search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பு கடித்து தொழிலாளி சாவு
    X

    பாம்பு கடித்து தொழிலாளி சாவு

    • அப்போது முருகேசனை பாம்பு கடித்தது.
    • செல்லும் வழியில் மயங்கி விழுந்து விட்டார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த கள்ளியம்புதூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 33). இவர் அங்குள்ள பனியன் உற்பத்தி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள காட்டு பகுதிக்கு சென்றார்.

    அப்போது அவரை பாம்பு கடித்தது. ஆனால் அவர் தன்னை பாம்பு கடித்து என்று தெரியாமல் வீட்டிற்கு நடந்து சென்றார்.

    செல்லும் வழியில் மயங்கி விழுந்து விட்டார். மறுநாள் காலை அவ்வழியாக சென்றவர்கள். இது குறித்து அவருடைய வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அவருடைய உறவினர்கள் முருகேசனை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×