search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய ஒற்றுமை தினம்"

    • தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
    • ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ் மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது.

    இதில் கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமையில் மாணவ-மாணவிகள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சேக் அப்துல்லா தேச ஒற்றுமையை வலியுறுத்தி பேசினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ் மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.

    • தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நடந்தது
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

    வேலூர்:

    தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு வேலூர் தலைமை தபால் நிலையம் சார்பாக பொதுமக்கள் இடையே தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடந்தது. இந்த பேரணி தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி வேலூர் வடக்கு போலீஸ் நிலையம்,வெங்கடேச பெருமாள் கோவில் வழியாக, இறுதியில் தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தது.

    பேரணியில் வேலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் ,வேலூர் தலைமை தபால் நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி முரளி, வேலூர் உதவி கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி வீரன் உட்பட 100-க்கும் மேற்பட்ட தபால் நிலைய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் “தேசிய ஒற்றுமை தினம்“ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • “தேசிய ஒற்றுமை தினம்“ உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்சேக் முகையதீன் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று"தேசிய ஒற்றுமை தினம்" உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    மறைந்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், அக்டோபர் 31-ஆம் தேதியன்று நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் இந்திய அரசு சார்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. தேசிய ஒருமைப்பாட்டின் மூலம் சுதந்திர இந்தியாவின் சிற்பியாக சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பை இந்தச் சந்தர்ப்பம் அங்கீகரிக்கிறது.

    தேசத்தின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தாங்கும் நமது மக்களின் உள்ளார்ந்த வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் நாள் இதுவாகும். இதை முன்னிட்டு "தேசிய ஒற்றுமை தினம்" உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்படி, மாவட்ட வருவாய் அலுவலர் "இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும், உளமார உறுதியளிக்கிறேன்.

    சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்" என "தேசிய ஒற்றுமை தினம்" உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    • சீனா-இந்தியா போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
    • சீனா-இந்திய போர் நவம்பர் 21-ம் தேதி வரை நீடித்தது.

    இந்தியாவில் அக்டோபர் 20 ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் தான் 1962-ம் ஆண்டு சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இது இந்தியா-சீனா போராக உருவெடுத்தது.

    இந்த போரில் இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தை பரைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சீன தாக்குதலை எதிர்கொண்டு தாயகத்தை காப்பாற்ற இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை இந்த நாளில் போற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

    இதோடு 1962 சீனா-இந்தியா போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தேசிய ஒற்றுமை நாள் என்பது நம் தேசத்தை பாதுகாக்க ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை அனைத்து இந்தியர்களுக்கும் நினைவூட்டும் வகையிலான முயற்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    அக்டோபர் 20-ம் தேதி இந்தியாவின் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களை சீனா ஆக்கிரமித்த போது தொடங்கிய சீன-இந்திய போர் நவம்பர் 21-ம் தேதி வரை நீடித்தது. இதன் பிறகு, சீனா இந்தியா பிரதேசங்களில் இருந்து விலக துவங்கியது. இந்த போரில் இந்தியா தரப்பில் 3 ஆயிரத்து 250 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    ×