search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎல்"

    • கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது.
    • 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடந்துவருகிறது.

    8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் (12 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (12 புள்ளி), நெல்லை ராயல் கிங்ஸ் (10 புள்ளி), மதுரை பாந்தர்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (4 புள்ளி), சேலம் ஸ்பார்டன்ஸ் (4 புள்ளி), பால்சி திருச்சி (0) அணிகள் வெளியேறின.

    இந்நிலையில், சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள எஸ்.சி.எப். மைதானத்தில் இன்று அரங்கேறும் முதல் தகுதிச்சுற்றில் லைகா கோவை கிங்சும், திண்டுக்கல் டிராகன்சும் மோதின.

    டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது.

    அந்த அணியின் சச்சின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். முகிலேஷ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சச்சின் 46 பந்தில் 70 ரன்னும், முகிலேஷ் 27 பந்தில் 44 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு சச்சின், முகிலேஷ் ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. சுரேஷ்குமார் 26 ரன்னும், சுஜய் 12 ரன்னும் எடுத்தனர். திண்டுக்கல் அணியின் சுபோத் பதி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக சரத் குமார் அரை சதம் அடித்து 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, பூபதி குமார் 25 ரன்களிலும், பாபா இந்திரஜித் 21 ரன்களிலும், சுபோத் பாதி 14 ரன்களிலும், சிவம் சிங் 10 ரன்களிலும், மதிவாணன் 9 ரன்களிலும், ஆதித்யா கணேஷ் 5 ரன்களிலும், வருண் சக்ரவர்த்தி 4 ரன்களிலும் சரவண குமார் மற்றுமு் கிஷோர் தலா 2 ரன்களிலும், விமல் குமார் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்ட முடியாமல் திண்டுக்கல் அணி தோல்வியடைந்தது.

    இதனால், லைகா கோவை கிங்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

    இந்த வெற்றின் மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குள் லைகா கோவை கிங்ஸ் நுழைந்தது.

    https://www.dailythanthi.com/Sports/Cricket/lyca-kovai-kings-won-by-30-runs-against-dindigul-dragons-1002903

    • திருச்சி அணியின் ஜாபர் ஜமால் தனி ஆளாகப் போராடி அரை சதமடித்தார்.
    • மழை மீண்டும் குறுக்கிட்டதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இன்று நடைபெற்று வரும் கடைசி லீக் போட்டியில் திருச்சி - நெல்லை அணிகள் மோதியுள்ளன. கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் , மதுரை ஆகிய 4 அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு ஏற்கனேவே தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்கத்தில் ராஜ்குமார் 2 ரன்களிலும், சரண் ரன் பூஜ்ஜியம் ரன்னிலும் அவுட்டாகினர். திருச்சி அணி 6 ஓவர்களில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. மழை குறுக்கிட்டதால் போட்டி சிறது தடைபட்டு 19 ஓவராக குறைக்கப்பட்டது.

    இதையடுத்து, திருச்சி அணியின் ஜாபர் ஜமால் தனி ஆளாகப் போராடி அரை சதமடித்தார்.

    அவர் 53 பந்தில் 8 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 96 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், திருச்சி அணி 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்துள்ளது.

    இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது.

    அப்போது மழை குறிக்கிட்டதால் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதன்படி, நெல்லை அணி 16 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.

    மழை மீண்டும் குறுக்கிட்டதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை நின்ற பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி ஆட்டம் சற்று தாமதமாகவே தொடங்கியது. இதில், அதிகபட்சமாக அஜித்தேஷ் குருசுவாமி அரை சதம் அடித்து 56 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து நிதிஷ் ராஜகோபால் 35 ரன்கள் எடுத்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில் ,11.5 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து நெல்லை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

    • இன்று நடக்க உள்ள கடைசி லீக் போட்டியில் திருச்சி - நெல்லை அணிகள் மோதுகின்றன.
    • டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது.

    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இன்று நடக்க உள்ள கடைசி லீக் போட்டியில் திருச்சி - நெல்லை அணிகள் மோதுகின்றன.

    கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் , மதுரை ஆகிய 4 அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு ஏற்கனேவே தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.
    • திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நெல்லையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பிளே ஆப் சுற்றுக்கு சிக்கலின்றி முன்னேறுவதற்கு இப்போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பேட்டிங் செய்த மதுரை அணி கவனமாக ஆடியது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்கள் ஹரி நிசாந்த் 34 ரன்களும், சுரேஷ் லோகேஷ்வர் 44 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.

    ஆதித்யாவும் தன் பங்கிற்கு 37 ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. திருப்பூர் அணி தரப்பில் திரிலோக் நாக் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.

