search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாக்கிய பெண்"

    • இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் கடந்த 2 ஆண்டுகளாக சீட்டு போட்டு வருகிறார்.
    • இது குறித்து இளம்பெண் சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி விட்டது.

    இவர் கூலி வேலை செய்து வருகிறார். இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் கடந்த 2 ஆண்டுகளாக சீட்டு போட்டு வருகிறார்.

    இதனால் இளம்பெண் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அந்த பெண்ணின் கணவருக்கும் இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணின் கணவரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. அவர் தனது கணவரை கண்டித்தார். ஆனாலும் அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

    இது அந்த பெண்ணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் இளம்பெண் சீட்டுக்கு கட்டிய ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுக்ாமல் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இளம் பெண்ணை தொடர்பு கொண்ட பெண், நீ கேட்ட சீட்டு பணத்தை தருகிறேன். வீட்டில் வந்து வாங்கி கொள் என கூறி அழைத்தார்.

    பணம் வாங்கும் ஆசையில் இளம்பெண்ணும் அங்கு சென்றார். அங்கு சென்றதும், அவர் இளம்பெண்ணிடம் தனது கணவருடனான கள்ளக்கா தலை கைவிடுமாறு கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பெண், இளம்பெண்ணை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து இளம்பெண் சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கணவருடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்து தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முருகேசன் நதியாவுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்து விட்டார்.
    • ரேஸ்கோர்ஸ் போலீசார் நதியா மற்றும் அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் அம்மன் குளத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது42). தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்.

    இவருக்கு நதியா(37) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில், கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபா டுஏற்பட்டது. இதன் காரணமாக முருகேசன் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நதியா தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். அதற்கு முருகேசன் மறுப்பு தெரிவித்து விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த நதியா தனது மகனை அழைத்து கொண்டு நேற்று முன்தினம் முருகேசன் வீட்டுக்கு சென்றார். அவரை தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்தாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நதியா தனது மகனுடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் முருகேசனை தாக்கினர்.

    பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து சென்றனர். தாக்குதலில் காயமடைந்த முருகேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முருகேசன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சேர்ந்து வாழ மறுத்த கணவரை தாக்கிய மனைவி நதியா மற்றும் அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×