search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கணவரை மகனுடன் சேர்ந்து தாக்கிய பெண்
    X

    கோவையில் கணவரை மகனுடன் சேர்ந்து தாக்கிய பெண்

    • முருகேசன் நதியாவுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்து விட்டார்.
    • ரேஸ்கோர்ஸ் போலீசார் நதியா மற்றும் அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் அம்மன் குளத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது42). தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்.

    இவருக்கு நதியா(37) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில், கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபா டுஏற்பட்டது. இதன் காரணமாக முருகேசன் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நதியா தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். அதற்கு முருகேசன் மறுப்பு தெரிவித்து விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த நதியா தனது மகனை அழைத்து கொண்டு நேற்று முன்தினம் முருகேசன் வீட்டுக்கு சென்றார். அவரை தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்தாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நதியா தனது மகனுடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் முருகேசனை தாக்கினர்.

    பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து சென்றனர். தாக்குதலில் காயமடைந்த முருகேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முருகேசன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சேர்ந்து வாழ மறுத்த கணவரை தாக்கிய மனைவி நதியா மற்றும் அவரது மகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×