search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடீர் சோதனை"

    • காலவாதியான விசாவுடன் சட்ட விரோதமாக இருக்கின்றனரா?
    • மக்களிடம் இருந்து புகார்கள் போலீசாருக்கு வந்தது.

    வடவள்ளி

    கோவை புறநகர் பகுதிகளில் காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமாக சில வெளிநாட்டவர்கள் தங்கி இருப்பதாக அப்பகுதி மக்களிடம் இருந்து புகார்கள் போலீசாருக்கு வந்தது.

    அதன் பேரில் போலீசார் இன்று காலை ஆலாந்துறை, செம்மேடு, காருண்யா நகரில் உள்ள பழங்குடியின கிராமங்கள், அங்குள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் போன்றவற்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த பகுதிகளில் வெளிநாட்டவர்கள் யாராவது காலவாதியான விசாவுடன் சட்ட விரோதமாக இருக்கின்றனரா? என்பது குறித்தும் விசாரித்தனர்.

    • கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக புகார்.
    • மது பாட்டிலுக்கு 2 ரூபாய் தர வேண்டும் என கேட்பதாக புகார்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில், குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மது பாட்டில்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையை கேட்டு சிலர் மிரட்டுவதாக டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக டாஸ்மாக் மதுக்கடை வாரியாக விற்பனை விவரங்களுடன் சிலர் வருகிறார்கள். மது பாட்டிலுக்கு 2 ரூபாய் தர வேண்டும் என கேட்பதாக சங்கத்தினர் புகார் கூறியுள்ளனர். மேலும் இந்த விவரம் தொடர்பாக ஊழியர் சங்கத்தினர் தமிழக முதல்-அமைச்சர், தமிழக மின்சாரம், மதுவிலக்கு அமலாக்க துறை அமைச்சர் மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அலுவலகத்திற்கும் புகார்மனு அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டாஸ்மாக் வடக்கு, தெற்கு கலால் மாவட்ட எல்லைக்குள் பல்வேறு மதுபான கடைகளில் அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். குவார்ட்டர், பீர் பாட்டில்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை, தினமும் விற்பனையாகும் மதுபாட்டில்கள் குறித்து பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

    டாஸ்மாக் ஊழியர்கள் குறைந்தபட்ச விற்பனைக்கு மேலாக தினமும் வசூலிக்கும் தொகையின் பின்னணி குறித்தும் ஆய்வு நடக்கிறது.

    இதுகுறித்து ஊழியர் சங்கத்தினர் கூறும்போது,

    பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வகுலிப்பதாக ஊழியர்கள் மீது புகார் கூறப்படுகிறது. குடோன்களில் இருந்து மதுபான கடைக்கு கொண்டு வரப்படும் மதுபாட்டில்கள் உடைந்தால் அதற்கு ஊழியர்கள் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.

    ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, பெட்டிகள், பாட்டில்கள் சேதமடைந்தால் அதற்குரிய கட்டணம், பல்வேறு தரப்பினர் மாதந்தோறும் வசூலித்து செல்லும் தொகை குறித்தும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தெரிவித்திருக்கிறோம்.

    மது பாட்டில் விற்பனையில் நிலவும் பிரச்சினைகளை அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும். கடையில் வந்து மிரட்டி பணம் கேட்டும் நிலையை தவிர்க்க வேண்டும். ஆய்வு நடத்தி குறிப்பிட்ட சில ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்றனர்.

    • சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் இருக்கிறதா என சோதனை நடத்தினர்.
    • நீலகிரியில் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதியை பாதுகாக்கும் பொருட்டு, ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பொருட்கள் உள்பட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், வெளிமாநில மற்றும் பிற மாவட்ட சுற்றுலா பயணிகளின் வருகையால் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்பாடு அதிகமாக இருந்தது.

    இதையடுத்து நீலகிரியில் ஒரு லிட்டர், 2 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்தவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தொடர் விடுமுறை என்பதால், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து வருகின்றனர். அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை கொண்டு வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஊட்டி நகராட்சி சுகாதார அதிகாரி மகாராஜன் சுகாதார ஆய்வாளர் மருத்துவர் ஸ்ரீதரன் தலைமையில் அலுவலர்கள் நேற்று சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது அவர்களிடம் இருந்த குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால், வாகன நிறுத்தும் இடங்களில் நகராட்சி அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

    ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ஒரு தங்கும் விடுதிக்கு ரூ.10 ஆயிரம், சுற்றுலா பயணிகளுக்கு ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.13 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. ஒரு தங்கும் விடுதிக்கு சீல்வைக்கபட்டது 

    • இந்த ஆலையில், ரேசன் அரிசியை அரைத்து மாவாக்கி வீற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
    • அரசு வழங்கும் ரேஷன் அரிசியை வாங்கி அரைத்து பேக்கிங் செய்து கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரிசி ஆலை நிர்வாகத்திற்கு ஆய்வு குழுவினர் அறிவுரை வழங்கினர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே ‌மேட்டுப்பட்டி, சுங்கச்சாவடி பகுதியில் தனியார் அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில், ரேசன் அரிசியை அரைத்து மாவாக்கி வீற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து வாழப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் தமிழரசி தலைமையில், குடிமைப் பொருள்

    வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ஆய்வாளர் ரேணுகா தேவி, எஸ்.ஐ பெரியசாமி, தனி வருவாய் ஆய்வாளர் மற்றும் போலீஸார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது அங்கு அரிசியை அரைத்து பாக்கெட் செய்வது தெரியவந்தது.

    அரசு வழங்கும் ரேஷன் அரிசியை வாங்கி அரைத்து பேக்கிங் செய்து கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரிசி ஆலை நிர்வாகத்திற்கு ஆய்வு குழுவினர் அறிவுரை வழங்கினர்.

    ×