search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதணி விழா"

    • சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றார்.
    • பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

    வந்தவாசி :

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த புன்னை கிராமத்தை சேர்ந்தவர் சாமி அய்யப்பன். இவரது அக்காள், கணவருடன் சென்னையில் வசித்து வருகின்றனர். அக்காளின் குழந்தைகள் 3 பேருக்கு காதணி விழா வந்தவாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

    இதையடுத்து சாமி அய்யப்பன் தனது அக்காள் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர்வரிசையை வித்தியாசமாக செய்ய முடிவு செய்தார். அதன்படி தாய்மாமன் சீர் கொண்டு செல்வதற்கு 15 அடி உயரத்தில் மாலை ஒன்று தயார் செய்து கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்துச் சென்றார். வந்தவாசி ஈஸ்வரன் கோவிலில் இருந்து திருமண மண்டபம் வரை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றார்.

    மேலும் பின்னால் மேளதாளங்களுடன் டிராக்டர் டிரெய்லரில் 3 குழந்தைகளை அமர வைத்து 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான சீர்வரிசைகள் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    கிரேன் மூலம் எடுத்துச் சென்ற மாலையை சாலையில் செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    • 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.
    • ஒரு குழந்தைக்கு காதணி விழா நடந்தது.

    மதுரை :

    தமிழகத்தின் பழமை மாறாமல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற காதணி விழாவில் 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.

    இந்த வகையில் உசிலம்பட்டி அருகே ரெயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு காதணி விழா நடத்தினர். இந்த விழாவிற்கு கருமாத்தூரிலிருந்து வந்திருந்த அவரது தாய்மாமன் தலைமையில் ஊர்வலமாக வந்த பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி 7 மாட்டு வண்டிகளில் வெற்றிலை, பாக்கு, பழம், கரும்பு, இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை ஏற்றி வந்தனர்.

    மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மாதிரி யானை ஊர்வலம், கேரள செண்டை மேளங்கள் முழங்க கதகளி நடனம் என சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தாய்மாமன் ஊர்வலமாக வந்தது உசிலம்பட்டி பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    • வரதராஜூவை குழந்தை போல பாவித்து மொட்டையடித்து பின்னர் காது குத்தப்பட்டது.
    • தாத்தா வரதராஜூக்கு உறவினர்கள், பேரன், பேத்திகள் சீர்கொடுத்து மகிழ்ந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான் பேட்டையை சேர்ந்த வரதராஜன் (72). இவருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

    தனது மனைவி தனலட்சுமி இறந்துவிட்ட நிலையில் சுல்தான் பேட்டையில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார். வரதராஜூக்கு மகன், மகள் வழியில் 5 பேரன்கள், 3 பேத்திகள் உள்ளனர்.

    இந்த நிலையில் தங்களது தாத்தாவுக்கு காதணி விழா நடத்த பேரன், பேத்திகள் திட்டமிட்டனர்.

    இதற்காக தங்களது நெருங்கிய உறவினர்களை அழைத்து நல்ல நேரம் பார்த்து தங்களது தாத்தா வசிக்கும் வீட்டில் வைத்து காதணி விழா நடத்தினர். வரதராஜூவை குழந்தை போல பாவித்து மொட்டையடித்து பின்னர் காது குத்தப்பட்டது.

    பின்னர் தாத்தா வரதராஜூக்கு உறவினர்கள், பேரன், பேத்திகள் சீர்கொடுத்து மகிழ்ந்தனர். 72 வயதில் பேரன், பேத்திகளோடு அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்ட வரதராஜூ நெகிழ்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர் கூறும்போது, எனது சிறுவயதில் காது குத்துவதற்காக குலதெய்வகோவிலுக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக காதணி விழாவிற்கு கொண்டு சென்ற தங்க தோடுகள், புது துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது. அதனால் காதணி விழா நின்றுபோனது.

    இப்போது என் பேரன், பேத்திகள் இந்த விழாவை நடத்தியது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    தாத்தாவுக்கு காது குத்தியது குறித்து பேரன், பேத்திகள் கூறுகையில், எங்கள் தாத்தாவின் சிறு வயதில் நிறைவேறாமல் போன ஆசையை தற்போது நாங்கள் செய்துள்ளோம். இதன்மூலம் அவரது ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    72 வயதான தாத்தாவுக்கு பேரன், பேத்திகள் காதணி விழா நிகழ்ச்சி நடத்தியது அப்பகுதி மக்களிடம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தந்தையின் சிறுவயதில் நிறைவேறாத ஆசையை மகன்கள் நிறைவேற்றி வைத்தனர்.
    • காதணி விழாவில் 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜம்படை கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டையன் மகன் ஏழுமலை(வயது 50). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு சங்கீதா(45) என்ற மனைவியும், வேடியப்பன்(22), மணி(20) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    ஏழை குடும்பத்தில் பிறந்த ஏழுமலைக்கு சிறு வயதில் குடும்ப ஏழ்மையின் காரணமாக அவரது பெற்றோர் அவருக்கு மொட்டை அடித்து காது குத்தாமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஆசையை அவர் தனது மகன்கள் மற்றும் உறவினர்களிடம் கூறி வேதனையுற்றார். இதை கேட்ட அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் ஏழுமலையின் சிறுவயது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தனர்.

    அதன்படி ஜம்படை கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் தனது மகன்கள் மற்றும் உறவினர்கள் சூழ்ந்து நிற்க ஏழுமலைக்கு மாமா மடியில் அமர்ந்து மொட்டை அடித்து காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.

    ×