    இதில், துஷர் ரஹேஜா அரை சதம் அடித்து 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, விஜய் சங்கர் 28 ரன்களிலும், விஷால் வைத்யா 21 ரன்களிலும், ராஜேந்திர விவேக் மற்றும் பால்சந்தர் அனிருத் தலா 11 ரன்களிலும், சதுர்வேதி ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக விளையாடிய புவனேஸ்வரன் 18 ரன்களும், கோகுல்மூர்த்தி ஒரு ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

    இதனால், திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    இந்த போட்டியின் வெற்றியின் மூலம் மதுரை பாந்தர்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    • துவக்க வீரர்கள் ஹரி நிசாந்த் 34 ரன்களும், சுரேஷ் லோகேஷ்வர் 44 ரன்களும் சேர்த்தனர்.
    • திருப்பூர் அணி தரப்பில் திரிலோக் நாக் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நெல்லையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பிளே ஆப் சுற்றுக்கு சிக்கலின்றி முன்னேறுவதற்கு இப்போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பேட்டிங் செய்த மதுரை அணி கவனமாக ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்கள் ஹரி நிசாந்த் 34 ரன்களும், சுரேஷ் லோகேஷ்வர் 44 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். ஆதித்யாவும் தன் பங்கிற்கு 37 ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினார்.

    இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. திருப்பூர் அணி தரப்பில் திரிலோக் நாக் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.

    • அதிரடியாக ஆடிய சன்னி சந்து 39 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசினார்.
    • திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நெல்லையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த சேலம் அணியின் கவுசிக் காந்தி 7 ரன்னில் வெளியேறினார். அரவிந்த் 26 ரன்கள், கவின் 25 ரன்கள், மோகித் ஹரிஹரன் 21 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய சன்னி சந்து 39 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசி நம்பிக்கை அளித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் சேலம் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது.

    திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • 20 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது.

    7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

    இன்றைய 25-வது லீக் போட்டி 7.15 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் திருச்சி- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இதில், தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த மதன் குமார் மற்றும் சந்தோஷ் ஷிவ் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இருவரும் முறையே 5 மற்றும் 16 ரன்கள் எடுத்தனர்.

    தொடர்ந்து, பாபா அபரஜித் 10 ரன்களிலும், சஞ்சய் யாதவ் 20 ரன்களிலும், ஜித்தேந்திர குமார் 13 ரன்களிலும், ஹரிஷ் குமார் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    18வது ஓவரில் சிபி மற்றும் சசி தேவ் ஆகியோர் களத்தில் இருந்தனர். இதில் சிபி 31 ரன்களில் ரன் அவுட்டானார். 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், 20 ஓவர் முடிவில் சேப்பாக் அணி 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது.

    • கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது.
    • 18 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து மதுரை பாந்தர்ஸ் தோல்வி.

    7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

    இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கிறது. அதன்படி, இன்று மாலை 3.15 மணிக்கு நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுஜய் மற்றும் சுரேஷ் குமார் பேட்டிங் செய்தனர். சுஜய் 4 ரன்களில் ஆட்டமிழக்க, சுரேஷ் குமார் அரை சதம் அடித்து 29 பந்துகளில் 64 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    இதேபோல், சச்சின் 51 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ஷாருக்கான் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகிலேஷ் 11 ரன்களும், ராம் அரவிந்த் மற்றும் முகமது தலா ஒரு ரன் எடுத்து அவுட்டாகினர்.

    இதன்மூலம், கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. அடுத்ததாக, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது.

    இந்த போட்டியில் அதிகபட்சமாக சுரேஷ் லோகேஷ்வர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஹரி நிஷாந்த் 33 ரன்களிலும், ஸ்ரீ அபிஷேக் 17 ரன்களிலும், தீபன் லிங்கேஷ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 14 ரன்களிலும், கிரிஷ் ஜெயின் 11 ரன்களிலும், ஸ்வாப்நில் சிங் 10 ரன்களிலும், ஜகதீசன் கவுஷிக் 9 ரன்களிலம், சரவணன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    குர்ஜப்னீத் சிங் 5 ரன்கள் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து மதுரை பாந்தர்ஸ் தோல்வியை சந்தித்தது.

    இதனால், 44 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணிழை வீழ்த்தி கோவை கிங்ஸ் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது.

    • டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • சுரேஷ் குமார் அரை சதம் அடித்து 29 பந்துகளில் 64 ரன்களை குவித்தார்.

