search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடரும் விபத்து"

    • சுற்றுலா பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் வைக்க நடவடிக்கை
    • மலைப்பாதையில் கீழ்நோக்கி செல்லும்போது அதிவேகமாக செல்வதுடன் பிரேக் மற்றும் கிளட்ச் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

    அருவங்காடு,

    மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான மலைப்பாதையில் விபத்துகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. குன்னூர் மலைப்பாதையில் கடந்த 54 நாட்களில் நடந்த சாலை விபத்துக்களில் 9 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    கடந்த மாதம் 30-ந்தேதி மரப்பாலம் அருகே தென்காசி மா வட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பேருந்து கவிழ்ந்தது. இதில் 9 பேர் பலியாயினர். 30 பேர் காயம் அடைந்தனர். இந்த மாதம் 8-ந்தேதி மலைப்பா தையில் சென்ற ஒரு சுற்றுலா பஸ் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் அந்த பஸ்சில் பயணித்த மாணவ மாணவிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    மேலும் கடந்த 10-ந் தேதி நடந்த கார் விபத்தில் கூடலூரை சேர்ந்த சிறுமி உட்பட 2 பேர் காயம் அடைந்தனர். பர்லியாறு பகுதியில் ஒரு சுற்றுலா பஸ் விபத்துக்கு உள்ளாகியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மாவட்டத்துக்கு வரும் ஒருசில சுற்றுலா பஸ்கள் மலைப்பாதையில் செல்லும்போது விபத்துக்கு உள்ளாகும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    இது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதும க்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்துக்கு சமவெளி பகுதியில் இருந்து எண்ணற்ற சுற்றுலா பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் வெளிமாநிலம், வெளி நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கார்கள் மூலம் வந்து செல்கின்றனர்.

    நீலகிரிக்கு சுற்றுலா வரும் டிரைவர்கள் பெரும்பாலும் போக்கு வரத்து விதிகளை பின்பற்றுவது இல்லை.

    அவர்கள் சம வெளி பகுதியில் செல்வது போல வாகனங்களை வேகமா கவும், கவனகுறை வாகவும் இயக்குகின்றனர். இதனால் மலைப்பாதையின் பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

    குறிப்பாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்படும் வாக னங்கள் மலைப்பாதையில் கீழ்நோக்கி செல்லும்போது அதிவேகமாக செல்வதுடன் பிரேக் மற்றும் கிளட்ச் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இதனால் டயர்களில் உள்ள டிரம் சூடாகி பிரேக் நிற்பதில்லை. இதனால் வாகனங்கள் கட்டுப்பா ட்டை இழந்து விபத்து ஏற்படும் சூழல் தொடர்க தையாக உள்ளது.

    குறிப்பாக மலைப்பா தையில் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தை தவிர்த்து மிகுந்த கவனத்து டன் 20 முதல் 30 கி.மீ வேகத்தில் சென்றால் பாதிப்புகள் நிகழாது. இதற்காக அங்கு பிரத்யேக சாலை விதிகள் உள்ளன.

    இருந்தபோதிலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் பின்பற்றுவது இல்லை. பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் விபத்துகள் மேலும் அதி கரிக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே சுற்றுலா பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கல்லாறு மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதி களில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதன் ஒரு பகுதியாக மலைப்பாதையில் உள்ள சாலை விதிகள் மற்றும் வாகனங்களை எவ்வாறு பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மாந்தோப்பு சொசைட்டி காலனி பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் சிதலமடைந்து உள்ளது.
    • பல மாதங்கள் ஆகியும் உடைத்த கல்வெட்டை சீர் செய்யாமல் இருப்பதால் அவ்வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் முதியோர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்டது இலக்கியம்பட்டி பஞ்சாயத்து.

    இது தமிழகத்தில் 15 வார்டுகள் உடைய மிகப்பெரிய பஞ்சாயத்தா கவும், தருமபுரி மாவட்டத்தின் முக்கிய அரசு தலைமை அலுவலகங்கள் இயங்கி வரும் பஞ்சாய த்தாகவும் உள்ளது.

