search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திராட்சியில் உள்ள் நன்மைகள்"

    • திராட்சையின் விதையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன.
    • மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது.

    கருப்பு திராட்சை என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது புளிப்பு சுவை தான். திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. கருப்பு திராட்சைப் பழத்தை விட, அதன் விதையில் புரோ-ஆன்தோசயனிடின் எனும் சத்து அதிகமாக நிறைந்துள்ளது.

    ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்தக்குழாய்களில் ஏற்படும் வீக்கம், ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகளை குணமாக்க திராட்சைப் பழத்தின் விதை அதிகமாக பயன்படுகிறது.

    கருப்பு திராட்சையின் விதை மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

    ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பைக் கரைத்து, சர்க்கரை நோய் மற்றும் கால்கள் மரத்துப்போதல் போன்ற பிரச்னையை குணமாக்க கருப்பு திராட்சையின் விதை மிகவும் உதவுகிறது.

    சிறுநீரகச் செயல்பாட்டின் குறைகளை சரிசெய்யப் பயன்படுகிறது. மேலும், மாலைக்கண் நோய் மற்றும் கண்புரை போன்ற கண் தொடர்பான பிரச்னைகள் வராமல் இருக்க கருப்பு திராட்சையின் விதை பயன்படுகிறது.

    பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் வராமல் இருக்கவும் கருப்பு திராட்சையின் விதை உதவுகிறது.

    நம் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி புத்துணர்ச்சி தரக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட் இதில் அதிகம் நிறைந்துள்ளது. மேலும், புற்றுநோய் செல்களை அழித்து, புதிய ஆரோக்கியமான செல்கள் அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது. எனவே திராட்சைப் பழத்துடன் விதைகளையும் சேர்த்து உண்பது நல்ல பலனைத் தரும்.

    உடல் வளர்ச்சியில் குறைபாடு உள்ளவர்கள், உடல் பலகீனம் உள்ளவர்கள், தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். நினைவாற்றலை பெருக்கவும் இது பயன்படுகிறது.

    எனவே, இவ்வளவு மகத்துவம் நிறைந்த திராட்சை விதைகளை, இவ்வளவு நாளாக தூக்கி எறிந்து விட்டோமே என வருந்தாமல், இனிமேலாவது திராட்சையுடன் விதைகளையும் சாப்பிடுங்கள்.

    பழங்காலத்தில் இருந்தே திராட்சை ரசம் அல்லது சிவப்பு ஒயின் குடிக்கும் பழக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் மக்களிடம் இருந்து வருகிறது. இதற்கு காரணம், திராட்சையில் அரிய பல மருத்துவ குணங்கள் இருப்பதை நம் முன்னோர் கண்டறிந்ததுதான்.

    சிவப்பு திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் உடலுக்கு பல நன்மைகளை தருவதாக கூறப்படுகிறது. ரத்தம் உறைதல் காரணமாக உடலின் நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாத பாதிப்புகள் ஏற்படும். சிவப்பு ஒயினில் அதிக அளவில் நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் இருப்பதால், ரத்தம் உறைவு ஏற்படுவதை தடுக்கிறது. நோய் வருவதையும் தடுத்து நிறத்துகிறது.

    இதேபோல் சிவப்பு ஒயின் அருந்துவதால் ரத்த அழுத்தம் சீராக துணை புரியும் என்றும், அதற்கு சிவப்பு ஒயினில் காணப்படும் ரெஸ்வராடால் என்ற வேதிப்பொருள் முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் இத்துறை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    ×