search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சள் நீராட்டு விழாவிற்கு கன்டெய்னர் லாரியில் சீர்வரிசை கொண்டு வந்த தாய்மாமன்
    X

    கண்டெய்னர் லாரியில் எடுத்துவரப்பட்ட சீர்வரிசைகளை படத்தில் காணலாம்.

    மஞ்சள் நீராட்டு விழாவிற்கு கன்டெய்னர் லாரியில் சீர்வரிசை கொண்டு வந்த தாய்மாமன்

    • 259 தட்டுகளில் பல்வேறு சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
    • லாரிக்கு முன்புறம் 2 மாட்டு வண்டிகள், 2 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி சென்றன.

    சேலம் :

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வகுமார்-ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகள் அர்ச்சிதாவின் மஞ்சள் நீராட்டு விழா நேற்று குஞ்சாண்டியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு அர்ச்சிதாவின் தாய் மாமனான அருண்பிரசாத் மேச்சேரி அருகே உள்ள மூர்த்திப்பட்டியில் இருந்து சீர்வரிசைகளை கன்டெய்னர் லாரியில் ஊர்வலமாக கொண்டு வந்தார்.

    லாரியில் பழம் வகைகள், பூ வகைகள், தேங்காய், வாழைப்பழம் உள்பட பல்வேறு சீர்வரிசைகளை 259 தட்டுகளில் வைத்து லாரிக்கு முன்புறம் 2 மாட்டு வண்டிகள், 2 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி சென்றன. அதிலும் சீர்வரிசைகளை எடுத்து ஊர்வலமாக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும் திருமண மண்டபத்திற்கு சுமார் 2½ மணி நேரத்தில் வந்து சேர்ந்தனர். இந்த ஊர்வலத்தின் போது செண்டை மேளம் முழங்க பட்டாசுகள் வெடித்து சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. மேலும் 19 கார்கள், 75 மோட்டார் சைக்கிள்களில் குஞ்சாண்டியூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு வந்து சீர்வரிசைகளை வழங்கினார்.

    தாய் மாமன் அருண்பிரசாத்தின் செயல்பாட்டை சதாசிவம் எம்.எல்.ஏ. நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    Next Story
    ×