என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

அம்பிகை இறைவனிடம் உபதேசம் பெற்ற தலம்
- அம்பிகை இறைவனிடம் ஞான உபதேசம் பெற்றதால் ஞானத்தலம் என்று அழைக்கப்படுகிறது.
- ஐம்பூதத் தலங்களுள் நீரினால் அமைந்ததால் அப்புத்தலம் என்றும் பெயர்கள் உள்ளன.
சிவலிங்கம் திருமேனி கொண்டு தென்னாட்டில் எழுந்துள்ள திருத்தலங்கள் பலவற்றுள் ஐம்பூதத் தலங்கள் மிகச் சிறந்தவை.
அவற்றுள் அகிலாண்ட நாயகியாகிய நமது அன்னை, நாம் அனைவரும் சிவஞானம் பெற்றுத் திகழ வேண்டும்
என்று பெருங்கருணையுடன் நீர்த்துளியை சிவலிங்கமாக்கி வழிபட்ட தலம் இது.
திருவானைக்கா என்று 'யானைக்கு' அருள் புரிந்தமையாலும், யானை வசித்த காடு என்னும் பொருளில் கஜா ரணியம், இபவனம்,
தந்திவனம் என்றும் வெண்நாவல் மரத்தின் கீழ் பெருமான் வீற்றிருப்பதால் ஜம்பகேசுவரம், ஜம்பு வீச்சுரம்,
சம்புவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
அம்பிகை இறைவனிடம் ஞான உபதேசம் பெற்றதால் ஞானத்தலம் என்றும், யானை புகாதபடி கட்டப்பட்டதால்,
தந்திபுகா வாயில் என்றும் ஐம்பூதத் தலங்களுள் நீரினால் அமைந்ததால் அப்புத்தலம் என்றும் பெயர்கள் உள்ளன.
Next Story






