search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்ஆப்பிரிக்கா பாகிஸ்தான் தொடர்"

    செஞ்சூரியனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் 27 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று செஞ்சூரியனில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பாபர் ஆசம் (23), பகர் சமான் (17) ஓரளவு ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 26 ரன்களும், கேப்டன் சோயிப் மாலிக் 18 ரன்களும் சேர்த்தனர்.

    சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 8 பந்தில் 3 சிக்சருடன் 22 ரன்கள் விளாச, பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஹென்ரிக்ஸ் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஹென்ரிக்ஸ் (5), மலன் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டஸ்சன் 35 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார்.


    டஸ்சன்

    அதன்பின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 29 பந்தில் 55 ரன்கள் விளாசினாலும், தென்ஆப்பிரிக்காவால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இதனால் பாகிஸ்தான் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 3 விக்கெட்டும் சதாப் கான், பஹீம் அஷ்ரப் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    டி20 கிரிக்கெட் தொடரில், தொடர் வெற்றிகளை குவித்து வந்த பாகிஸ்தான் அணிக்கு தென்ஆப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. #SAvPAK
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ந்து தொடர்களை கைப்பற்றி வந்த அந்த அணி, ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

    பாகிஸ்தான் அணி கடந்த 10 தொடர்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் (இரண்டு முறை), உலக லெவன் அணி, இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக வெற்றி வாகை சூடியிருந்தது. இது உலக சாதனையாகும்.

    இந்நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக சேஸிங்கில் தோல்வியை சந்திக்காக பாகிஸ்தான், கேப் டவுனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.



    நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியால் 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 0-2 என இழந்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து டி20 தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்து வந்ததற்கு தென்ஆப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
    சர்பிராஸ் அகமதுக்கு ஐசிசி நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஏமாற்றம் அளிக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #ICC #PCB
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோ நான்கு விக்கெட் வீழ்த்தியதுடன், அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

    37-வது ஓவரின்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த பெலுக்வாயோவை நோக்கி பாகிஸ்தான் அணி கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பிராஸ் அகமது இனவெறி குறித்து ஸ்லெட்ஜிங் செய்தார். ஸ்டம்பில் இருந்த மைக்கில் சர்பிராஸ் அகமதின் குரல் தெளிவாக பதிவாகியிருந்ததால் சர்ச்சை கிளம்பியது.

    தனது கருத்துக்கு டுவிட்டர் மூலம் மன்னிப்பு கேட்டார் சர்பிராஸ் அகமது. அத்துடன் பெலுக்வாயோவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். அதேவேளையில் தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் சர்பிராஸ் அகமதை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்றார்.

    இதனால் பிரச்சனை அத்துடன் முடிந்துவிட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நினைத்தது. ஆனால் போட்டி நடுவர் இந்த பிரச்சனையை ஐசிசி பார்வைக்கு கொண்டு சென்றார். ஐசிசி நான்கள் போட்டிகளில் விளையாட சர்பிராஸ் அகமதுக்கு தடைவிதித்தது.

    இந்நிலையில் ஐசிசி தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகையில் ‘‘சர்பிராஸ் அகமதுக்கு எதிரான ஐசிசி-யின் நடவடிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

    சர்பிராஸ் அகமது டுவிட்டர் மூலமாகவும், நேரடியாகவும் மன்னிப்பு கேட்டார். டு பிளிசிஸ் நாங்கள் மன்னித்து விட்டோம் என்று கூறினார். இதனால் வீரர்கள் மற்றும் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஏற்றுக் கொண்டதால் பிரச்சனை அத்துடன் முடிவடைந்து விட்டதாக எதிர்பார்த்தோம். ஆனால், அனைத்து கோரிக்கைகளும் ஐசிசி-யால் புறக்கணிக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது.
    பெலுக்வாயோ குறித்து சர்பிராஸ் அகமது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்று தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் மோதிய 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா சேஸிங் செய்யும்போது, பெலுக்வாயோ பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தென் பெலுக்வாயோவை இனவெறியுடன் பேசினார்.



    இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் கூறும்போது, ‘‘சர்பிராஸ் அகமது தனது பேச்சு குறித்து மன்னிப்பு கேட்டுவிட்டார். அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே அவரை நாங்கள் மன்னித்து விட்டோம்’’ என்றார்.
    ஹசன் அலி அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க தென்ஆப்பிரிக்காவிற்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் இமாம் உல் ஹக் (5), அடுத்து வந்த பாபர் ஆசம் (12) ஆகியோரை ரபாடா வெளியேற்றி பாகிஸ்தானுக்கு தொடக்கத்திலேயே முட்டுக்கட்டை போட்டார். அதன்பின் பாகிஸ்தான் விக்கெட்டுக்கள் மளமளவென சரிய ஆரம்பித்தது. 112 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது தடுமாறியது.


