search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவட்டார் அருகே"

    • போலீஸ் நிலையத்தில் இருந்து மெர்லின்ட்ராஜ் தனது நண்பருடன் திருடிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
    • வாகன திருட்டு, சங்கிலி பறிப்பு, கொலை ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 24 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் மெர்லின்ட்ராஜ் (வயது 37). ராணுவத்தில் பணியாற்றிய இவர், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால் டிஸ்மிஸ் செய்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு, நகைபறிப்பு போன்ற வற்றில் ஈடுபட்டுள்ளார். கொள்ளை, அடிதடி உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டதாக இவர் மீது தக்கலை, திருவட்டார், மார்த்தாண்டம், கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையில் ஒரு சம்பவத்தின் போது இவர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் பழுதானதால், அதனை சாலையில் விட்டுச் சென்றார். அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்தனர். அதனை போலீஸ் நிலையத்தில் இருந்து மெர்லின்ட்ராஜ் தனது நண்பருடன் திருடிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மார்த்தாண்டம் திக்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த மெர்லின்ட்ராஜை கைது செய்தனர். வாகன திருட்டு, சங்கிலி பறிப்பு, கொலை ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 24 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. இதனால் அவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து மெர்லின்ட்ராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • வாழை மரம் நட்டதால் பரபரப்பு
    • தினமும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    திருவட்டார்:

    பேச்சிப்பாறை முதல் மார்த்தாண்டம் வரை உள்ள சாலையானது மிகவும் பரப்பரப்பாக காணப்படும் காலை, மாலை வேளைகளில் அதிக அளவு வாகனங்கள் செல்லும். புத்தன்கடை பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. அதன் அருகில் ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது தினமும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    இதனால் ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளும் மழை காலங்களில் பள்ளத்தில் விழுந்தார்கள். இதை கருத்தில் கொண்டு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தில் வாழை மரத்தை நட்டு அதன் மீது மாலை போட்டு பள்ளத்தில் வைத்துள்ளனர். மீண்டும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழாமல் இருக்க கல் வைத்துள்ளனர். எனவே பெரும்விபத்து நடைபெறும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவராண நிதி
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    திருவட்டார்:

    கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சோம்ராஜ் (வயது 55), வாழைத்தார் வியாபாரி. இவரது மனைவி ஜெயசித்ரா (45). மகன் அஸ்வின் (21), மகள் ஆதிரா (24) ஆகியோர் நேற்று வீட்டில் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது நேற்று பெய்த காற்று-மழை காரணமாக இவர்களது வீட்டு பக்கத்து வீட்டிலிருந்த மின்சார வயர் அருகிலுள்ள தகர மேற்கூரையில் பட்டபடி இருந்துள்ளதும் அந்த நேரத்தில் அஸ்வின் எடுத்து வந்த இரும்பு கம்பி, தகர மேற்கூரையில் பட்டதால் மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததும் தெரியவந்தது. மேலும் அவரை தாய் ஜெயசித்ரா மற்றும் சகோதரி ஆதிரா ஆகியோர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றபோது அவர்களும் மின்சாரம் தாக்கி பலியாகி இருப்பதும் தெரியவந்தது.

    பலியான ஆதிரா 8 மாத கர்ப்பிணி என்பது வேதனையான சம்பவமாக அமைந்தது. இந்த சம்பவத்தில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து விட்டது. அவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் குளச்சலை சேர்ந்த ஸ்ரீசுதன் என்பவருடன் திருமணமாகி உள்ளது.

    கர்ப்பிணியான ஆதிரா வளைகாப்புக்கு பிறகு பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது தான் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். அவரது கணவர் ஸ்ரீசுதன், ஆந்திர மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு உறவினர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து உடனடியாக ஊருக்கு புறப் பட்டுள்ளார். இதற்கிடையில் பலியான 3 பேரின் உடல்களும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது.

    அதன்பிறகு கல்லூரி மாணவன் அஸ்வின், தாய் ஜெயசித்ரா ஆகியோரது உடல்கள் ஆற்றூரில் உள்ள அவர்களின் வீட்டின் அருகில் அடக்கம் செய்யப் படுகிறது. கர்ப்பிணி பெண் ஆதிராவின் உடல் அவரது கணவரிடம் ஒப்படைக்கப் பட்டு குளச்சலில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதற்கிடையில் மின்சா ரம் தாக்கி கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் இறந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரி வித்துள்ளார். இந்த துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    குடும்பத்தினரை இழந்து வாடும் சோம்ராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறு தலையும் தெரி வித்துக்கொள்வ தோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தர விட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    ×