search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்மாமன்"

    • சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றார்.
    • பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

    வந்தவாசி :

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த புன்னை கிராமத்தை சேர்ந்தவர் சாமி அய்யப்பன். இவரது அக்காள், கணவருடன் சென்னையில் வசித்து வருகின்றனர். அக்காளின் குழந்தைகள் 3 பேருக்கு காதணி விழா வந்தவாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

    இதையடுத்து சாமி அய்யப்பன் தனது அக்காள் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர்வரிசையை வித்தியாசமாக செய்ய முடிவு செய்தார். அதன்படி தாய்மாமன் சீர் கொண்டு செல்வதற்கு 15 அடி உயரத்தில் மாலை ஒன்று தயார் செய்து கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்துச் சென்றார். வந்தவாசி ஈஸ்வரன் கோவிலில் இருந்து திருமண மண்டபம் வரை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றார்.

    மேலும் பின்னால் மேளதாளங்களுடன் டிராக்டர் டிரெய்லரில் 3 குழந்தைகளை அமர வைத்து 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான சீர்வரிசைகள் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    கிரேன் மூலம் எடுத்துச் சென்ற மாலையை சாலையில் செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    • 259 தட்டுகளில் பல்வேறு சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
    • லாரிக்கு முன்புறம் 2 மாட்டு வண்டிகள், 2 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி சென்றன.

    சேலம் :

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வகுமார்-ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகள் அர்ச்சிதாவின் மஞ்சள் நீராட்டு விழா நேற்று குஞ்சாண்டியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு அர்ச்சிதாவின் தாய் மாமனான அருண்பிரசாத் மேச்சேரி அருகே உள்ள மூர்த்திப்பட்டியில் இருந்து சீர்வரிசைகளை கன்டெய்னர் லாரியில் ஊர்வலமாக கொண்டு வந்தார்.

    லாரியில் பழம் வகைகள், பூ வகைகள், தேங்காய், வாழைப்பழம் உள்பட பல்வேறு சீர்வரிசைகளை 259 தட்டுகளில் வைத்து லாரிக்கு முன்புறம் 2 மாட்டு வண்டிகள், 2 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி சென்றன. அதிலும் சீர்வரிசைகளை எடுத்து ஊர்வலமாக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும் திருமண மண்டபத்திற்கு சுமார் 2½ மணி நேரத்தில் வந்து சேர்ந்தனர். இந்த ஊர்வலத்தின் போது செண்டை மேளம் முழங்க பட்டாசுகள் வெடித்து சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. மேலும் 19 கார்கள், 75 மோட்டார் சைக்கிள்களில் குஞ்சாண்டியூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு வந்து சீர்வரிசைகளை வழங்கினார்.

    தாய் மாமன் அருண்பிரசாத்தின் செயல்பாட்டை சதாசிவம் எம்.எல்.ஏ. நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    ×