search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகவுர்"

    ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, உங்களைப் போலவே நானும் வாழ்ந்தவன் என நெகிழ்ச்சியாக கூறினார். #RajasthanAssemblyElections #BJP #PMModi #Congress
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக சார்பில் வசுந்தர ராஜே சிந்தியா முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையே, டிசம்பர் மாதம் 7-ம் தேதி அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சிக்கட்டிலில் அமர காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நகவுரா பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர்நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ராகுல் காந்தி குடும்பத்தினர் போன்று நான் சில்வர் ஸ்பூனுடன் பிறக்கவில்லை. எனது பெற்றோரும், தாத்தா - பாட்டியும் ஆட்சியாளர்கள் இல்லை.  நான் உங்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன். உங்களைப் போன்ற வாழ்க்கையை தான் நானும் வாழ்கிறேன்.



    நான் எனது குடும்பத்திற்காக ஓட்டு கேட்கவில்லை. காங்கிரஸ் பரம்பரை அரசியலை உருவாக்க நினைக்கிறது.
    நீங்கள் உங்களின் ஓட்டின் வலிமையை உணர வேண்டும்.

    பாஜக அரசு சாதாரண மக்களுக்கானது. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் எல்லா வளங்களும் பெறவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

    அனைவரும் வளம் பெறவேண்டும் என்பதே பாஜக அரசின் ஒரே மந்திரம். நான்கு தலைமுறைகளாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் இல்லை. மக்களின் வலியை புரிந்து கொள்ளவும் இல்லை என தெரிவித்தார். #RajasthanAssemblyElections #BJP #PMModi #Congress
    ×