    3 விக்கெட் வீழ்த்திய ஷம்சி

    அந்த நேரத்தில் கேப்டன் சர்பிராஸ் அகமது உடன் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஜோடி சேர்ந்தார். ஹசன் அலி ருத்ரதாண்டவம் ஆட பாகிஸ்தான் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஹசன் அலி 38 பந்தில் தலா மூன்று பவுண்டரி, சிக்சருடன் அரைசதம் அடித்தார்.


    4 விக்கெட் வீழ்த்திய பெலுக்வாயோ

    பாகிஸ்தான் ஸ்கோர் 202 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. சர்பிராஸ் அகமது 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு சர்பிராஸ் அகமது - ஹசன் அலி ஜோடி 90 ரன்கள் குவித்தது. அடுத்து ஷஹீன் அப்ரிடி களம் இறங்கினார். ஹசன் அலி 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 45.5 ஓவரில் 203 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் பெலுக்வாயோ 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியில் டேல் ஸ்டெயின், குயின்டான் டி காக் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #SAvPAK
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-0 எனக்கைப்பற்றியது.

    ஐந்து போட்டிகளில் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் (19-ந்தேதி) போர்ட் எலிசபெத்தில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளுக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின், விக்கெட் கீப்பர் குயின்டான் டி  காக் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    டெஸ்ட் போட்டியில் அசத்திய ஆலிவியர், தொடக்க பேட்ஸ்மேன் மார்கிராம் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹெயின்ரிச் கிளாசன் விக்கெட் கீப்பராக பணியாற்றுகிறார்.

    தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. ஹசிம் அம்லா, 3. எய்டன் மார்கிராம், 4. ரீசா ஹென்ரிக்ஸ், 5. இம்ரான் தாஹிர், 6. ஹெயின்ரிச் கிளாசன், 7. டேவிட் மில்லர், 8. டேன் பேட்டர்சன், 9. பெலுக்வாயோ, 10. பிரிட்டோரியஸ், 11. ரபாடா, 12. ஷமிசி, 13. ஆலிவியர், 14. ரஸ்சி வான் டெர் டுஸ்சென்.
    ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வெற்றி பெற்ற நிலையில், பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப் டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்களும், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 185 ரன்களும் சேர்த்தன. தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 303 ரன்கள் குவித்தது.

    இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா. 381 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆசாத் ஷபிக் 48 ரன்னுடனும், பாபர் ஆசம் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் ஆசாத் ஷபிக் அரைசதம் அடித்தார். மறுமுனையில் பாபர் ஆசம் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சர்பிராஸ் அகமது ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலே ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ஆசாத் ஷபிக் 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    ஷபிக் ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் தோல்வி உறுதியானது. பஹீம் அஷ்ரப் 15 ரன்னிலும், முகமது அமிர் 4 ரன்னிலும், ஹசன் அலி 22 ரன்னிலும், முகமது அப்பாஸ் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 273 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதாப் கான் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர், ரபாடா தலா 3 விக்கெட்டுக்களும், ஸ்டெயின் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார். ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்ததால் பாகிஸ்தானை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.
    ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா. டி காக் சதம் விளாசினார். #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 262 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 185 ரன்னில் சுருண்டது.

    77 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் டீன் எல்கர் (5), மார்கிராம் (21) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த அம்லா நிலைத்து நின்று விளையாட டி ப்ரூயின் 7 ரன்னிலும், ஹம்சா டக்அவுட்டிலும், பவுமா 23 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    5-வது விக்கெட்டுக்கு அம்லா உடன் டி காக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அம்லா 42 ரன்னுடனும், டி காக் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அம்லா 71 ரன்னில் ஆட்டமிழந்தார். டி காக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர், தென்ஆப்பிரிக்கா அணி 302 ரன்னாக இருக்கும்போது 129 ரன்கள் விளாசி 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். டி காக் ஆட்டமிழந்ததும் தென்ஆப்பிரிக்கா 303 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் 77 ரன்கள் முன்னிலைப் பெற்றதுடன் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானை விட 380 ரன்கள் அதிகம் பெற்றது. இதனால்  பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா. 381 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    கேப் டவுன் டெஸ்டில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்த நிலையில், தென்ஆப்பிரிக்காவிற்கு 41 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா டு பிளிசிஸ் (103), மார்கிராம் (78), பவுமா (75), டி காக் (59) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 431 ரன்கள் குவித்தது.

    பின்னர் 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஷான் மசூத் 61 ரன்களும், ஆசாத் ஷபிக் 88 ரன்களும், பாபர் ஆசம் 72 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.


