search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ வைப்பு"

    • தனியார் தொழிற்சாலைக்கு தீ வைப்பு 22 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • போலீசார் அப்போது சென்று தொழிற்சாலைக்குள் கொள்ளையர்களை விரட்டுவது அவர்களை கைது செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் சிப்காட் பகுதி-3 சிதம்பரம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தில் 1700 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் எண்ணை சுத்திகரிப்பு ஆலை உள்ளது கடந்த சிலநாட்களாக இந்த தொழிற்சாலைக்குள் இருக்கும் பொருட்களை கொள்ளையர்கள் இரவு பகல் பாராமல் பல்வேறு இடங்கள் வழியாக உள்ளே புகுந்து கொள்ளை அடித்து வந்தனர். இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகம் அளிக்கும் புகாரின் பேரில் போலீசார் அப்போது சென்று தொழிற்சாலைக்குள் கொள்ளையர்களை விரட்டுவது அவர்களை கைது செய்வது மற்றும் பொருட்களை மீட்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் அதிகாலை கொள்ளையர்கள் தொழிற்சாலைக்குள் புகுந்து2 குடோன்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீவைப்பு சம்பவத்தால் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கம்பளிமேடு, அன்னதானம்பேட்டை, அகரம் காலனி, கோபாலபுரம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், பி.முட்லூர், காயல்பட்டு, குறிஞ்சிப்பாடி உள்ள பகுதிகளைச் சேர்ந்த 7 பெண்கள் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • கொள்ளையடிப்பதை தடுத்ததால் ஆத்திரம்: தனியார் தொழிற்சாலை குடோனுக்கு மர்ம கும்பல் தீ வைத்தனர்.
    • தொழிற்சாலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து ஒரு ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.

    கடலூர் அருகே சிப்காட் பகுதியில் தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிலையம் 20 ஆண்டுகளுக்கு முன்பு பணிகளை தொடங்கியது. இதனை தொடர்ந்து பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு இறுதியில் தானே புயல் காரணமாக அந்த தொழிற்சாலை கடும் சேதம் ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் பாதிப்படைந்தது.அதன் பிறகு தொழிற்சாலையை தொடர முடியாத காரணத்தினால் தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சாலை பணிகளை கைவிட்டது. ஆனால் சுமார் கோ1,000டி ரூபாய் மதிப்பிலான தளவாட சாமான்கள் தொழிற்சாலைக்குள் இருந்தது.

    இந்த தொழிற்சாலை 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அங்கு இருக்கும் தளவாட பொருட்கள் சமீபகாலமாக இரவு பகல் பாராமல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து வந்தனர். இதனை அறிந்த போலீசார் தடுக்கச் சென்ற போது அவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடைபெற்றது.

    கடந்த வாரம் தொழிற்சாலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து ஒரு ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு போலீசாரால் உரிய பாதுகாப்பு கொடுக்க முடியாது என்ற காரணத்தினால் தொழிற்சாலை நிர்வாகம் அதிலுள்ள முக்கிய தளவாட சாமான்கள் ஒரே இடத்தில் வைத்து பாதுகாப்பதற்கு அறிவுறுத்தப் பட்டது.


    இதனையடுத்து கடந்த சில நாட்களாக தொழிற்சாலையில் உள்ள முக்கிய தளவாட பொருட்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணி நடைபெற்று வந்தது. இருந்தாலும் தொழிற்சாலையின் அதிமுக்கிய பொருட்கள் அடங்கிய குடோனுக்கு2 பக்கமும் கண்டெய்னர் வைத்து பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சமூகவிரோதிகள் இன்று அதிகாலை தொழிற்சாலைக்குள் அந்த முக்கிய குடோனுக்கு தீ வைத்தனர். இதனால் தீ பற்றி முழுவதுமாக எரியத் தொங்கியது. கடலூர் சிப்காட் பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும் குடோனில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.


    இந்த தொழிற்சாலை 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய எண்ணை சுத்திரிகரிப்பு நிலையம் "ஹால்தியா" என்ற நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் இந்தப் பகுதியில் இந்த தொழிற்சாலை வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    ×