search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர்வரத்து"

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையினால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
    களக்காடு:

    கேரளாவில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கேரளாவை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையினால் அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. களக்காடு மலையில் உள்ள தலையணையில் ஏற்கனவே கோடை வெயிலால் தண்ணீர் வற்றி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அங்குள்ள தடுப்பணையை தாண்டி தண்ணீர் ஓடுகிறது. குளிர்ந்த காற்றும் வீசுகிறது.

    இதையடுத்து தலையணைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று நாகர்கோவில், உவரி கேரளா, மார்த்தாண்டம், குலசேகரம், பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். தண்ணீர் அதிகளவில் செல்வதால் தடுப்பணை அருகே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஆற்றின் ஓரமாக நின்று குளித்தனர்.

    இதைத் தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் படி வனசரகர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். சாரல் மழை பெய்து வருவதையடுத்து களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால்வாய், பச்சையாறு, உப்பாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    சாரல் மழை காரணமாக தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    ×