search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பூச திருவிழா"

    • நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    • பிப்ரவரி 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி திருவிழா நடைபெறுகிறது.

    நெல்லை:

    நெல்லை நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    கொடியேற்றம்

    இதேபோல் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்து டன் தொடங்குகிறது.

    4-ம் நாளான 29-ந்தேதி நண்பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    பிப்ரவரி 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி திருவிழா வரலாற்று சிறப்புமிக்க கைலாசபுரத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகள் 4-ந்தேதி நண்பகல் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு, திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பாலம் வழியாக கைலாசபுரத்தை வந்தடைவர்.

    தாமிரபரணியில் தீர்த்தவாரி முடிந்து விஷேச தீபாராதனைக்கு பின்பு மாலை 6 மணிக்கு சுவாமிகள் மீண்டும் புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு வழியாக பாரதியார் தெரு, தெற்கு புதுத்தெரு, ரத வீதி சுற்றி கோவிலுக்கு வந்தடைவார்.

    பிப்ரவரி 5-ந்தேதி சவுந்தர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சவுந்தர சபா நடராஜர் நடனக்காட்சி நடைபெறுகிறது. 6-ந்தேதி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி என்ற வெளித் தெப்பக்குளத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    • தங்க ரதத் தில் சுவாமி திருவீதி உலா வருகிறார்.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    வடவள்ளி,

    கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திரு விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    29-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.அன்று காலை 6.45 மணி முதல் 7.30 மணிக்குள் கோவில் முன்புறமுள்ள கொடிமரத்தில் கிருத்திகை சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்படுகிறது. இதை தொடர்ந்து கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருகிறார்.

    மாலை 4 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனை, மாலை 5 மணிக்கு அனந்தசயனத்தில் சுவாமி திருவீதி உலா, மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜை ஆகியவை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

    பிப்ரவரி 3-ந் தேதி மாலை தங்கமயில் வாகனத்தில் சுப் பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று இரவு 7.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தருகிறார்.

    தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாண விழா பிப்ரவரி 4-ந் தேதி காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யா ணம் நடைபெறுகிறது.

    காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 11 மணியளவில் வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். பகல் 12 மணி அளவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது.

    சுப்பிரமணியசுவாமி, வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள்கிறார். தேரை பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    தம்பதி சமேதராக சுவாமி கோவிலை சுற்றி வீதி உலா வருகிறார். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்படுகிறது.

    தெப்பத் திருவிழா 5-ந்தேதி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12மணிக்கு ஆடுமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், குதிரை வாகனத் தில் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.

    இரவு7.30 மணிக்கு தெப்பத் திருவிழா, 6-ந் தேதி 12 மணிக்கு மகா தரிசனம், சுவாமி திருவீதி உலா, மாலை 4.30 மணிக்கு கொடி இறக்கு தல் நிகழ்ச்சி நடக்கிறது.7-ந் தேதி வசந்த உற்சவம், மாலை 6 மணிக்கு தங்க ரதத் தில் சுவாமி திருவீதி உலா வருகிறார். இத்துடன் தைப் பூச விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அடுத்த மாதம் தைப்பூசம் நடைபெறுகிறது.
    • கோவில் அடிவாரத்தில் தேர்நிலை அருகில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    வீரபாண்டி : 

    பொங்கலூர் ஒன்றியம், அலகுமலையில் அகிலாண்ட விநாயகர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆதி கைலாசநாதர், ஸ்ரீ வலுப்பூரம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர் என அனைத்து மூர்த்திகளுடன் அருள்பாலிக்கும் முத்துகுமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அடுத்த மாதம் தைப்பூசம் நடைபெறுகிறது.இதையொட்டி திருத்தேர் முகூர்த்தக்கால் அமைக்கும் வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது. கோவில் அடிவாரத்தில் தேர்நிலை அருகில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  

    ×