search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் தலைவாஸ் கபடி"

    • தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்த மாசானமுத்து இடம் பெற்றுள்ளார்.
    • பெற்றோருக்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்தேன்.

    சென்னை:

    10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இதன் 4-வது சுற்று போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் அணியில் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்த மாசானமுத்து இடம் பெற்றுள்ளார்.

    இதற்கிடையே தூத்துக்குடியில் பெய்த மழை-வெள்ளத்தில் மாசானமுத்துவின் வீடு இடிந்துள்ளது.

    இதுகுறித்து மாசான முத்து கூறும்போது, "வெள்ளத்தில் சிக்கி எனது வீடு இடிந்துள்ளது. நான் விளையாடும் போட்டியை பார்ப்பதற்காக பெற்றோருக்கு டிக்கெட் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் வெள்ளத்தில் வீடு இடிந்து விட்டதால் அவர்களால் சென்னைக்கு வர முடியாத சூழல் உள்ளது" என்றார்.

    ×