search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பர்கூர் மலைப்பாதையில்"

    • கடந்த சில மாதங்களாக கனரக வாகனங்கள் அதிக அளவில் பர்கூர் மலை பாதை வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்
    • பர்கூர் மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் கவிழ்வதும் பழுதாகி நிற்பதும் தொடர்கதையாக உள்ளது

    அந்தியூர்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    திம்பம் மலைப்பாதை வழியாக செல்வதனால் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நின்று விடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தொடர்ந்து இந்த வழித்தடத்தை கனரக வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.

    கர்நாடக மாநிலத்திற்கு உரம்மூட்டையை ஏற்றுக் கொண்டு சென்ற லாரி பர்கூர் மலைப்பாதை யில் லாரியின் பிரேக் பிடிக்காமல் சாலையின் பக்கவாட்டில் உள்ள பாறையில் மோதி கட்டை ஏற்றிக்கொண்டு வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் உரமூட்டைகள் அனைத்தும் சாலையில் நடுவே சிதறி கிடந்தன.

    இதில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினார். இதனால் பர்கூர் அந்தியூர் மலைப்பாதையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரவு 11 மணிக்கு போக்கு வரத்து சீர் செய்யப்பட்டது. சாலையில் சிதறி கிடந்த உரமூட்டைகள் மாற்று லாரியில்ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

    போக்குவரத்து சரி செய்யும் வரை பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், தங்கவேல் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதனால் 6 மணி நேர த்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பர்கூர் மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்கள் கவிழ்வதும் பழுதாகி நிற்பதும் தொடர்கதையாக உள்ளது.மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள்.லாரிக்கு எத்தனை டன் ஏற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு மட்டும் பொருட்களை ஏற்றி மலை ப்பாதையில் வருகிறதா என்று பர்கூர் சோதனை சாவடியிலும் வரட்டு பள்ளம் செக் போஸ்ட் பகுதியிலும் சோதனை செய்த பின்னரே அனுமதி த்தால் இந்த விபத்துக்கள் தவிர்க்கலாம் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    லாரியில் முறையான எப் சி செய்திருக்கிறார்களா என்று அனைத்தையும் சோதனை செய்த பின் அனுப்பினால் விபத்துக்கள் குறையும்.

    • வாகனங்கள் பழுதாகி நின்று கடும் போக்கு வரத்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • ஓட்டுநர் உரிமத்தை சரி பார்த்து அனுப்ப வேண்டும்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த சாலை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் டாரஸ் லாரிகள், பாரங்கள் ஏற்றி வரும் லாரிகள் ஆசனூர் மற்றும் மாதேஸ்வரன் கோவில் மலைப்பாதை வழியாக அனுமதிக்க ப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்தியூர்- பர்கூர் மலைப்பாதை வழியாக அதிக அளவில் பாரம் ஏற்றி வரும் லாரிகள் வந்து செல்கிறது.

    இந்த நிலையில் இந்த மலைப்பாதை வழியாக வரும் லாரிகள், சரக்கு வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சாலையின் நடுவே அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு இந்த வழித்தடம் புதியதாக இருப்பதால் வளைவுகள் முக்கிய இடங்கள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்வதும் தொடர்கதையாக உள்ளது.

    கடந்த 30 நாட்களில் மட்டும் நாமக்கலில் இருந்து மைசூருக்கு செல்வதற்கு சோப்பு பாரம் ஏற்றி வந்த லாரி, கல்பாரம் ஏற்றி வந்த லாரி, நாமக்கலில் இருந்து மைசூருக்கு செல்வதற்காக பாரங்கள் ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே பழுதாகி நின்று விடுவது அடிக்கடி நடக்கிறது. இதே போல் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதாகி நின்று கடும் போக்கு வரத்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த ரோட்டில் பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு அமைக்கப்பட்ட உள்ள சோதனைச் சாவடி பகுதி களில் வளைவுகள் அதிகமாக உள்ளது.

    எனவே வாகன ஓட்டிகள் வேக த்தை கட்டுப்படுத்தி மெதுவாக வாகனத்தை இயக்கிச் செல்லுங்கள் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வாகன ஓட்டிகள் மது போதையில் இருக்கின்றார்களா? என்று மலைப்பாதை வழியாக வரும் வாகனங்களை வரட்டு பள்ளம் சோதனை சாவடியில் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே அனுப்பப்படுகிறது.

