search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்மார்கள் பாலூட்டும் அறை"

    • குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையை சுத்தம் செய்து தாய்மார்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்தனர்.
    • தேங்கி கிடந்த குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து கொடுத்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பஸ் நிலையத்தில் தாய்மார்க ளுக்காக திறக்கப்பட்ட பாலூட்டும் அறை பயன்பா ட்டில் இல்லாமல் சில மாதங்களாக பூட்டியே கிடந்தது.

    எனவே பஸ் நிலையத்தில் உள்ள குழந்தைகளுக்கான பாலூட்டும் அறையை உடனடியாக சரி செய்து தாய்மார்களின் பயன் பாட்டிற்காக கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இது தொடர்பான செய்தி கடந்த ஒரு வாரத்தி ற்கு முன்பு மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.

    அதைத்தொடர்ந்து செய்தி எதிரொலியாக உடனடியாக நகராட்சி அதிகாரிகள் பஸ் நிலையம் வந்து குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையை சுத்தம் செய்து தாய்மார்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்தனர்.

    தொடர்ந்து நகராட்சிக்கு ட்பட்ட தினசரி மார்க்கெட் மற்றும் பல பகுதிகளில் தேங்கி கிடந்த குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்து கொடுத்தனர்.

    இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் மற்றும் மேலாளர் உள்ளிட்ட அதிகாரி களுக்கு சமூக ஆர்வல ர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு களை தெரிவித்து வருகின்ற னர்.

    • புளியம்பட்டி பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை கட்டி திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
    • கடந்த சில மாதங்களாக இந்த பாலூட்டும் அறை பூட்டப்பட்டு மூடியே கிடக்கிறது.

    பு.புளியம்பட்டி:

    தமிழ்நாட்டில் உள்ள பஸ் நிலையங்களில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தாய்மார்கள் குழந்தை களுக்கு பாலூட்டும் அறை கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டன.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்களில் குழந்தை ளுக்கு பாலூட்டும் தனி அறை திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த பாலூட்டும் அறை தற்போது பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்டிரு க்கின்றன.

    அதே போல் ஈரோடு மாவட்டம் புளி யம்பட்டி பஸ் நிலையத்தில் குழந்தை களுக்கு பாலூட்டும் அறை கட்டி திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த பாலூட்டும் அறை பூட்டப்பட்டு மூடியே கிடக்கிறது.

    இதனால் போதையில் வரும் குடிமகன்கள் பூட்டி கிடக்கும் அறை முன்பு படுத்து தூங்குகிறார்கள். மேலும் இந்த பகுதி குடிமகன்கள் தூங்கும் இடமாக மாறி அவலம் நிலவி வருகிறது.

    எனவே பு.புளியம்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையை உடனடியாக சரி செய்து தாய்மார்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் கோரி க்கை வைக்கின்றனர்.

    • இந்த அறையில் இரவு நேரத்தில் சிலர் அமர்ந்து மது அருந்துவது உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்ைக வைத்துள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பஸ்கள், கார்களிலும் பக்தர்கள் வருகின்றனர். காந்திபுரத்தில் இருந்து மருதமலைக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் வசதிக்காக மருதமலை அடிவாரம் பகுதியில் சமீபத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது.

    அங்கு 15 கடைகள் 2 அலுவலகம், ஒரு தாய்மார்கள் பாலுட்டும் அறை மற்றும் மேல்தளத்தில் உணவகம் என பல்வேறு வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது.

    சுற்றுலா தலமாக விளங்கும் மருதமலைக்கு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருகிற நிலையில் தற்போது பஸ் நிலையம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இது பொதுமக்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இந்த அறையில் இரவு நேரத்தில் சிலர் அமர்ந்து மது அருந்துவது உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பஸ் நிலையத்திற்கு இரவு காவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், உடனடியாக தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்ைக வைத்துள்ளனர்.

    ×