்தில் கோவில் என்பது ரொம்ப முக்கியமானது.கோவிலுக்கு செல்லும்போது மனிதனுக்கு பூரண மன அமைதி கிடைக்கும். கோவிலில் தான் தெய்வீகத்தன்மை உணர முடியும்.

    மனித சமூகத்திற்கு கோவில் அவசியமானது. கோவிலில் நடக்கும் சமுதாய பூஜைகளுக்கும் ஆன்மீகம் மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் தொடர்பு உள்ளது. கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் தெய்வத்திற்கு கொடுத்ததை விட பல மடங்கு சக்தி அமைதி போன்றவை நமக்கு கிடைக்கிறது.

    சக்கரவர்த்திகளாக பல பகுதிகளை ஆண்ட ராஜாக்கள் கோவில்கள் மூலம் தான் இன்றும் பேசப்படுகிறார்கள். ராஜராஜ சோழன் பற்றி தற்போது பேசுகிறோம். அவர் கட்டிய அரண்மனை அவர் அமர்ந்த சிம்மாசனம் பற்றி தெரியாது. ஆனால் அவர் கட்டிய பெரிய கோவில் மூலம்தான் நாம் அவரைப் பற்றி பேசுகிறோம்.

    வேலூர் நாராயணி பீடம் கடந்த 1992 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 30 ஆண்டுகளாக பல தரும காரியங்கள் நடந்து வருகிறது. 2007-ம் ஆண்டு ஸ்ரீபுரம் உருவாக்கப்பட்டு தங்க கோவில் அமைக்கப்பட்டது.

    அந்த வளாகத்தில் 70 கிலோ தங்கத்தில் சொர்ண மகாலட்சுமி சிலை அமைக்கப்பட்டு பக்தர்கள் கையால் தற்போது அபிஷேகம் நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து 9 அடி உயரத்தில் சீனிவாச பெருமாளுக்கு சன்னதி அமைக்கப்பட்டது. தொடர்ந்து 1200 கிலோ வெள்ளியால் சக்தி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது உலகில் மிக பெரிய 23 அடி உயர நடராஜர் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது ஆனந்த தாண்டவ ரூபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வழிபடும்போது ஆனந்தம் தானாக வரும்.

    இந்த நடராஜருக்கு தனியாக கோவில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் கோவில் கட்டப்பட்டு சம்பிரதாய சாஸ்திர முறைப்படி விநாயகர் நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.

    அதுவரை இந்த இடத்தில் நடராஜருக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும். இதில் தினம் தோறும் 2 அல்லது 3 மணி நேரம் மட்டும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த சிலை உருவாக காரணம் இருந்த நாராயணி பீட நிர்வாகிகள் மற்றும் இதனை செய்த அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்.

    இந்த சிலையின் மூலம் பல பெருமைகளை கொண்ட வேலூருக்கு மேலும் ஒரு பெருமை வந்து சேர்ந்துள்ளது. இந்த திருமேனியை உலகத்திற்கு அர்ப்பணித்ததற்காக அம்மாவிற்கு மிகுந்த சந்தோசம்.

    ஸ்ரீபுரத்தில் சூரிய வழிபாடு, விநாயகர் வழிபாடு, அம்மன் வழிபாடு, சிவன் வழிபாடு, பெருமாள் வழிபாடு ஆகியவை உள்ளன. இந்து தர்மத்தில் உள்ள ஆறு வழிபாட்டு முறைகளில் சுப்பிரமணியர் வழிபாடு மட்டும் இன்னும் இல்லை .அதுவும் விரைவில் அமையவும். இவ்வாறு அவர் கூறினார்.

    நாராயணி பீட இயக்குனர் சுரேஷ், மேலாளர் சம்பத் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • மன்னன் கண்களுக்கு பொன்னாகத் தெரிந்த சிலை மற்றவர்களுக்குச் செம்பாகத் தெரிய, வருத்தமடைந்த மன்னன் கனவில் பொன்மேனியைச் சிதம்பரத்தில் நிறுவிவிட்டு செப்பு மேனியைத் தென்னாட்டிற்கு எடுத்து செல்ல இறை பணிக்க அவ்வாறு செய்தான்.
    • முதலில் தயாரித்த செப்புமேனியைத் தலைமேல் சுமந்துகொண்டு நமசிவாயமுத்து செல்லும்போது, ‘எந்த இடத்தில் அதன் பாரத்தைத் தாங்கமுடியாமல் இருக்கின்றதோ அங்கு அதை கீழே வைக்க’ என்று அசரீரி எழுந்தது.

