search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்ஆப்பிரிக்கா தொடர்: பயிற்சி ஆட்டத்தில் அசார் அலி, பாபர் ஆசம் சதம்- நம்பிக்கையில் பாகிஸ்தான் அணி
    X

    தென்ஆப்பிரிக்கா தொடர்: பயிற்சி ஆட்டத்தில் அசார் அலி, பாபர் ஆசம் சதம்- நம்பிக்கையில் பாகிஸ்தான் அணி

    பயிற்சி ஆட்டத்தில் அசார் அலி, பாபர் ஆசம் சதம் விளாசியதால், தென்ஆப்பிரிக்கா தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இருக்கிறது பாகிஸ்தான் #SAvPAK
    பாகிஸ்தான் அணி மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதற்குமுன் பாகிஸ்தான் அணி ‘கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன்’ அணிக்கெதிராக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. இந்த ஆட்டம் கடந்த 19-ந்தேதி (நேற்று முன்தினம்) தொடங்கியது.

    இதற்கு முன் கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது, தொடக்க வீரர் ரிச்சார்ட்ஸ் 98 ரன்களும், கேப்டன் அக்கர்மான் 103 ரன்களும் விளாச 84.3  ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் சேர்த்து கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க பேட்ஸ்மேன்கள் இமாம்-உல்-ஹக் (23), பகர் சமான் (19) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷான் மன்சூட் 41 ரன்கள் சேர்த்தார். ஆனால் அசார் அலி (100), பாபர் ஆசம் (104) சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். இருவரின் சதத்தால் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.


    அசார் அலி

    பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய கிரிக்கெட் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    முதல் இன்னிங்சில் முன்னணி வீரர்களான அசார் அலி, பாபர் ஆசம் சதம் அடித்துள்ளதால், தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ‘பாக்சிங் டே’ டெஸ்டில் அதிக அளவில் ரன்கள் குவித்துவிடலாம் என்ற பாகிஸ்தானுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×