search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் விழிப்புணர்வு பேரணி
    X

    வேலூரில் விழிப்புணர்வு பேரணி நடந்த காட்சி.

    வேலூரில் விழிப்புணர்வு பேரணி

    • தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நடந்தது
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

    வேலூர்:

    தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு வேலூர் தலைமை தபால் நிலையம் சார்பாக பொதுமக்கள் இடையே தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடந்தது. இந்த பேரணி தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி வேலூர் வடக்கு போலீஸ் நிலையம்,வெங்கடேச பெருமாள் கோவில் வழியாக, இறுதியில் தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தது.

    பேரணியில் வேலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் ,வேலூர் தலைமை தபால் நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி முரளி, வேலூர் உதவி கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி வீரன் உட்பட 100-க்கும் மேற்பட்ட தபால் நிலைய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×