search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவானைக்காவல் கோவில்"

    • சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
    • விவசாயம் செழிக்க, தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

    பிரார்த்தனை

    கணவன், மனைவியருக்குள் ஒற்றுமை அதிகரிக்க, கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய, விவசாயம் செழிக்க,

    தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

    நேர்த்திக்கடன்:

    சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

    பங்குனியில் பிரம்மோற்சவம், ஆடிப் பூரம், ஆடி வெள்ளி காலை 5.30 பகல் 01:00 மணி, மாலை 03:00 – இரவு 08.30 மணி.

    வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

    இந்நாட்களில், காலை 6- 6.30, 8- 9, 11- 12.30, மாலை 5- 6, இரவு 8.30-9 ஆகிய நேரங்களில் மட்டும்

    சுவாமி, அம்பாள் சன்னதிகள் அலங்காரத்திற்காக அடைக்கப்படும்.

    • அம்பிகை இறைவனிடம் ஞான உபதேசம் பெற்றதால் ஞானத்தலம் என்று அழைக்கப்படுகிறது.
    • ஐம்பூதத் தலங்களுள் நீரினால் அமைந்ததால் அப்புத்தலம் என்றும் பெயர்கள் உள்ளன.

    சிவலிங்கம் திருமேனி கொண்டு தென்னாட்டில் எழுந்துள்ள திருத்தலங்கள் பலவற்றுள் ஐம்பூதத் தலங்கள் மிகச் சிறந்தவை.

    அவற்றுள் அகிலாண்ட நாயகியாகிய நமது அன்னை, நாம் அனைவரும் சிவஞானம் பெற்றுத் திகழ வேண்டும்

    என்று பெருங்கருணையுடன் நீர்த்துளியை சிவலிங்கமாக்கி வழிபட்ட தலம் இது.

    திருவானைக்கா என்று 'யானைக்கு' அருள் புரிந்தமையாலும், யானை வசித்த காடு என்னும் பொருளில் கஜா ரணியம், இபவனம்,

    தந்திவனம் என்றும் வெண்நாவல் மரத்தின் கீழ் பெருமான் வீற்றிருப்பதால் ஜம்பகேசுவரம், ஜம்பு வீச்சுரம்,

    சம்புவனம் என்றும் அழைக்கப்படுகிறது.

    அம்பிகை இறைவனிடம் ஞான உபதேசம் பெற்றதால் ஞானத்தலம் என்றும், யானை புகாதபடி கட்டப்பட்டதால்,

    தந்திபுகா வாயில் என்றும் ஐம்பூதத் தலங்களுள் நீரினால் அமைந்ததால் அப்புத்தலம் என்றும் பெயர்கள் உள்ளன.

    • ஆண்டவன் அமுதமான தண்ணீரே உருவாக அமைந்ததால் அப்புலிங்கம், என்று பெயரிட்டு வணங்கப்பட்டு வந்தார்.
    • அதுவே நாம் வணங்கும் ஜம்புலிங்கம்

    ஆண்டவன் அமுதமான தண்ணீரே உருவாக அமைந்ததால் அப்புலிங்கம், அமுதலிங்கம் என்றும் பெயரிட்டு வணங்கப்பட்டு வந்தார்.

    திருமுழுக்காட்டவோ, ஏனைய அலங்காரங்களைச் செய்து வணங்கவோ, நீர் உருவத்தில் உள்ள திருவுரு உலகத்தார் வழிபட

    வசதிக்குறைவாக இருந்ததால் அழகியதொரு சிவலிங்கம் அமைக்கப்பட்டது.

    அதுவே நாம் வணங்கும் ஜம்புலிங்கம், கருவறையில் இடைவிடாது ஊற்றெடுத்து வளரும் புனிதப்புனல்

    "ஸ்ரீமத் தீர்த்தம்" எனப் பெயர் பெற்றது.

    தலத்தின் வேறு பெயர்கள்

    திருவானைக்கா என்னும் இத்தலம் திருவானைக்காவல், கஜாரண்யம், ஜம்புகேசுவரம், ஜம்புவீச்சுரம், வெண்நாவல்வனம்,

    சம்புவனம், ஞானசேத்திரம், ஞானத்தலம், ஞானபூமி, காவை, தந்திபுகாவாயில், அமுதேசுவரம், நந்திவனம்,

    இபவனம் எனப் பெயர் பெற்றது ஆகும்.

    • லிங்கம் உள்ள இடத்தில் இன்றும் நீர் இருக்கக் காணலாம்.
    • இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

    ஆனைக்கா என்னும் அரும்பதி, பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து லிங்கத்தை அப்பு லிங்கம் என்பர்.

    அப்பு என்றால் தண்ணீர்.

    மக்களுக்கு அமுதம் போன்ற தண்ணீரைத் திரட்டி உமாதேவியார் இங்கு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராண வரலாறு கூறுகின்றது.

    தண்ணீரினால் திரட்டி அமைக்கப்பட்டதால் அமுதம் போன்ற தண்ணீரால் அமைக்கப்பட்டதால் இந்த லிங்கத்தை அமுதலிங்கம் என்றும் தலத்தை அமுதீசுவரம் என்றும் அழைத்தனர்.

    லிங்கம் உள்ள இடத்தில் இன்றும் நீர் இருக்கக் காணலாம்.

    இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

    பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் (அப்பு) தலம். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.

    சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 60 வது தேவாரத்தலம் ஆகும்.

    அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும்.

    • ஆதி சங்கரர் இந்த இரண்டு ஸ்ரீசக்கரத்தையும் அகிலாண்டேசுவரியின் காதில் தோடுகளாக மாட்டிவிட்டார்.
    • எனவே இந்த அம்பாளின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம்.

    பஞ்சபூதத் தலங்களில் அப்பு (நீர்) தலமாக விளங்குவது திருவானைக்காவல்.

    மூலவர் ஜலகண்டேசுவரராகவும், அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேசுவரியாகவும் வீற்று இருக்கின்றனர்.

    வராகி அம்சமான அகிலாண்டேசுவரி ஆரம்ப காலத்தில் உக்கிர மூர்த்தியாகவே இருந்தாள்.

    எனவே பூஜை செய்பவர்களும், பக்தர்களும் கோவிலின் உள்ளே செல்லாமல் வாசலில் இருந்தே வழிபாடுகளை நடத்தி வந்தார்கள்.

    இதை அறிந்த ஆதிசங்கரர் மனம் வருந்தினார்.

    உடனே இரண்டு ஸ்ரீசக்கரங்கள் செய்து அதில் அம்மனின் கோபம் இறங்க வேண்டும் என்று வேண்ட, அதன்படியே அம்பாளின் கோபம் ஸ்ரீ சக்கரத்தில் இறங்கியது.

    அம்பாள் சாந்த சொரூபியானாள்.

    ஆதி சங்கரர் இந்த இரண்டு ஸ்ரீசக்கரத்தையும் அகிலாண்டேசுவரியின் காதில் தோடுகளாக மாட்டிவிட்டார்.

    எனவே இந்த அம்பாளின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும் என்பது விசேஷமான அம்சம்.

    ஒன்று சிவச்சக்கரம். மற்றொன்று ஸ்ரீசக்கரம்.

    இந்த சக்கரங்கள் மற்ற அம்பாளின் சந்நிதியில் இல்லாத சிறப்பம்சம் பெற்றவை ஆகும்.

    மேலும் அம்பாளுக்கு எப்போதும் கோபம் ஏற்படாதவாறு பிரசன்ன விநாயகரை அம்பாளுக்கு முன்னேயும், முருகனைப் பின்னேயும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து விட்டார்.

    ×