search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுராதபுரம்"

    தனது ஒரு வயது மகனை மடியில் கிடத்தி பீர் ஊட்டிய வீடியோ வைரலாக பரவியதை அடுத்து தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
    கொழும்பு:

    இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள மீகலேவா கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது மகனுக்கு பீர் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், சுற்றிலும் மூன்று பேர் அமர்ந்திருக்க மகனை மடியில் கிடத்திய அந்த நபர், பீர் பாட்டிலில் இருந்த பீரை இரண்டு முறை சிறுவனுக்கு ஊட்டினார்.

    இந்த வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். மேலும், அந்த குழந்தையை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். 
    ×