    உலகின் முதல் நடராஜர் சிலை நெல்லை மாவட்டம் செப்பறை என்ற தலத்தில் உள்ளது.

    சோழநாட்டை இரணியவர்மன் ஆட்சி செய்து வரும்போது அவனுக்கு ஏற்பட்ட நோயை எந்த வைத்தியத்தினாலும் சரிசெய்ய முடியவில்லை. கானகத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவன் பேச்சு சப்தம் கேட்டு நின்றான்.

    அங்கு இருந்த பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்களை வணங்கி தன் நிலையைக் கூற அவர்கள் அருகிலுள்ள குளத்தில் நீராடி வரும்படி சொல்ல அவ்வண்ணம் நீராடியவனுக்கு அவன் நேய் நீங்கியது கண்டான்.

    திரும்பி வந்து பார்த்தபோது முனிவர்கள் இருவருக்கும் இறைவன் தில்லைக் கூத்து ஆடிக்காட்டிக் கொண்டிருந்தான். மகிழ்ந்த மன்னன் ஊர் திரும்பியதும் தானும் முனிவர் பெருமக்களும் கண்டு களித்த இறைவனின் ஆனந்தக் கூத்தினை உலக உயிர்கள் அனைத்தும் கண்டு களித்திட எண்ணி அந்த உருவத்தைச் சிற்பமாக வடிக்க நமசிவாய முத்து என்ற சிற்பிக்குக் கட்டளையிட்டான்.

    சிற்பியும் அப்பணியைச் செவ்வனே செய்து முடிக்க, செப்பு உலோக மேனியைக் கண்டவனுக்கு பொன்மேனியாக காண ஆவலேற்பட சிற்பியிடம் சொல்லி பொன்னால் சிலை செய்து மகிழ்ந்தான்.

    ஆனால், மன்னன் கண்களுக்கு பொன்னாகத் தெரிந்த சிலை மற்றவர்களுக்குச் செம்பாகத் தெரிய, வருத்தமடைந்த மன்னன் கனவில் பொன்மேனியைச் சிதம்பரத்தில் நிறுவிவிட்டு செப்பு மேனியைத் தென்னாட்டிற்கு எடுத்து செல்ல இறை பணிக்க அவ்வாறு செய்தான்.

    முதலில் தயாரித்த செப்புமேனியைத் தலைமேல் சுமந்துகொண்டு நமசிவாயமுத்து செல்லும்போது, 'எந்த இடத்தில் அதன் பாரத்தைத் தாங்கமுடியாமல் இருக்கின்றதோ அங்கு அதை கீழே வைக்க' என்று அசரீரி எழுந்தது.

    மணப்படை வீடு என்ற ஊரைத் தலையிடமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்த இராமபாண்டியன், வடகரை இராஜவல்லிபுரத்தில் இருந்து தினமும் தாமிரபரணியில் குளித்து தென்கரையில் நெல்லையப்பர்- கந்திமதி ஆலயத்தில் தரிசனம் முடித்தே ஆகாரம் எடுப்பது வழக்கம். அன்று தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட ஆற்றைக்கடந்து தரிசனம் செய்யமுடியவில்லை.

    வருத்தமுற்ற மன்னன் கனவில் சிதம்பரத்திலிருந்து ஸ்தபதி ஒருவர் சிலை ஒன்றை சுமந்து வந்து பாரம் தாங்காமல் அரண்மணைக்கருகில் கீழே வைத்து விடுவார். அப்போது அது மறைந்து இலுப்பை வனத்தில் சதங்கை ஒலிக்கும் இடத்தில் தேடினால் கிடைக்கும். அதை எடுத்து தனியறையில் நிறுவி வழிபடு என்று சொல்லி மறைந்தார். மன்னன் அச்சிலையை இலுப்ப வனத்தில் கண்டு ஒரு செப்பு அறையை ஏற்படுத்தி நிறுவினான். பின்னர் நெல்லையப்பரையும் காந்திமதியையும் எழுந்தருளச் செய்து சிவாலாயம் கட்டினான். இத்தலம் செப்பறை என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ளதே உலகின் முதல் நடராஜர் திருமேனி.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது இராஜவல்லிபுரம். இங்கே தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ளது செப்பறை அழகிய கூத்தர் கோவில்.

    சிதம்பரம் மற்றும் நெல்லை மாவட்டத்திலுள்ள செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கரிவேலாங்குளம், கட்டாரிமங்களம் ஆகிய ஊர்களில் உள்ள ஐந்து ஆடவல்லான் சிலைகள் ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டவை ஆகும்.

    -வீரமணி

    ×