search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ear piercing ceremony"

    • சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றார்.
    • பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

    வந்தவாசி :

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த புன்னை கிராமத்தை சேர்ந்தவர் சாமி அய்யப்பன். இவரது அக்காள், கணவருடன் சென்னையில் வசித்து வருகின்றனர். அக்காளின் குழந்தைகள் 3 பேருக்கு காதணி விழா வந்தவாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

    இதையடுத்து சாமி அய்யப்பன் தனது அக்காள் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர்வரிசையை வித்தியாசமாக செய்ய முடிவு செய்தார். அதன்படி தாய்மாமன் சீர் கொண்டு செல்வதற்கு 15 அடி உயரத்தில் மாலை ஒன்று தயார் செய்து கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்துச் சென்றார். வந்தவாசி ஈஸ்வரன் கோவிலில் இருந்து திருமண மண்டபம் வரை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றார்.

    மேலும் பின்னால் மேளதாளங்களுடன் டிராக்டர் டிரெய்லரில் 3 குழந்தைகளை அமர வைத்து 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான சீர்வரிசைகள் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    கிரேன் மூலம் எடுத்துச் சென்ற மாலையை சாலையில் செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    • 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.
    • ஒரு குழந்தைக்கு காதணி விழா நடந்தது.

    மதுரை :

    தமிழகத்தின் பழமை மாறாமல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற காதணி விழாவில் 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.

    இந்த வகையில் உசிலம்பட்டி அருகே ரெயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு காதணி விழா நடத்தினர். இந்த விழாவிற்கு கருமாத்தூரிலிருந்து வந்திருந்த அவரது தாய்மாமன் தலைமையில் ஊர்வலமாக வந்த பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி 7 மாட்டு வண்டிகளில் வெற்றிலை, பாக்கு, பழம், கரும்பு, இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை ஏற்றி வந்தனர்.

    மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மாதிரி யானை ஊர்வலம், கேரள செண்டை மேளங்கள் முழங்க கதகளி நடனம் என சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தாய்மாமன் ஊர்வலமாக வந்தது உசிலம்பட்டி பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    ×