search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமங்கலம் ஆட்டுச்சந்தை"

    • வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • இன்று நடந்த சந்தையில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகின.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சி சந்தைக்கு அடுத்தப்படியாக பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாத புரம், சிவகங்கை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். அதிகாலையில் இருந்து காலை 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.

    இந்நிலையில் வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திருமங்கலம் ஆட்டுச்சந்தை தொடங்கியது. வழக்கத்தை விட இன்று வியாபாரிகள் அதிகளவில் திரண்டனர். இதனால் சந்தை கடுமையான கூட்டத்துடன் காணப்பட்டது.

    இதனால் ஆடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. வழக்கமாக ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படும். ஆனால் இன்று கடும் கிராக்கி இருந்ததால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்று நடந்த சந்தையில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகின. 7 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் வளர்க்கும் ஆடுகளை தவிர்த்து இந்திய அளவில் நாட்டினம் குறும்பை கொங்கு ஆந்திரா கிடா, ராஜஸ்தான் கிடா உள்ளிட்ட கிடாக்கள் இந்த சந்தையில் பார்க்கலாம். சண்டைக்கு வளர்க்கும் குட்டிகள் இங்கு கிடைக்கும். இந்த சந்தையில் கடந்த வாரத்தை விட விலை அதிகமாக இருந்தாலும், ஆடுகளின் வரத்து அதிகமாக உள்ளது.

    மேலும் வியாபாரிகளும் அதிகளவில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர். இன்று அதிகப்படியாக 90 ஆயிரம் ரூபாய்க்கு கிடாக்கள் வந்துள்ளது. இது 60 கிலோ கறி உள்ளதாகும். ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள சண்டை செய்யும் கிடாக்கள் விற்பனைக்கு உள்ளது.

    பக்ரீத்திற்கு இதுபோல கிடாக்கள் வாங்குவதில் எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது. திருமங்கலம் சந்தையை பொறுத்தவரை திருப்தி அடைந்து தான் சென்றுள்ளனர். ஆடுகளின் விலை வழக்கத்தை விட ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாக உள்ளது. தற்போது ஆட்டுக்கறி விலை 800 ரூபாய் விற்கப்படுகிறது. ஆனால் சந்தையில் ஒரு கிலோ 1,200 ரூபாய் கறி அளவுக்கு மதிப்பு கூடுதலாக விற்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர்.
    • ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் ஆடு, கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் ஆட்டுச் சந்தையில் வியாபாரிகளும், ஆடு, கோழிகளை வாங்குவோர்கள் அதிகளவில் திரளுவார்கள். இதனால் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் காணப்படும்.

    இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். இன்று ஒரே நாளில் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்கப்பட்டது.

    நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக ஆட்டின் விலை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இன்று மட்டும் திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்தது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ''ரம்ஜான் பண்டிகை காரணமாக இன்று நடந்த சந்தையில் ஆடுகள், கோழிகள் அதிகளவில் விற்பனை ஆகியுள்ளது. பண்டிகை காரணமாக விலை அதிகமாகியுள்ளது. கடந்த 2 வார காலமாக இதே நிலை நீடிக்கிறது. ரம்ஜான் முடிந்த பின் விலை குறைய வாய்ப்புள்ளது.

    தற்போது ஆடுகளுக்கு அதிக தேவை இருந்தாலும் திருமங்கலம் சந்தையில் ஆடுகள் வரத்து குறைவாக உள்ளது. ஒவ்வொரு முறையும் தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட விசேஷ நாட்களில் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகளவில் வியாபாரிகளும், பொதுமக்களும் கூடுகிறார்கள். தற்போதுள்ள ஆட்டுச்சந்தையில் இட நெருக்கடி அதிகமாக இருப்பதால் அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளோம்'' என்றார்.

    ×