search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருவானைக்கா தல சிறப்பு-அமுதீஸ்வரம்
    X

    திருவானைக்கா தல சிறப்பு-அமுதீஸ்வரம்

    • லிங்கம் உள்ள இடத்தில் இன்றும் நீர் இருக்கக் காணலாம்.
    • இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

    ஆனைக்கா என்னும் அரும்பதி, பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து லிங்கத்தை அப்பு லிங்கம் என்பர்.

    அப்பு என்றால் தண்ணீர்.

    மக்களுக்கு அமுதம் போன்ற தண்ணீரைத் திரட்டி உமாதேவியார் இங்கு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராண வரலாறு கூறுகின்றது.

    தண்ணீரினால் திரட்டி அமைக்கப்பட்டதால் அமுதம் போன்ற தண்ணீரால் அமைக்கப்பட்டதால் இந்த லிங்கத்தை அமுதலிங்கம் என்றும் தலத்தை அமுதீசுவரம் என்றும் அழைத்தனர்.

    லிங்கம் உள்ள இடத்தில் இன்றும் நீர் இருக்கக் காணலாம்.

    இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

    பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் (அப்பு) தலம். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.

    சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 60 வது தேவாரத்தலம் ஆகும்.

    அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும்.

    Next Story
    ×