search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி தப்பி ஓட்டம்"

    • ரகுகுமார் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
    • தங்கத்தை கம்மல்களாக செய்து கொடுக்கும்படி கொடுத்தார்.

    கோவை

    கோவை செல்வபுரம் அருகே உள்ள தங்கசாமி காலனியை சேர்ந்தவர் ரகுகுமார் (வயது 45). இவர் பொன்னையராஜபுரம் கிருஷ்ணா நகரில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரிடம் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பாபன் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரகுகுமார், பாபனிடம் 18¾ பவுன் தங்கத்தை கம்மல்களாக செய்து கொடுக்கும்படி கொடுத்தார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவர் கம்மல்களை செய்து கொடுக்கவில்லை. அவர் வேலைக்கும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரகுகுமார் அவரது அறைக்கு சென்று தேடி பார்த்தார். ஆனால் பாபன் அங்கு இல்லை. அவர் தங்கத்துடன் தனது சொந்த ஊருக்கு ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

    இது குறித்து ரகுகுமார் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 18¾ பவுன் தங்கத்துடன் சொந்த மாநிலத்துக்கு ஓட்டம் பிடித்த தங்க நகை பட்டறை தொழிலாளியை தேடி வருகிறார்கள்.

    • சிவமணி பலமுறை இளமை பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • 16 வயதில் கர்ப்பமானதால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண். அதே பகுதியை சேர்ந்த சிவமணி (வயது 24) கூலித்தொழிலாளி. இவர் இளம் பெண்ணிடம் சென்று ஆசை வார்த்தை கூறி அவரை ஏமாற்றி கடந்த மார்ச் 16-ம் தேதி பண்ருட்டி திருவதிகை கோவிலில் சிவமணி இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    இதன் பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளம் பெண்ணை சிவமணி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து சிவமணி அந்த பெண்ணை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிவமணி பலமுறை இளமை பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணை சிவமணி சிகிச்சைக்காக சென்னையிலிருந்து கடலூருக்கு அனுப்பி வைத்துள்ளார். சிவமணி வராததால் சந்தேகம் அடைந்த இளம்பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். மேலும் ஆஸ்பத்திரியில் 16 வயது இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தனர்.

    மேலும் 16 வயதில் கர்ப்பமானதால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வள்ளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் குழந்தை திருமண தடை சட்டம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த சிவமணியை வலை வீசி தேடி வருகின்றனர். 

    ×