search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Governor"

    • இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. மதசார்பற்ற நாடு. ராமரை வைத்து அரசியல் செய்ய கூடாது.
    • தமிழக கவர்னர் அவர் வேலையை பார்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக உயர் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசியதாவது:-

    இந்திய அளவில் உள்ள மாநிலங்களில் நம்பர் ஒன் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். திராவிட இயக்கத்தை கட்டி காக்க அவர் பின்னால் நாம் அணிவகுக்க வேண்டும்

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இலவச பஸ், மகளிர் உரிமை தொகை என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிதான் புதுவையிலும் வர வேண்டும் என்பது எங்களது எண்ணம்.

    புதுவை முதலமைச்சர் ரங்கசாமி சொல்வார் ஆனால் செய்ய மாட்டார். புதுவையில் நடக்கின்ற ஆட்சிக்கு ஒரு கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லை.

    தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வரும் மு.க.ஸ்டாலினை விமர்சிக்க அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த மலை இல்லை எந்த மலை வந்தாலும் மு.க.ஸ்டாலினை ஒன்றும் செய்ய முடியாது.

    இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு. மதசார்பற்ற நாடு. ராமரை வைத்து அரசியல் செய்ய கூடாது.

    தமிழக கவர்னர் அவர் வேலையை பார்க்க வேண்டும். எங்களுக்கு மத்திய அரசை கண்டு எந்த பயமும் இல்லை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ. எதுவாக இருந்தாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம்.

    தமிழகம், புதுவையில் ஒரு காலமும் தாமரை மலராது. புதுவையிலும் தி.மு.க. ஆட்சி வர வேண்டும்.காங்கிரஸ் நம்முடன் இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்லவில்லை. கொஞ்சமாவது உழைக்க வேண்டும். ஈரோடு தேர்தலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைத்தார்.

    புதுவையில் திராவிட இயக்கத்தின் ஆட்சி விரைவில் அமையும். நாராயணசாமி கோபித்து கொள்ள கூடாது.

    சீட்டு வாங்க மட்டுமே காங்கிரஸ் கட்சியை நடத்து கின்றனர். அதனால் என்ன பிரயோசனம்? உழைக்கனும். மக்களுக்கு நல்லது செய்யனும். மக்களுக்காக கட்சி நடத்த வேண்டும். தேர்தல் நடக்கும் போது வருவது. எட்டி பார்ப்பது. சீட்டு கேட்பது. இதனால்தான் மக்கள் மத்தியில் காங்கிரஸ் எடுபடவில்லை. பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் வலிமை இழந்து விட்டது. பல மாநிலங்களிலும் காங்கிரஸ் பலம் குறைந்து விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தில் அரசியல்களம் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும்.
    • கவர்னரை தி.மு.க.வினர் பேசும் முறை சரியல்ல. தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று சவால் விடுத்து வருகின்றனர்.

    கோவை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பாரதியாரின் கனவு இப்போது நனவாகி உள்ளது. இதுவரை யாரும் செல்லாத தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்து உள்ளது. இது அனைவருக்கும் கிடைத்த பெருமை.

    உலக நாடுகள் இந்தியாவை கிண்டல் செய்து வந்த நிலையில், தனித்துவமான நாடாக இந்தியா தற்போது உருவாகி உள்ளது.

    இஸ்ரோ விண்வெளி நிறுவனத்துக்கும், தமிழகத்துக்கும் மிகப்பெரிய பந்தம் உள்ளது. நாகப்பட்டினம் வரவேண்டிய விண்கல ஏவுதளம், தி.மு.க. அமைச்சர் முயற்சி செய்யாததால் ஹரிகோட்டாவிற்கு சென்றது.

    2-வது விண்கல ஏவுதளத்தை குலசேகர பட்டிணத்தில் அமைக்க வேண்டிய கடமை தி.மு.க. அரசிற்கு உள்ளது.

    தமிழகத்தில் பா.ஜ.க.வின் நடைபயணம் குறித்து பொன்முடி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர். அவர்கள் ஏ.சி. அறையில் இருந்து அரசியல் செய்கிறார்கள்.

