search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவள்ளூர் கொள்ளை"

    • கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்கு மளிகை கடை, கூல்ரிங்ஸ் கடை, பால் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை வைத்து வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வருகின்றனர்.
    • அடிக்கடி இரவு நேரங்களில் மர்மநபர்கள் கடையை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது வழக்கமாகியுள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி காவல் சரக எல்லைகளான ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, சிப்காட் கவரப்பேட்டை ஆகிய நான்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்கு மளிகை கடை, கூல்ரிங்ஸ் கடை, பால் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை வைத்து வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அடிக்கடி இரவு நேரங்களில் மர்மநபர்கள் கடையை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது வழக்கமாகியுள்ளது.

    இதனைத் தொடர்ந்து நேற்று ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நான்கு கடைகளிலும், சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஆவின் பால் உள்ளிட்ட நான்கு கடைகளிலும் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள சூப்பர் மார்க், கவரப்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பேக்கரி மற்றும் வீடுகளில் 15 சவரன் நகை, உள்ளிட்ட 10 கடைகளில் 3 லட்சம் ரூபாய் பணம் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவம் 3 குழுக்களாக பிரிந்து தனியார் வாகனத்தில் கொள்ளையடித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து மர்மநபர்களை இரண்டு தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே லாரியை நிறுத்தி கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • லாரியுடன் 8 டன் கிராவலை அதிகாரிகள் பறிமுதல் செய்து பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் பரத் குமார். லாரி டிரைவர். இவர் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தார்.

    பொன்னேரி அடுத்த இலவம்பேடு அருகே வந்த போது சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு அங்குள்ள கடையில் பரத்குமார் சாப்பிட்டார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென லாரி டிரைவர் பரத் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொன்னேரி பஜாரில் தன்னை இடித்து விட்டு வந்ததாக கூறி டிரைவர் பரத்குமாரின் பாக்கெட்டில் இருந்த ரூ.500, செல்போன், ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை பறித்து விட்டு மிரட்டி தப்பி சென்று விட்டார். இதுகுறித்து பரத்குமார் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னேரியை சேர்ந்த மூர்த்தி (36) என்பவரை கைது செய்தனர்.

    பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே லாரியை நிறுத்தி கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். உடனே லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். லாரியில் ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி கிராவல் கடத்தி வரப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து லாரியுடன் 8 டன் கிராவலை அதிகாரிகள் பறிமுதல் செய்து பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மர்மநபர்கள் திடீரென காஜிதா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.
    • இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுனை சேர்ந்தவர் ஷெரீப் (வயது 43). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வெளியே சென்றார். வீட்டில் மனைவி காஜிதா மட்டும் இருந்தார்.

    அப்போது வீட்டிற்கு வந்த 2 பேர் ஆட்டோ சவாரிக்கு வேண்டுமென கேட்டனர். தனது கணவர் வீட்டில் இல்லை வெளியே சென்று உள்ளார் என தெரிவித்தார். அந்த மர்மநபர்கள் திடீரென காஜிதா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

    இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

    • அடையாளம் தெரியாத மர்மநம்பர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சாந்தகுமாரி கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.
    • அவரது சத்தம் கேட்கவே கணவர் கோபாலகிருஷ்ணன் அவர்களை பிடிக்க முயன்ற போது அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வேண்டாக்கம் தசரத நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். லாரி மெக்கானிக். இவரது மனைவி சாந்தகுமாரி.

    நேற்று குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்மநம்பர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சாந்தகுமாரி கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

    அவரது சத்தம் கேட்கவே கணவர் கோபாலகிருஷ்ணன் அவர்களை பிடிக்க முயன்ற போது அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அரியன் வாயல் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். மீஞ்சூரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று காலை இவர் வழக்கம்போல் கடைக்கு சென்று விட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு தாய் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் நடராஜன் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 சவரன் நகை, ரூ.52 ஆயிரம் ரொக்கம், டி.வி. ஆகியவற்றை பட்டப்பகலில் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×