search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அளுநர்"

    • ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து.
    • கவர்னர் ஆர்.என். ரவி டெல்லியில் ஒரு வாரம் தங்கியிருந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்குமிடையே அவ்வபோது கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. செந்தில் பாலாஜி விவகாரத்திலும் கருத்து வேறுபாடு தொடர்ந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா வின் தலையீட்டால் பிரச்சனை தணிந்தது.

    இதற்கிடையே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    இதனால், ஆளுநர் ஆர்.என். ரவி, அ.தி.மு.க.வின் 2 முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்ற நினைக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். மேலும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்றார்.

    இந்நிலையில், இதுபோன்ற சூழலில் ஆளுநர் ஆர்.என். ரவி நேற்றிரவு டெல்லி சென்றுள்ளார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ×