search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி சாவு"

    • அப்போது முருகேசனை பாம்பு கடித்தது.
    • செல்லும் வழியில் மயங்கி விழுந்து விட்டார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த கள்ளியம்புதூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 33). இவர் அங்குள்ள பனியன் உற்பத்தி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள காட்டு பகுதிக்கு சென்றார்.

    அப்போது அவரை பாம்பு கடித்தது. ஆனால் அவர் தன்னை பாம்பு கடித்து என்று தெரியாமல் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    செல்லும் வழியில் மயங்கி விழுந்து விட்டார். மறுநாள் காலை அவ்வழியாக சென்றவர்கள். இது குறித்து அவருடைய வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அவருடைய உறவினர்கள் முருகேசனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட தேவராஜ் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
    • உடனே அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் சோதனை சாவடி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற் சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் தேவராஜூக்கு இன்னும் திருமணமாகாததால், அடிக்கடி அவர் மதுக்குடித்து விட்டு வீட்டிற்கு வந்து பெற்றோ ரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட தேவராஜ் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×