    சோதனை செய்யும் போது வாகன ஒட்டிகளுக்கு அறிவுரை கூறி மலை பாதையில் மெதுவாக செல்லுங்கள். பின்னால் வரும் இரு சக்கர வாக னத்திற்கு வழி விடுங்கள். வளைவுகளில் ஒலிபெரு க்கியை (ஹாரன்)அடித்து வளைவில் வருபவர்களுக்கு தெரியும்படி செய்யுங்கள். வளைவுகளில் மற்றொரு வாகனத்தை முந்தி செல்லாதீர்கள் உள்ளிட்ட அறிவுரைகளை எடுத்துக் கூறிஅனுப்ப வேண்டும்.

    மேலும் வாகன டிரை வர்களின் ஓட்டுநர் உரிம த்தை சரி பார்த்து அனுப்ப வேண்டும். லாரியில் எத்தனை டன் அளவிற்கு ஏற்றி செல்ல வேண்டுமோ அந்த அளவிற்கு ஏற்றி செல்வதற்கு உண்டான இடை நிலையத்தில் சீட்டு களை வாகனத்தில் வைத்திருக்கிறார்களா என்பதையும் பார்த்து மலைப்பாதையின் மேலே அனுமதிக்க வேண்டும் என்று தன்னல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றார்கள்.

    இது போன்ற நடவடிக்கை கள் எடுத்தால் விபத்துகளும் குறையும் என்றும், பழுதாகி நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறையும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • கடந்த மாதம் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது.
    • பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் பாறைகள் ரோட்டில் விழுந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதை அமைந்து உள்ளது. இந்த மலைப் பாதையில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்ல க்கூடிய தெசிய நெடுஞ் சாலை உள்ளது.

    இந்த மலைப்பாதை வழியாக தினமும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஏராளமான கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் வந்து செல்கிறது.

    இந்த நிலையில் சத்திய மங்கலம், திம்பம் வனப்பகுதி மலைப்பாதை 23 கொண்டை ஊசி வளைவு கள் கொண்டது. இந்த வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகிறது.

    திம்பம் வனப்பகுதி ரோட்டில் அடிக்கடி வாகன ங்கள் பழுதாகி நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    இதனால் மாற்று பாதையாக அந்தியூர், பர்கூர் மலைப்பாதை வழியாக பல கனரக வாகனங்கள் மைசூருக்கு சென்று வருகிறது.

    மேலும் நேரம் விரையம் ஏற்படு வதும் தவிர்க்கபபடுவதால் பர்கூர் மலை பாதையை வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தி வரு கின்றனர்.

    இதையடுத்து பர்கூர் மலை்பாதை சாலைகள் அந்தியூரில் இருந்து தமிழக எல்லைப் பகுதி வரை விரிவாக்கம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்தியூர் நகரமே தண்ணீரில் மூழ்கியது.

    மேலும் மைசூர் செல்லும் பர்கூர் மலை ப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பல இடங்களில் பாறைகள் ரோட்டில் விழுந்தது. இதை யடுத்து ஒரு சில இடங்களில் சரி செய்யப்பட்டது. பெருபாலான இடங்களில் ரோட்டோரங்களில் பாறை கள் அப்படியே கிடக்கிறது.

    இதே போல் வரட்டு பள்ளம் அணைப்பகுதியில் இருந்து செட்டிநொடு, தாமரைக்கரை, பர்கூர் தட்டகரை, கர்கேகண்டி வரை சாலைகளில் சுமார் 24-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு, பாறைகள் உருண்டும், சாலையில் மரங்கள் முறிந்தும் கிடக்கிறது.

    இதனால் இந்த வழியாக கனரக வாகனங்கள் மற்றும் கார், வேன் போன்ற வாக னங்கள் செல்ல முடியாமல் உள்ளது. மேலும் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு சில 4 சக்கர வாகனங்கள் மட்டுமே தட்டுதடுமாறி சென்று வருகிறது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    எனவே பர்கூர் மலை ப்பாதையில் ரோட்டோரம் கிடக்கும் பாறைகள் மற்றும் மரக்கிளைகளை வனத்துறை யினர் மற்றும் ேதசிய நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் மலைப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

    ×