search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்ஆப்பிரிக்கா பாகிஸ்தான் தொடர்"

    செஞ்சூரியனில் இன்று தொடங்கிய முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான் #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஸ்டெயின் வீசினார். 2-வது ஓவரை ரபாடா வீசினார். 2-வது ஓவரின் முதல் பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் இமாம்-உல்-ஹக் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

    அடுத்து பகர் சமான் உடன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தார். பகர் சமான் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெயின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 422 விக்கெட்டுக்களுடன் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

    ஷான் மசூத் 19 ரன்னில் வெளியேறினார். அசார் அலி தாக்குப்பிடித்து விளையாட ஆசாத் ஷபிக் 7 ரன்னில் வெளியேறினார். தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்.

    பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 86 ரன்னாக இருக்கும்போது அசார் அலி 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த கேப்டன் சர்பிராஸ் அகமது (0), முகமது அமிர் (1) அடுத்தடுத்து வெளியேற, பாகிஸ்தான் 111 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

    மறுமுனையில் நின்றிருந்த பாபர் ஆசம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பாபர் ஆசம் 58 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். ஸ்டெயின் வீசிய ஓவரில் நான்கு பவுண்டரிகள் விரட்டினார்.



    அணியின் ஸ்கோர் 178 ரன்னாக இருக்கும்போது பாபர் ஆசம் 79 பந்தில் 15 பவுண்டரியுடன் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு பாபர் ஆசம் ஹசன் அலி உடன் இணைந்து 67 ரன்கள் சேர்த்தார். ஹசன் அலி 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 47 ஓவர்களில் 181 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பாபர் ஆசம் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆலிவியர் 6 விக்கெட்டுக்களும், ரபாடா 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தினார். பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
    டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். இவர் டெஸ்ட் போட்டியில் 421 ரன்கள் வீழ்த்தி பொல்லாக் உடன் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சமன் செய்திருந்தார்.

    கடந்த ஜூலை மாதம் இலங்கையில் நடைபெற்ற டெஸ்டில் ஸ்டெயின் விளையாடினார். ஆனால் இரண்டு இன்னிங்சிலும் ஒரு விக்கெட் கூட அவரால் வீழ்த்த முடியவில்லை. இதனால் பொல்லாக் சாதனையை முறியடிக்க முடியாமல் இருந்தார் ஸ்டெயின்.



    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் ஸ்டெயின் தனது 4-வது ஓவரின் முதல் பந்தில் தொடக்க வீரர் பகர் சமானை 12 ரன்னில் வீழ்த்தினார். இதன்மூலம் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை படைத்தார்.
    ஒரு விக்கெட் வீழ்த்தி பொல்லாக் சாதனையை முறியடித்தால் போதாது, மிகப்பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று ஸ்டெயின் தெரிவித்துள்ளார். #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். 35 வயதாகும் இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே 400 விக்கெட்டுக்களை சாய்த்து சாதனை புரிந்து இருந்தார். தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பொல்லாக் 421 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டாக இருந்தது.

    கடந்த முன்றரை ஆண்டுகளில் காயத்தால் அவதிப்பட்ட ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா அணியில் தொடர்ச்சியான இடம்பெறாத நிலை ஏற்பட்டது. இதனால் மேலும் 21 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தி பொல்லாக்கின் சாதனையை சமன் செய்ய முடிந்தது.

    நாளை தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடக்கிறது. இந்த போட்டியில் ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தினாலே அதிக விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையைப் பெறுவார்.

    ஆனால், ஒரு விக்கெட் வீழ்த்தி பொல்லாக் சாதனையை முறியடிப்பது பெரிய விஷயம் அல்ல. அதைவிட அதிக அளவில் சாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்டெயின் கூறுகையில் ‘‘நான் ஒரு விக்கெட் பெறுவதை விட அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்ற வேண்டும். பொல்லாக்கை விட ஒரு விக்கெட் அதிகமாக பெறுவதால் என்னை பாதுகாத்துக் கொள்ள முடியாது. பெரிய இலக்காக இருக்க வேண்டும்.

    அதிக விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனை நடந்தால் மிக சிறப்பானதாக இருக்கும். இதுபோன்ற சாதனைகள் படைப்பது கவுரவம். இது எனக்கு மிகப்பெரிய கவுரவத்தை கொடுக்கும். ஆனால், சாதனையை முறியடித்த பிறகு, மேலும் ஒரு சாதனை படைக்க முயற்சி செய்வேன். இதுதான் எனது திட்டம்’’ என்றார்.
    பயிற்சி ஆட்டத்தில் அசார் அலி, பாபர் ஆசம் சதம் விளாசியதால், தென்ஆப்பிரிக்கா தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இருக்கிறது பாகிஸ்தான் #SAvPAK
    பாகிஸ்தான் அணி மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதற்குமுன் பாகிஸ்தான் அணி ‘கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன்’ அணிக்கெதிராக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. இந்த ஆட்டம் கடந்த 19-ந்தேதி (நேற்று முன்தினம்) தொடங்கியது.

    இதற்கு முன் கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது, தொடக்க வீரர் ரிச்சார்ட்ஸ் 98 ரன்களும், கேப்டன் அக்கர்மான் 103 ரன்களும் விளாச 84.3  ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் சேர்த்து கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க பேட்ஸ்மேன்கள் இமாம்-உல்-ஹக் (23), பகர் சமான் (19) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷான் மன்சூட் 41 ரன்கள் சேர்த்தார். ஆனால் அசார் அலி (100), பாபர் ஆசம் (104) சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். இருவரின் சதத்தால் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.


    அசார் அலி

    பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    முதல் இன்னிங்சில் முன்னணி வீரர்களான அசார் அலி, பாபர் ஆசம் சதம் அடித்துள்ளதால், தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ‘பாக்சிங் டே’ டெஸ்டில் அதிக அளவில் ரன்கள் குவித்துவிடலாம் என்ற பாகிஸ்தானுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
    ×