search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை கைது"

    • மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டு தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
    • மாணவியின் தாய் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பெற்ற 2 மகளிடம் தந்தை ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவத்தில் முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதே போல் மற்றொரு சம்பவம் புதுவையில் நடந்துள்ளது. புதுவை முதலியார்பேட்டை போலீஸ் நிலைய எல்கைக்குட்டபட்ட பகுதியை சேர்ந்தவர் 45 வயது கட்டிட தொழிலாளி. இவருக்கு 40 வயது மனைவி மற்றும் 12 வயது மகள் உள்பட 2 மகள்கள் உள்ளனர். இந்த மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி வீட்டில் குளித்துக்கொண்டிருந்தார். இதனை அந்த மாணவியின் தந்தையான கட்டிட தொழிலாளி எட்டிப்பார்த்துள்ளார். மேலும் அந்த மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் தாய் தனது கணவரிடம் கண்டித்துள்ளார். ஆனால் அவர் தவறை திருத்திக்கொள்ளவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து அந்த மாணவியின் தாய் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனது ஒரு வயது மகனை மடியில் கிடத்தி பீர் ஊட்டிய வீடியோ வைரலாக பரவியதை அடுத்து தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
    கொழும்பு:

    இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள மீகலேவா கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு பீர் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், சுற்றிலும் மூன்று பேர் அமர்ந்திருக்க மகனை மடியில் கிடத்திய அந்த நபர், பீர் பாட்டிலில் இருந்த பீரை இரண்டு முறை சிறுவனுக்கு ஊட்டினார்.

    இந்த வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். மேலும், அந்த குழந்தையை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். 
    ×