என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தனுஷ்கோடி"
- ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.
- போலீசார், சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்த வண்ணம் இருந்தனர்.
ராமேசுவரம் :
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் இன்னும் சில நாட்களுக்கு பலத்த சூறாவளி காற்று வீசும், கடல் சீற்றமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. இதனால் ராமேசுவரம் பகுதியில் 4-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டது. பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடல் சீற்றத்தால் தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன் பிடி துறைமுகத்தில் மோதி கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு சீறி எழுந்து வருகின்றன.
பாதுகாப்பு கருதி துறைமுக பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல போலீசாரால் தடை விதிக்கப்பட்டு அங்கு தடுப்பு கம்புகளும் வைக்கப்பட்டு உள்ளன.
ஆனால் நேற்று வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த தடுப்புகளை அகற்றிவிட்டு துறைமுக பகுதிக்குள் உள்ளே சென்று கடல் அலை சீறி எழுவதை மிக அருகில் நின்று செல்பி எடுத்தபடி ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்தனர். போலீசார், சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்த வண்ணம் இருந்தனர்.
- தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
- அரிச்சல்முனை பகுதியில் பொதுமக்கள் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன் இறங்கு தளத்தை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு, காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதுபோல் அரிச்சல்முனை பகுதியில் பொதுமக்கள் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்புகளுக்கு அருகே நின்று சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றனர்.
வங்க கடல் பகுதியில் தென்மேற்கு பருவக் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தீவுப்பகுதியான ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன.
ஆங்காங்கே மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் ரெயில்களும் பாம்பன் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. காற்றின் வேகம் குறைந்த பின்னர் மெதுவாக இயக்கப்பட்டன.
4-வது நாளாக இன்றும் சூறாவளியின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் சாலைகள் மணலால் மூடப்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் கடலில் இறங்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இன்றும் பாம்பன் பாலத்தில் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்