search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. அரசு"

    • சந்தனமாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர செயலர் நெல்சன் தலைமை தாங்கினார்.
    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், சாதனைகளை விளக்கிப் பேசினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. சந்தனமாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர செயலர் நெல்சன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர் செல்லத்துரை, பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கசெல்வம், மாவட்ட பிரதிநிதிகள் சாமுவேல் ராஜா, அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், மாநில பேச்சாளர்கள் ராஜன், நெல்லை ரவி ஆகியோர் சாதனைகளை விளக்கிப் பேசினர்.

    கூட்டத்தில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால் வரவேற்றார். நகர பொருளாளர் சுதந்திரராஜன் தொகுத்து வழங்கினார். வார்டு செயலர் அப்பாதுரை நன்றி கூறினார்.

    • மதுரையில் இன்று பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
    • தி.மு.க அரசை கண்டித்து தமிழகமெங்கும் இன்று நடந்தது.

    மதுரை

    பா.ஜ.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து தமிழகமெங்கும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    மதுரை மாநகர் மாவட்டத்தில், மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் வக்கீல் பிரிவு மாநிலத்தலைவர் வணங்காமுடி, மாநில பொருளாதாரபிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினர்.

    இந்த போராட்டத்தில் பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், நிர்வாகிகள், அணி பிரிவு தலைவர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×