    7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

    இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கிறது. அதன்படி, இன்று மாலை 3.15 மணிக்கு நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதனால், கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுஜய் மற்றும் சுரேஷ் குமார் பேட்டிங் செய்தனர். சுஜய் 4 ரன்களில் ஆட்டமிழக்க, சுரேஷ் குமார் அரை சதம் அடித்து 29 பந்துகளில் 64 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    இதேபோல், சச்சின் 51 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ஷாருக்கான் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    முகிலேஷ் 11 ரன்களும், ராம் அரவிந்த் மற்றும் முகமது தலா ஒரு ரன் எடுத்து அவுட்டாகினர்.

    இதன்மூலம், கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது.

    அடுத்ததாக, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்க உள்ளது.

    • டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • நெல்லை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.

    7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கிறது.

    இன்று மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இதில், சேலம் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

    இந்நிலையில், 23வது லீக் ஆட்டம் இன்று மாலை 7.15 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதனால், நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் அருண் கார்த்திக், ஸ்ரீரெஞ்சன் ஆகியோர் களம் இறங்கினர். இதில், ஸ்ரீ நெரஞ்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, ராஜகோபால் 13 ரன்கள், அஜிதேஷ் குருசாமி 17 ரன்கள், ரித்தக் ஈஸ்வரன் 18 ரன்கள், அருண் கார்த்திக் 39 ரன்கள், தோனு யாதவ் 2 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில் நெல்லை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. இதனால், 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடி வருகிறது.

    • பவர் பிளேவில் வேகமெடுத்த திருப்பூர் தமிழன்ஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை குவித்தது.
    • சீரான இடைவெளியில் விக்கெட்டை இழக்க அதன்பின் திருப்பூர் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கிறது.

    இன்று மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இந்த போட்டியில் முதலாவதாக அரவிந்த் மற்றும் கவுஷிக் காந்தி பேட்டிங் செய்தனர். இதில், கவுஷிக் முதல் பந்துலேயே ஆட்டமிழந்தார். இதேபோல், அரவிந்த் ஒரு ரன்னில் அவுட்டானார்.

    இவர்களை தொடர்ந்து ஆர்.கவின் 19 ரன்களும், மோகித் ஹரிஹரன் 3 ரன்களும், அபிஷேக் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, சன்னி சந்து அரை சதம் அடித்து 61 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். முகமது அத்னான் கான் 15 ரன்களும், அபிஷேக் தன்வர் 17 ரன்களும் ஆகாஷ் சும்ரா 7 ரன்களு் எடுத்தனர். இறுதியாக ஜகநாத் ஸ்ரீநிவாஸ் 11 ரன்களுடன் அவுட்டானார்.

    செல்வா குமரன் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில், இந்த போட்டியின் முதல் பாதியின் முடிவில் சேலம் அணி 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. இதைதொடர்ந்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என் இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.

    இதில், பவர் பிளேவில் வேகமெடுத்த திருப்பூர் தமிழன்ஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை குவித்தது. இதனால் எளிதில் வெற்றி இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டை சாய் கிஷோர் (26), விஜய் சங்கர் (12), பால்சந்தர் அனிருத் (22) இழக்க அதன்பின் திருப்பூர் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

    இந்நிலையில், கடைசி ஓவரில் 6 பந்துக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. இதில், சன்னி சந்து வீசிய கடைசி ஓவரில் திருப்பூர் அணியால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    இதில் திருப்பூர் தமிழன்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    • ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் சேலம் அணி 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது.
    • சன்னி சந்து அரை சதம் அடித்து 61 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

    7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கிறது.

    இன்று மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

    இந்த போட்டியில் முதலாவதாக அரவிந்த் மற்றும் கவுஷிக் காந்தி பேட்டிங் செய்தனர். இதில், கவுஷிக் முதல் பந்துலேயே ஆட்டமிழந்தார். இதேபோல், அரவிந்த் ஒரு ரன்னில் அவுட்டானார்.

    இவர்களை தொடர்ந்து ஆர்.கவின் 19 ரன்களும், மோகித் ஹரிஹரன் 3 ரன்களும், அபிஷேக் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து, சன்னி சந்து அரை சதம் அடித்து 61 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். முகமது அத்னான் கான் 15 ரன்களும், அபிஷேக் தன்வர் 17 ரன்களும் ஆகாஷ் சும்ரா 7 ரன்களு் எடுத்தனர்.

    இறுதியாக ஜகநாத் ஸ்ரீநிவாஸ் 11 ரன்களுடன் அவுட்டானார். செல்வா குமரன் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், இந்த போட்டியின் முதல் பாதியின் முடிவில் சேலம் அணி 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது.

    இதைதொடர்ந்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என் இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்க உள்ளது.

    ×