    இந்த நிலையில் மக்களின் அடிப்படைத் தேவைகளான கழிவுநீர் கால்வாய் தூர்வாரி புதுப்பித்தல், தெருவிளக்கு, குடிநீர், உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்யாமல் மெத்தன போக்குடன் இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மாந்தோப்பு சொசைட்டி காலனி பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் சிதலமடைந்து உள்ளது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படு கிறது.

    மேலும் மாந்தோப்பு, காளியப்ப செட்டி காலனி, நெல்லி நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் 1000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு வசிக்கும் மக்கள் இச்சாலையை முக்கிய சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இப்பகுதிகளுக்கு செல்ல பிடமனேரி ஏரிக்கரை முக்கிய சாலையில் இருந்து சொசைட்டி காலனி வழியாக தான் செல்ல வேண்டும்.

    சொசைட்டி காலனி உள் நுழையும் பிரிவு சாலையில் 40 அடி அகலத்திற்கு கழிவுநீர் கால்வாய், சிறிய கல்வெட்டு உள்ளது.

    இந்த கல்வெட்டின் அடியில் செல்லும் கழிவு நீர் கால்வாய் பல வருடங்களாக தூர்வாரப்படாததால் கால்வாய் அடைத்து கழிவு நீர் ரோட்டில் சென்றது.

    இது சம்பந்தமாக பொது மக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து ஒரு மாதத்திற்கு பின் பஞ்சாயத்து நிர்வாகம் கல்வெட்டை உடைத்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுத்தது.

    பின்னர் பல மாதங்கள் ஆகியும் உடைத்த கல்வெட்டை சீர் செய்யாமல் இருப்பதால் அவ்வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் முதியோர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் உள்ள பகுதி என்பதால் கார், இருசக்கர வாகனம் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    கட்டுமான பணிக்காக வரும் கனரக வாகனங்கள் திரும்ப வழியின்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.

    தொடர்ந்து கல்வெட்டு பள்ளத்தில் கார் இருசக்கர வாகனம் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது.

    பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இதனை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கல்வெட்டை புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த சில மாதங்களாக கனரக வாகனங்கள் அதிக அளவில் பர்கூர் மலை பாதை வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்
    • பர்கூர் மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் கவிழ்வதும் பழுதாகி நிற்பதும் தொடர்கதையாக உள்ளது

    அந்தியூர்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    திம்பம் மலைப்பாதை வழியாக செல்வதனால் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நின்று விடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தொடர்ந்து இந்த வழித்தடத்தை கனரக வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.

    கர்நாடக மாநிலத்திற்கு உரம்மூட்டையை ஏற்றுக் கொண்டு சென்ற லாரி பர்கூர் மலைப்பாதை யில் லாரியின் பிரேக் பிடிக்காமல் சாலையின் பக்கவாட்டில் உள்ள பாறையில் மோதி கட்டை ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் உரமூட்டைகள் அனைத்தும் சாலையில் நடுவே சிதறி கிடந்தன.

    இதில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினார். இதனால் பர்கூர் அந்தியூர் மலைப்பாதையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரவு 11 மணிக்கு போக்கு வரத்து சீர் செய்யப்பட்டது. சாலையில் சிதறி கிடந்த உரமூட்டைகள் மாற்று லாரியில்ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

    போக்குவரத்து சரி செய்யும் வரை பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், தங்கவேல் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதனால் 6 மணி நேர த்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பர்கூர் மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் கவிழ்வதும் பழுதாகி நிற்பதும் தொடர்கதையாக உள்ளது.மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள்.லாரிக்கு எத்தனை டன் ஏற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு மட்டும் பொருட்களை ஏற்றி மலை ப்பாதையில் வருகிறதா என்று பர்கூர் சோதனை சாவடியிலும் வரட்டு பள்ளம் செக் போஸ்ட் பகுதியிலும் சோதனை செய்த பின்னரே அனுமதி த்தால் இந்த விபத்துக்கள் தவிர்க்கலாம் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    லாரியில் முறையான எப் சி செய்திருக்கிறார்களா என்று அனைத்தையும் சோதனை செய்த பின் அனுப்பினால் விபத்துக்கள் குறையும்.

    ×