    23 நாளில் 128 கி.மீ. தொலைவுக்கு நடைபயணம் மேற்கொண்டு உள்ளோம். 234 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும் முதல் கட்சியாக பா.ஜ.க தான் இருக்கும்.

    தமிழகத்தில் அரசியல்களம் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.

    பா.ஜ.க. நடை பயணத்தால் அரசியல் புரட்சி ஏற்பட்டு உள்ளது. எனக்கு நடைபயணத்தின் போது பகவத் கீதையை விட 21 பைபிள், 7 குர்ஆன் புத்தகங்கள் அன்பளிப்பாக வந்தன. அவை தற்போது என் பூஜை அறையில் உள்ளது.

    பா.ஜ.க.வை இந்துத்துவா கட்சி என எத்தனை நாளுக்கு சொல்ல முடியும்? பா.ஜ.க. மீதான பிம்பம் உடைந்து தற்போது அனைவருக்காகவும் உழைக்கும் கட்சியாக உள்ளது.நடைபயணத்தின்போது இஸ்லாமியர், கிறிஸ்துவர்களும் என்னுடன் நடந்து வந்தனர்.

    நீட் மசோதாவில் கவர்னரின் பங்களிப்பு எதுவும் இல்லை. ஜனாதிபதி தான் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும். கவர்னரை தி.மு.க.வினர் பேசும் முறை சரியல்ல. தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று சவால் விடுத்து வருகின்றனர்.

    ஆளுநர் தி.மு.க.வின் சவாலை ஏற்று, சொந்த மாநிலமான பீகாருக்கு வரச்சொன்னால் என்ன செய்யலாம்? வாய் உள்ளது என தி.மு.க.வினர் எல்லாவற்றையும் பேசக்கூடாது.

    கவர்னரை சம்மந்தம் இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு கவர்னரிடம் அதிகாரம் உள்ளது.

    கவர்னருக்கும், அரசுக்கும் இடையேயான தொடர்பு குறித்து தலைமை செயலாளர் பதில் சொல்ல வேண்டும். இதுகுறித்து பதில் சொல்ல தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு என்ன உரிமை உள்ளது?.

    காவிரி பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் தான் காரணம். அதனை இவர் தற்போது இடியாப்ப சிக்கலாக்கி ரசித்து வருகிறார்.

    அனைவருக்கும் சாதி அடையாளம் கொடுப்பது அருவருக்கத்தக்க செயல். ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துவது தி.மு.க.வின் முதல் கடமையாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

    ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எதுவும் நடக்காது. காவல்துறைக்கு தான் சிரமம்.

    அ.தி.மு.க மாநாடு அந்த கட்சிக்கு முக்கியமானது.மாநாடு என்றால் ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுகுறித்து நாம் கருத்து சொல்ல எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து.
    • கவர்னர் ஆர்.என். ரவி டெல்லியில் ஒரு வாரம் தங்கியிருந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்குமிடையே அவ்வபோது கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. செந்தில் பாலாஜி விவகாரத்திலும் கருத்து வேறுபாடு தொடர்ந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா வின் தலையீட்டால் பிரச்சனை தணிந்தது.

    இதற்கிடையே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    இதனால், ஆளுநர் ஆர்.என். ரவி, அ.தி.மு.க.வின் 2 முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்ற நினைக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். மேலும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்றார்.

    இந்நிலையில், இதுபோன்ற சூழலில் ஆளுநர் ஆர்.என். ரவி நேற்றிரவு டெல்லி சென்றுள்ளார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #BanwarilalPurohit #MKStalin #DMK
    சென்னை:

    விடுதலை பத்திரிகை சார்பில் ‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்- பாராட்டும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. விடுதலை பத்திரிகை ஆசிரியரும், திராவிடர் கழக தலைவருமான கி.வீரமணி தலைமை தாங்கினார்.

