search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து தொழிலாளி சாவு
    X

    விஷம் குடித்து தொழிலாளி சாவு

    • இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட தேவராஜ் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
    • உடனே அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் சோதனை சாவடி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற் சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் தேவராஜூக்கு இன்னும் திருமணமாகாததால், அடிக்கடி அவர் மதுக்குடித்து விட்டு வீட்டிற்கு வந்து பெற்றோ ரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட தேவராஜ் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×