    பாபர் ஆசம்

    254 ரன்களை தாண்டியதால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது. தற்போது 40 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 41 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஸ்டெயின், ரபாடா தலா நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள்.


    ரபாடா

    பாகிஸ்தான் 294 ரன்னில் ஆல்அவுட் ஆனதுடன் நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் தென்ஆப்பிரிக்கா சேஸிங் செய்து எளிதில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றி முன்னிலை வகிக்கும்.
    செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அம்லா, டீன் எல்கர் அரைசதத்தால் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஆலிவியரின் (6) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. பவுமா 53 ரன்களும், டி காக் 45 ரன்களும், ஸ்டெயின் 23 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தானை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த 42 ரன்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.


    டீன் எல்கர்

    42 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் (57), 3-வது வீரராக களம் இறங்கிய ஷான் மசூத் (65) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஆலிவியர் 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார். ரபாடா 3 விக்கெட்டும், ஸ்டெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    முதல் இன்னிங்சில் 42 ரன்கள் பின்தங்கியிருந்தால் 148 ரன்கள் முன்னிலைப் பெற்றது பாகிஸ்தான். இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்காவின் டீன் எல்கர், மார்க்கிராம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் 2-வது ஓவரில் மார்க்கிராம் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து டீன் எல்கர் உடன் ஹசிம் அம்லா ஜோடி சேர்ந்தார்.



    8-வது ஓவரை ஹசன் அலி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் அம்லா கொடுத்த கேட்சை 3-வது ஸ்லிப்பில் நின்றிருந்த பகர் சமான் பிடிக்க தவறினார். இதனால் அம்லா 8 ரன்னில் அவுட்டாகுவதில் இருந்து தப்பினார். அடுத்த ஓவரின் 5-வது பந்தில் டீன் எல்கர் அடித்த பந்து முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த அசார் அலியின் கையில் தஞ்சமடைந்தது.

    ஆனால் பந்து தரையில் உரசியதுபோல் சந்தேகம் எழும்பியது. இதனால் மைதான நடுவர் அவுட் கொடுத்துவிட்டு 3-வது நடுவரின் உதவியை நாடினார். 3-வது நடுவர் காட்சியை பலமுறை ‘ரீபிளே’ செய்து பார்த்துவிட்டு, பந்து தரையில் பட்டதற்கு போதுமான அளவு சாட்சி உள்ளது என்று நடுவர் தீர்ப்பை திரும்பப்பெற்றார். இதனால் டீன் எல்கர் 3 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

    அம்லா, டீன் எல்கர் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். அதேவேளையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களின் உத்வேகம் குறைந்தது. அம்லா, டீன் எல்கர் அரைசதம் அடித்ததோடு அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். டீன் எல்கர் சரியாக 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.



    ப்ரூயின் (10), டு பிளிசிஸ் (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அம்லா 63 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட்டுக்கள் சாய்த்த ஆலிவியர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது போட்டி ஜனவரி 3-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது.
    செஞ்சூரியனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஆலிவியரின் (6) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. நேற்றும் மட்டும் 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்தன.


    மசூத்

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 53 ரன்களும், டி காக் 45 ரன்களும், ஸ்டெயின் 23 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 223 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தானை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த 42 ரன்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு மிகமிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    42 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் (57), 3-வது வீரராக களம் இறங்கிய ஷான் மசூத் (65) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.


    இமாம் உல் ஹக்

    முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஆலிவியர் 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார். ரபாடா 3 விக்கெட்டும், ஸ்டெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    முதல் இன்னிங்சில் 42 ரன்கள் பின்தங்கியிருந்தால் 148 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருப்பதால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசினால் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்த வாய்ப்புள்ளது.



    நேற்று 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்த நிலையில் இன்றும் 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்துள்ளன. நாளை எந்தவொரு முடிவு எட்டினாலும் தேனீர் இடைவேளைக்கு முன் போட்டி முடிவடைந்துவிடும்.
    செஞ்சூரியனில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 181 ரன்னில் சுருண்டது. பாபர் ஆசம் மட்டும் தாக்குப்பிடித்து 71 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஆலிவியர் 6 விக்கெட்டுக்களும், ரபாடா மூன்று விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் சேர்த்திருந்தது. பவுமா 38 ரன்களுடனும், ஸ்டெயின் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.



    ஸ்டெயின் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த பவுமா 53 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த டி காக், முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா முன்னணி வகிக்க போராடினார். அவர் 45 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 223 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தானை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர், ஷாஹீன் ஷா அப்ரிடி தலா நான்கு விக்கெட்டுக்களும், ஹசன் அலி 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். 42 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    ×