search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பத்திர விவகாரம்"

    • முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.
    • ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் இரும்பு சங்கிலி மற்றும் பூட்டுடன் நிர்வாகிகள் திரண்டு சென்று பாரத ஸ்டேட் வங்கிக்கு பூட்டு போட முயன்றனர்.

    நெல்லை:

    தேர்தல் பத்திரம் மூலம் மத்திய அரசு மோசடியில் ஈடுபட்டதாக கூறி அதனை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றாமல் பாரத ஸ்டேட் வங்கி காலதாமதம் செய்வதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை பாளை பஸ் நிலையம் அருகே உள்ள வங்கி முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் பிரிவு மாநில துணைத் தலைவர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கவி பாண்டியன், சொக்கலிங்க குமார், பொதுச்செயலாளர் மகேந்திரன், ஓ.பி.சி. பிரிவு டியூக் துரைராஜ், வட்டார துணை தலைவர் பாண்டிய ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் இரும்பு சங்கிலி மற்றும் பூட்டுடன் நிர்வாகிகள் திரண்டு சென்று பாரத ஸ்டேட் வங்கிக்கு பூட்டு போட முயன்றனர்.

    அப்போது அங்கே பாதுகாப்பு பணிக்கு நின்ற பாளை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் மற்றும் பாளை இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×