    விடுதலை பொறுப்பாசிரியர் கலி.பூங்குன்றன் வரவேற்றார். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் (முரசொலி பத்திரிகை), இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் (ஜனசக்தி பத்திரிகை), என்.ராம் (தி இந்து), கே.ஏ.எம்.அபுபக்கர் எம்.எல்.ஏ. (மணிச்சுடர் பத்திரிகை), எம்.எச்.ஜவாஹிருல்லா (மக்கள் உரிமை பத்திரிகை), அ.குமரேசன் (தீக்கதிர் பத்திரிகை), பா.திருமாவேலன் (கலைஞர் தொலைக்காட்சி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால் பாராட்டப்பட்டார்.

    பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-



    எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விளம்பரம் நக்கீரன் கோபாலுக்கு கிடைக்காது. அவர் இந்த கைது நடவடிக்கையை கண்டு பயப்படவில்லை. பொடா, தடாவை பார்த்தவர். ஜெயலலிதாவையே எதிர்த்தவர் அவர். எடப்பாடி பழனிசாமியை பார்த்தா பயந்துவிடுவார்.

    கோட்டையில் இருப்பவர்கள் செய்த ஊழலை நினைத்து பயப்படுகின்றனர். கிண்டியில் உள்ளவரோ நிர்மலா தேவிக்கு பயந்து கொண்டிருக்கிறார். இப்படி நான் சொல்வதால், என் மீதும் வழக்குப்போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

    நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் பெயரும் அடிபட்டது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை வைத்தோம். உடனே கவர்னர் பன்வாரிலால் புரோகித் விசாரணை கமிஷன் வைத்தார். நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு 4 மாத காலம் ஆகிறது. அவருக்கு 8 முறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஏதோ நடந்திருக்கிறது. அந்த உண்மையைத்தான் கோபால் எழுதினார். ஆனால் கவர்னர் விதிகளை மீறி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.



    பா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதித்து, காவல் துறையை கொச்சைப்படுத்தி பேசினார். அவரை கைது செய்ய இந்த அரசுக்கு ஏன் தைரியம் இல்லை. பெரியார் சிலையை அடித்து உடையுங்கள் என்று பேசிய எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறார். பெண் நிருபர்களை கொச்சைப்படுத்திய பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.வி.சேகரையும் கைது செய்யவில்லை. காரணம், ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடும் என்று பயந்து கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

    கவர்னரை உடனடியாக பதவி இறக்கம் செய்ய வேண்டும் என்று இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அவர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #BanwarilalPurohit #MKStalin #DMK
    தமிழக ஆளுநரின் ஆய்வுக்கு மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை:

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  நாமக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பரமத்தி சாலை வழியாக அண்ணாநகருக்கு காரில் சென்றார். 

    அப்போது கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகே கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தின்போது ஆளுநர் சென்ற கார் மீது கருப்புக்கொடி, பலூன்களை வீசப்பட்டதாக புகார் எழுந்தது.



    இதையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கைது செய்தனர். இதனிடையே, தி.மு.க.வினரை போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் கருப்பு கொடி ஏந்தி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று பேரணியாக சென்றனர். அவர்கள் ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

    அதில், ‘மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், பல்வேறு மாவட்டங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்கவும் ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு. மாநில அரசியலைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் ஆளுநருக்கு உள்ளது. தமிழக அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை. 

    ஆளுநரின் நடவடிக்கையை விமர்சிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆளுநரின் நடவடிக்கையை விமர்சிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. மக்களின் நலனுக்காக, வரும் மாதங்களிலும் மக்கள் நலதிட்டங்ளை ஆய்வு செய்யும் பணி தொடரும்’, என கூறப்பட்டுள்ளது.
    2 நாட்கள் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். #BanwarilalPurohit
    சென்னை:

    2 நாட்கள் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். மாநாட்டை தொடர்ந்து அவர் பிரதமரை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

    டெல்லியில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.

    இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு, பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி, வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்த மாநாடு முடிந்த பின்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகளை சந்தித்து பேச கவர்னர் பன்வாரிலால் புரோகித் திட்டமிட்டு இருக்கிறார்.

    முன்னதாக நேற்று முன்தினம் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிடம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொலைபேசியில் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை திரும்பி கொண்டிருந்தாலும், அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது. அதேபோல சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அங்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு இருக் கிறது.

    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் அங்கு நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விரிவாக ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.   #BanwarilalPurohit

    ×