search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணம் தாமதம்"

    பணப் பிரச்சினையில் திருமணத்தை தள்ளி போட்டதால் இளம்பெண்ணை கடத்திய கும்பல் குறித்து தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் ரத்தினம் (வயது 60) என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எனது 2-வது மகள் வெண்மதியை காடையாம்பட்டி தாலுகா ஆண்டிகுட்டை வளைவை சேர்ந்த பழனிசாமி மகன் கிஷோர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க நிச்சயம் செய்தோம்.

    திருமண செலவுக்கு பணம் கிடைக்காததால் திருமணத்தை தள்ளி போடலாம் என்று நான் கூறினேன். ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ள வில்லை.

    இதற்கிடையே எனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அவளை கடத்தி சென்று விட்டனர். இது குறித்து ஓமலூர் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி என்பவரிடம் புகார் கொடுத்தேன். அவர் இரு தரப்பினரையும் அழைத்து கட்ட பஞ்சாயத்து பேசியதால் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக நினைக்கிறேன்.

    எனவே எனக்கு சரியான தீர்ப்பு கிடைக்க சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதவ வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×